Chocks: தாய் மொழி தினம்

Monday, April 12, 2021

தாய் மொழி தினம்

தாய் மொழி தினம்

குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
# 1947 இல் இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற போது, பாகிஸ்தானின் (மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தான்) மொத்த மக்கள் தொகை சுமார் 7 கோடி ஆக இருந்தது.

# 7 கோடியில் 3.6 கோடி மக்கள் கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய வங்கதேசம்) வசித்து வந்தனர்.

# 1948 இல் பாகிஸ்தான் அரசு உருதுவை பாகிஸ்தானின் ஒரே தேசிய மொழியாக அறிவித்தது. 

கிழக்கு பாகிஸ்தானில் தாய் மொழியாக வங்காளம் பேசப்பட்டு வந்ததால், கிழக்கு பாகிஸ்தான் மக்கள் கட்டாய உருதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

# உருது தவிர, வங்காளமும் தேசிய மொழிகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கிழக்கு பாகிஸ்தான் மக்கள் கோரினர்.

# 23 பிப்ரவரி 1948 அன்று பாகிஸ்தான் அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்கள் உருது அல்லது ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும் என முடிவெடுத்தனர்.

# இந்த முடிவை எதிர்த்து கிழக்கு பாகிஸ்தான் சபை உறுப்பினர் திரேந்திரநாத் தத்தா "வங்காளி மொழியையும் சேர்க்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

# பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான், கிழக்கு பாகிஸ்தான் முதல்வர் க்வாஜா நசீமுதினின் உதவியுடன் வங்காள மொழிக்கு ஆதரவான தீர்மானத்தை தோற்கடித்த பிறகு, கிழக்கு பாகிஸ்தான் மக்கள் தங்களின் தாய் மொழியான வங்காளத்தை மீட்க போராட்டம் நடத்தினர்.

# 21-22 பிப்ரவரி 1952 அன்று உருது மொழி திணிப்பை எதிர்த்து டாக்காவில் திரளாக மக்கள் நடத்திய போராட்டத்தில் ரபீக் உதீன் அகமது, ஷபியூர் ரஹ்மான், அப்துல் ஜப்பார், அப்துல் பரகத், அப்துஸ் சலாம் ஆகியோர் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு தங்கள் உயிரை தியாகம் செய்தனர்.

# மொழிப்போர் தியாகிகள் உயிரிழந்த அதே இடத்தில் 1963 இல் நிரந்தரச் சின்னம் நிறுவப்பட்டது. 

கிழக்கு பாகிஸ்தான் மக்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, 16 பிப்ரவரி 1956 அன்று பாகிஸ்தான் அரசு மொழிகளில் ஒன்றாக வங்காளியையும் சேர்த்தது.

பாகிஸ்தானின் மொழி ஆதிக்கத்திற்கு எதிராக கிழக்கு பாகிஸ்தானில் நடந்த மொழி போராட்டம் வெற்றி பெற்றதும், அங்கு உள்ள மக்களின் எழுச்சி தேச விடுதலைப் போராட்டத்தை நோக்கி நகர்த்தியது.

# 1971 இல் இல் இந்திய பிரதமர் இந்திரா காந்தி உட்பட பலதரப்பட்ட சர்வதேச உதவிகளை பெற்று, கிழக்கு பாகிஸ்தான் "வங்கதேசம்" என்ற தனி நாடாக மாறியது.

# வங்காள மொழிப்போர் தியாகிகளை நினைவுகூரும் விதமாக, 21 பிப்ரவரி 1999ஆம் ஆண்டு முதல் UNESCO அமைப்பு உலக தாய் மொழி தினமாக கொண்டாடுகிறது.

பின் குறிப்பு 

1. ரபீக் உதீன் அகமது (30 அக்டோபர் 1926 - 21 பிப்ரவரி 1952)

2. ஷபியூர் ரஹ்மான் (24 ஜனவரி 1918 - 22 பிப்ரவரி 1952)

3. அப்துல் ஜப்பார் (11 அக்டோபர் 1919 - 21 பிப்ரவரி 1952)

4. அப்துல் பரகத் (16 ஜூன் 1927 - 21 பிப்ரவரி 1952)

5. அப்துஸ் சலாம் (27 நவம்பர் 1925 - 7 ஏப்ரல் 1952) (21 பிப்ரவரி சூட்டில் காயப்பட்டு 7 ஏப்ரல் அன்று மறைந்தார்)

விவரணை 

International Mother Language Day


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

9/11 தாக்குதலின் போது காணாமல் போன சினேகா ஆன் பிலிப்

9/11 தாக்குதலின் போது காணாமல் போன சினேகா ஆன் பிலிப் குறிப்பு =  இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்த...