Chocks: August 2022

Friday, August 26, 2022

இந்து சமய அறநிலையத்துறை

இந்து சமய அறநிலையத்துறை

சுருக்கம்
  1. முகவுரை
  2. மெட்ராஸ் கொடை மற்றும் இறையுறு சொத்து ஒழுங்குமுறை, 1817
  3. சமயநிலை கொடை சட்டம், 1863
  4. அறநிலைய கொடை சட்டம், 1890
  5. உரிமையியல் நெறிமுறை தொகுப்பு சட்டம், 1908
  6. அறநிலைய கொடை மற்றும் சமய அறக்கட்டளை, 1920
  7. நீதிக்கட்சி அமைத்த இந்து சமய அறநிலைய வாரியம், 1927
  8. இதர சட்டங்கள்
  9. இந்து சமய மற்றும் அறநிலைய கொடை சட்டம், 1951
  10. தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய கொடை சட்டம், 1959
  11. அறங்காவலர் பணி நியமனம்
  12. கோவில் பணியாளர்களுக்கு ஊதியம் 
  13. கோவில் நுழைவுச் சட்டம், 1939 மற்றும் 1947
  14. இந்து சமய அறநிலைய ஆணையம்
  15. இந்து சமய நிறுவனங்கள்
  16. பக்தர்கள் நன்கொடைகள்
  17. வக்பு வாரியம் மற்றும் அறநிலையத்துறை வேறுபாடு
  18. திராவிடக் கட்சிகளின் குறிப்பிடத்தக்க அறப்பணிகள்
  19. முடிவுரை
  20. விவரணைகள்
குறிப்பு = சொல்லிலே தேன் தடவி சொல்லாமல் விஷம் தடவி பேசும் ஆன்மீகவாதிகள் சிலர் கோவில்களை அரசிடம் இருந்து விடுவிப்பதற்கு தீவிர பிரச்சாரம் செய்துவரும் வேளையில் அறநிலையத்துறை அரசிடம் மட்டுமே இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர இக்கட்டுரையை படித்து பகிர வேண்டுகிறேன். 
முகவுரை

தென்னிந்தியாவின் பெரும் கோவில்கள் சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள், மைசூரார்கள், திருவிதாங்கூரார்கள், கொச்சினியர்கள் மற்றும் பல மன்னர்களால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டன. கோவில்களுக்கு சொந்தமாக பல சொத்துக்கள் இருப்பதால் பழங்காலத்திலிருந்தே மன்னர்கள் அவற்றின் பராமரிப்பைக் கவனித்து வந்தனர்.

பிரிட்டிஷ் இந்தியா மன்னராட்சியை அகற்றிய பிறகு பல கோவில்கள் ஆதிக்க சாதியினரால் கையகப்படுத்தப்பட்டன. முறையான பரிவர்த்தனைகள் இல்லாமல் கோவில் சொத்துக்கள் தனியாருக்கு மாற்றப்பட்டது. எனவே, கோவில் சொத்துக்கள் தவறாகக் கையாளப்படுவதாகவும், விற்கப்படுவதாகவும், பயன்படுத்தப்படுவதாகவும் பக்தர்கள் பிரிட்டிஷ் இந்தியாவிடம் பல புகார்களை அளித்தனர். இதன் நேரடி விளைவாக, மோசமான கோவில் நிர்வாகத்தை சரி செய்ய பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் முக்கியமானது கோவில்களை நிர்வகிப்பதற்கென அறநிலையத்துறையை உருவாக்கியதாகும்.
மெட்ராஸ் கொடை மற்றும் இறையுறு சொத்து ஒழுங்குமுறை, 1817

வங்காளம், மெட்ராஸ் மற்றும் பம்பாய் மாகாணங்களில் கோவில் அறநிலைய விதிமுறைகள் முறையே 1810, 1817 மற்றும் 1827 இல் உருவாக்கப்பட்டது. கோவில் சன்னதியில் உள்ள சிலைகள் சட்டப்பூர்வ உரிமை உள்ள ஒரு நபராக கருதப்பட்டது. கோவிலின் நிதி மேலாண்மை உள்ளூர் முகவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 1817 இல் மெட்ராஸ் கொடை மற்றும் இறையுறு சொத்து ஒழுங்குமுறையின் கீழ் கோவில் நிர்வாகங்களை மேற்பார்வையிடவும், கோவில் நிலங்களின் வாடகையை வசூல் செய்யவும், கோவில் விளைபொருட்களை உரிய முறையில் ஒதுக்கீடு செய்யவும், கோவில் கட்டிடங்களை பராமரிக்கவும், கோவில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதை தடுக்கவும் வருவாய் வாரியத்திற்கு பரந்த அதிகாரம் வழங்கப்பட்டது.

சமயநிலை கொடை சட்டம், 1863

1817 சட்டத்திற்கு மாற்றாக இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் "சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் இருந்து அரசு விலகவும், அரசுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை பெறாமல் இருக்கவும்" சமயநிலை கொடை சட்டம், 1863 உருவாக்கப்பட்டது.

அறநிலைக் கொடை சட்டம், 1890

இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் "வறுமையை ஒழித்தல், கல்வியை மேம்படுத்தல், மருத்துவ உதவியை வழங்குதல் அல்லது பொது நலனுக்கான வேறு ஏதேனும் காரணத்தை மேம்படுத்துதல்" என தொண்டு நோக்கங்களுக்காக அறநிலைக் கொடை சட்டம், 1890 உருவாக்கப்பட்டது. இதில் கட்டாய மத போதனை தடுக்கப்பட்டது. 

உரிமையியல் நெறிமுறை தொகுப்பு சட்டம், 1908

இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடிய உரிமையியல் நெறிமுறை தொகுப்பு சட்டம் என்பது "உரிமையியல் வழக்கில் நீதிமன்றங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறையை ஒழுங்குபடுத்தும் சட்டத் தொகுப்பாகும்". 

தொண்டு அல்லது சமய இயல்புடைய பொது நோக்கத்திற்காக நிறுவப்பட்ட வெளிப்படையான அல்லது மறைமுகமான நம்பிக்கை மீறப்பட்டதாகக் கூறப்படும் பட்சத்தில், 1908 உரிமையியல் நெறிமுறை தொகுப்பு சட்டத்தின் 92 வது பிரிவின் கீழ் ஒரு நபருக்கு உரிமைகள் உள்ளன. இதன் மூலம் “எந்த அறங்காவலரையும் நீக்குதல், புதிய அறங்காவலரை நியமித்தல், எந்த ஒரு சொத்தையும் அறங்காவலரிடம் ஒப்படைத்தல், நிதி ஆதாரங்களை இயக்குதல்” உட்பட பற்பல விஷயங்கள் ஆராயப்படுகின்றன.

அறநிலைய கொடை மற்றும் சமய அறக்கட்டளை, 1920

இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் "சமய அறக்கட்டளை நிர்வாகத்தின் மீது கட்டுப்பாட்டை நிறுவுவதற்கும் அறக்கட்டளை நடைமுறைகளை எளிதாக்குவதற்கும்" அறநிலைய கொடை மற்றும் சமய அறக்கட்டளை, 1920 சட்டம் உருவாக்கப்பட்டது. இது சமயம் சார்ந்த அறக்கொடை நோக்கங்களுக்காகவும், அத்தகைய அறக்கட்டளைகளின் அறங்காவலர்களுக்கு வழிகாட்டவும் உருவாக்கப்பட்டது. 1920 இன் அறநிலைய கொடை மற்றும் சமய அறக்கட்டளை 1882 இன் இந்திய அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் இல்லாத பொது அறக்கட்டளைகளுக்குப் பொறுப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக, பொதுமக்களுக்கு உதவுவதற்காக சமய அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.

நீதிக்கட்சி அமைத்த இந்து சமய அறநிலைய வாரியம், 1927

காலங்காலமாக பார்ப்பன சாதியினர் மற்றும் இதர ஆதிக்க சாதியினர் கோவில் அறங்காவலர்களாக கேள்வி கேட்பாரின்றி கோவில் வளங்களை சூறையாடி வந்தனர். மெட்ராஸ் மாகாணத்தில் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி கோவில்களின் நிர்வாக சீர்கேட்டை கண்டு வெகுண்டெழுந்தது. 1920 இல் நீதிக்கட்சி சார்பில் பனகல் அரசர் மெட்ராஸ் மாகாண முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கோவில்களை அரசு கண்காணிப்பின் கீழ் கொண்டுவர முயன்றார். இதற்காக, 1922 இல் இந்து பரிபாலன சட்டத்தை முன்மொழிந்தார். பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் 1925 இல் இந்து பரிபாலன சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தினார். அப்போதைய வலதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி, வைஸ்ராய் லார்ட் இர்வின் பிரபுவிடம் எடுத்துச் சொல்லி இந்த சட்டத்திற்கு ஒப்புதல் பெற்றார். 

இறுதியில், இந்த சட்டத்தின் மூலம் மெட்ராஸ் மாகாணம் முழுமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் 1927 இல் இந்து சமய அறநிலைய வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கோவில்களின் நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் வாரியத்திடம் வழங்கப்பட்டது, நிர்வாகம் சரிவர நடைபெறாத கோவில்களுக்கு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரமும் வாரியத்துக்கு வழங்கப்பட்டது, ஜாதி வேறுபாடின்றி யாரையும் கோயிலின் நிர்வாகத்தில் சேரவும் அதன் வருவாயை நிர்வகிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது, கோவில்கள் அரசுக்கு உட்பட்ட சட்டப்பூர்வ அமைப்பாகக் கருதப்பட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். சுருக்கமாக, இந்து சமய அறநிலையத்துறையின் மூலகர்த்தாவான நீதிக்கட்சியால் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் ஒன்றிய இந்தியாவின் கோவில் நிர்வாக அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதர சட்டங்கள்

1928 இன் 1, 1929 இன் V, 1930 இன் IV, 1931 இன் XI, 1934 இன் XI, 1935 இன் XII, 1938 இன் XX, 1939 இன் XXII, 1939 இன் XXII, 1944 இன் V மற்றும் 1946 இன் X ஆகிய இதர சட்டங்கள் அறநிலையம் சார்ந்து இயற்றப்பட்டன.

இந்து சமய மற்றும் அறநிலைய கொடை சட்டம், 1951

1940 இல் (1939-1946 வரை பிரிட்டிஷ் கவர்னர் ஆட்சி) இந்து சமய அறநிலைய வாரியத்தை சீர்திருத்த ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். இந்து சமய நிறுவனங்களை வாரியத்தின் மூலம் அரசு கண்காணிப்பதை விட அரசே நேரடியாக நிர்வகிப்பது கூடுதல் பலனை தரும் என்று சிறப்பு அதிகாரி பரிந்துரைத்தார். இதன் அடிப்படையில் 1942 இல் ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் ஒரு அலுவல் சாரா குழு, இந்து சமய அறநிலைய வாரியத்தை அரசின் முக்கிய நிர்வாகமாக மாற்றுவது நன்மை பயக்கும் என்று பரிந்துரைத்தது. மேலும் 1950 இல் சட்டக் குழுத் தலைவர் திரு.சி.ஆர்.தாஸ் கோவில் நிர்வாகங்களில் நடக்கும் அன்றாட செயல்பாடுகளை கண்காணிக்க உரிய ஒழுங்குமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

இந்த சூழலில் தமிழ்நாடு முழுமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் இந்து சமய அறநிலைய வாரியம் கலைக்கப்பட்டு கூடுதல் திருத்தங்களுடன் அரசுத்துறையாக செயல்பட இந்து சமய மற்றும் அறநிலைய கொடை சட்டம் 1951 இல் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் அறநிலையத்துறை ஆணையர் கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிட வழிவகை செய்யப்பட்டன, கோவில்களின் அனைத்து விவகாரங்களும் அரசால் நிர்வகிக்கப்பட்டன, உரிமைகள் மற்றும் பொறுப்புகள் கொண்ட நிர்வாகத்தின் பல்வேறு நிலைகள் நிறுவப்பட்டன, பரம்பரை கோவில் பணியாளர்கள் ஒழிக்கப்பட்டனர். அக்காலகட்டத்தில் இந்த சட்டத்திற்கு வலதுசாரிகள் பலத்த எதிர்ப்பை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய கொடை சட்டம், 1959

முந்தைய அனைத்து சமய சட்டங்களுக்கும் மாற்றாக தமிழ்நாடு முழுமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் இந்து சமய மற்றும் அறநிலைய கொடை சட்டத்தை 1959 இல் தமிழ்நாடு அரசு இயற்றியது. இச்சட்டம் 01 ஜனவரி 1960 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக பணிகளை ஆணையராக I.A.S அதிகாரி ஒருவர் கவனித்து வருகிறார். ஆணையருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. 

கோவில் சார்ந்து பல்வேறு துறைகள் உருவாக்கப்பட்டு அதற்கென நிர்வாகிகள் பணியில் அமர்த்தப்பட்டனர். இந்து சமய நிறுவனங்களின் விஷயங்களில் அரசுக்கு ஆலோசனை வழங்க ஒரு ஆலோசனைக் குழுவும் அங்கீகரிக்கப்பட்டது. கோவில் அலுவலர்களுக்கு உரிய அதிகாரங்கள் மற்றும் கடமைகள் வரையறுக்கப்பட்டது. கோவில் நிதி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் வரையறுக்கப்பட்டது. மேலும் கோவில் சொத்துக்கள் தனிநபர்களுக்கு முறைகேடாக மாற்றப்பட்டது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தீர்க்க வழிவகை செய்யப்பட்டன.

அறங்காவலர் பணி நியமனம்

இந்து சமய மற்றும் அறநிலைய கொடை சட்டம், 1959 இன் கீழ் கோவில்களின் நிர்வாகத்தை மேற்பார்வையிட பரம்பரை அல்லாத அறங்காவலர்களை அரசு நியமிக்கிறது. அவ்வாறு நியமிக்கப்பட்ட ஒவ்வொரு அறங்காவலர் குழுவிலும் குறைந்தபட்சம் ஒரு பெண் மற்றும் ஆதி திராவிட அல்லது பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட கூடுதல் உறுப்பினர்கள் இருப்பர். இந்தக் குழுவின் பதவிக்காலம் 2 ஆண்டுகள்.

அறங்காவலர் குழுவில் தற்காலிக காலியிடம் ஏற்பட்டால் அடுத்த அறங்காவலர் குழு தேர்ந்தெடுக்கப்படும் வரை கோவில் அறங்காவலர்களின் பணிகளைச் செய்ய இடைக்கால தக்கார் தேர்வு செய்யப்படுவார்.

கோவில் பணியாளர்களுக்கு ஊதியம் 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய ஒன்றியத்தை மதச்சார்பற்ற அரசு என்று வரையறுக்கிறது. மதச்சார்பற்ற கோட்பாட்டின் படி, இந்து கோவில்களுக்கு ஒன்றிய அரசு செலவு செய்ய முடியாது. கோவில் பணியாளர்களுக்கு மாநில அரசின் கருவூலத்தில் இருந்து ஊதியம் வழங்கப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டு கோவில்கள் தமிழ்நாடு அரசுக்கு செலுத்தும் 14% வரியிலிருந்து கோவில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.

கோவில் நுழைவுச் சட்டம், 1939 மற்றும் 1947

1924-1925 காலகட்டத்தில் கேரளாவில் பெரியார் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டம், தமிழ்நாட்டில் கோவில் நுழைவுப் போராட்டத்திற்கு அடித்தளமிட்டது. காங்கிரஸ்வாதி வைத்தியநாத ஐயர் தலைமையில் ஐந்து ஆதி திராவிடர்கள் மற்றும் ஒரு நாடார் சமூகத்தினர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 8 ஜூலை 1939 அன்று இரவு 8.45 மணிக்குள் நுழைந்தனர். 11 ஜூலை 1939 அன்று மெட்ராஸ் மாகாண காங்கிரஸ் முதல்வர் ராஜாஜி கோவிலுக்குள் நுழைபவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிப்பவர்களையும் மட்டும் பாதுகாக்கும் வகையில் மெட்ராஸ் கோவில் நுழைவு அங்கீகாரம் மற்றும் இழப்பீடு சட்டத்தை 1939 இல் இயற்றினார். 22 ஜூலை 1939 அன்று ஹரிஜன் இதழில் வைத்தியநாத ஐயர் மற்றும் அவரது குழுவினரை கோவில் நுழைவுக்காக காந்தி பாராட்டி எழுதினார். மேலும் 13 செப்டம்பர் 1939 அன்று வாழ்த்துக் கடிதமும் எழுதினார்.
1939 இல் மேம்போக்கான சட்டத்தை இயற்றிய ராஜாஜியின் அரசியல் சூழ்ச்சியை அறிந்து “கோவிலுக்குள் அனைவரும் செல்லலாம் என்றொரு பொது சட்டத்தை இயற்றாமல் கோவிலுக்குள் நுழைய நினைப்பவர்களை மட்டும் பாதுகாக்க ஓர் சட்டம் இயற்றுவது சமூக அநீதி ஆகும்” என்று பெரியார் கண்டனம் தெரிவித்தார். இறுதியாக அனைத்து சாதியினரும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் மெட்ராஸ் கோவில் நுழைவு அங்கீகாரச் சட்டத்தை 1947 இல் மெட்ராஸ் மாகாண காங்கிரஸ் முதல்வர் ஓ.பி.ராமசாமி நிறைவேற்றினார்.

இந்து சமய அறநிலைய ஆணையம்

இந்திய ஒன்றிய அரசு 1960 இல் இந்து சமய அறநிலைய தொடர்பான பிரச்சனைகளை விசாரிக்க இந்து சமய அறநிலைய ஆணையத்தை நிறுவியது. டாக்டர்.சி.பி.ராமசுவாமி ஐயர் 1960 முதல் 1962 வரை ஆணையத்தின் தலைவராக பணியாற்றினார். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஆணையம் சில பரிந்துரைகளை அளித்தது. கோவில் நிர்வாகத்திற்கான ஆணையப் பரிந்துரைகள் தற்போதைய தரநிலையாகக் கருதப்படுகிறது.

*அர்ச்சகர்களும் பூசாரிகளும் ஆகமங்கள், அர்ச்சனைகள், சடங்குகள் குறித்தான பயிற்சி பள்ளிகளை மாநில அரசுகள் நிறுவ வேண்டும்.

*1959 இந்து சமய மற்றும் தொண்டு அறக்கொடை சட்டத்தின் 97 வது பிரிவின் அடிச்சுவடுகளைப் போன்று மாநில அரசுகள் பொதுநல நிதிகளை நிறுவ வேண்டும்.

*இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினருக்கும் சமய அறநிலையங்களை நிர்வகிப்பதற்கான நிலையான சட்ட கட்டமைப்பை அரசு செயல்படுத்த வேண்டும்.

*இந்து சமய அறநிலையங்களை நிர்வகிக்கும் சட்டங்களை இயற்றாத மாநில அரசுகள், அறங்காவலர்கள் மீது கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவதற்கு தகுந்த சட்டத்தை விரைவாக இயற்ற வேண்டும்.

*கோவில் அறங்காவலர்களை நீக்கவும், இடைநிலைத் தலைவர்களை நியமிக்கவும், அவசரநிலை ஏற்பட்டால் தேவையான பிற திருத்த நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு அதிகாரம் உள்ளது.
இந்து சமய நிறுவனங்கள்

தனியார் வசம் இருந்த பழங்கோவில்கள், சமஸ்தானம் வசம் இருந்த பழங்கோவில்கள் மற்றும் துணை கோவில்கள் பலவும் தமிழ்நாடு அரசால் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இப்போது, இந்து சமய அறநிலையத்துறை 9,166 பட்டியலிடப்பட்ட கோவில்கள் மற்றும் 36,802 பட்டியலிடப்படாத கோவில்கள் நிர்வாகங்களுக்கு பொறுப்பாக உள்ளது. 

கோவில் நிலங்களில் விவசாயம் செய்து வரும் குத்தகைதாரர்களுக்கு இடையே நிலுவையில் உள்ள வாடகை பாக்கி, நியாயமான வாடகை நிர்ணயம், கடனைத் தீர்த்தல் போன்ற தகராறுகளைத் தீர்ப்பதற்கு தமிழ்நாடு பயிரிடும் வாடகைதாரர் பாதுகாப்பு சட்டம் 1955 இன் கீழ் வருவாய் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, ராஜஸ்தான், பீகார், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய இந்திய ஒன்றியம் மாநிலங்களில் இந்து சமய அறநிலையச் சட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. வெளிநாடுகளை பொறுத்தவரையில் சிங்கப்பூரில் 1968 இன் இந்து அறநிலையச் சட்டமும் மலேசியாவில் 1906 இன் இந்து அறநிலையச் சட்டமும் செயல்பாட்டில் உள்ளது.

பக்தர்கள் நன்கொடைகள்

பக்தர்கள் "திருவிழாக்களை நடத்தவும், சத்திரங்களை பராமரிக்கவும், கட்டிடங்களை பழுது பார்க்கவும், அறநிலையங்களை நிர்வகிக்கவும், கோவில் பணியாளர்கள் நலனை காக்கவும்" நன்கொடைகள் வழங்குவதும் கோவில்களுக்கு தானமாக "நிலங்கள், கட்டிடங்கள், தங்கம், வெள்ளி மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்கள்" வழங்குவதும் வழக்கம். கோவிலுக்கு அளிக்கப்படும் பங்களிப்புகள் அரசால் தணிக்கை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
வக்பு வாரியம் மற்றும் அறநிலையத்துறை வேறுபாடு

மாநில அறநிலையத்துறை அமைச்சகத்தின் கீழ் ஒவ்வொரு மாநில அரசும் இந்து சமய அறநிலையத்துறையை மேற்பார்வை செய்கிறது. ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் ஒவ்வொரு மாநில அரசும் வக்பு வாரியங்களை மேற்பார்வை செய்கிறது. வக்பு சட்டம், 1954 (இப்போது 1995 சட்டத்தின் துணைப்பிரிவு) கீழ் வக்பு வாரிய விவகாரங்களில் ஒன்றிய அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாக 1964 இல் ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பான ஒன்றிய வக்பு சபை (Central Waqf Council) நிறுவப்பட்டது. சுருக்கமாக, இந்து சமய அறநிலையத்துறை தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை சட்டம், 1959 மற்றும் வக்பு வாரியம் வக்பு சட்டம், 1995 கீழ் செயல்படுகின்றன.
திராவிடக் கட்சிகளின் குறிப்பிடத்தக்க அறப்பணிகள்

இதில் குறிப்பாக "பரம்பரை அர்ச்சகர் முறை ஒழிப்பு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், கோவில்களை ஒருங்கிணைக்க அறநிலையத்துறை அமைச்சகம், பழைமையான சிலைகள் மீட்பு, கோவில் ஓவியங்கள் புதுப்பித்தல், கோவில் சிற்பங்கள் பராமரித்தல், திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர் புனரமைப்பு, தஞ்சைப் பெரிய கோவிலின் 1000 வது ஆண்டுவிழா, கோவில் வருமானங்களில் குழந்தைகளுக்கான கருணை இல்லங்கள், பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்கள், கோவில் நிலங்களை மீட்டல், கிராமக் கோவில் பூசாரிகள் நல வாரியம், அன்னதானத் திட்டம், குடமுழுக்கு, கோவில் பணி வரன்முறை, அறநிலையத்துறை சார்பில் நிதிநிலை அறிக்கை, கோவில் ஆவணங்களை அரசு இணையத்தளத்தில் பதிவேற்றல்" போன்ற அறப்பணிகள் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் குறிப்பிடத்தக்கவை.

முடிவுரை

ஒன்றிய இந்தியா முழுவதும் கோவில் வளங்களைக் கண்காணிப்பதற்கான அடித்தளத்தை நிறுவிய இந்து அறநிலையச் சட்டத்தை திராவிட இயக்கத்தின் மூதாதையரான நீதிக்கட்சி 1925 இல் உருவாக்கியது. நீதிக்கட்சி கொண்டு வந்த சட்டத்தின் செயல்திறன் சிறப்பாக இருந்த காரணத்தால் காங்கிரஸ் முதல்வர் காமராஜர் 1959 இல் அச்சட்டத்தை கூடுதல் திருத்தங்களுடன் மேம்படுத்தினார். மேலும் திராவிடக் கட்சிகள் கோவில்களின் நிர்வாகத்தைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேற்பார்வையிடவும் கூடுதல் திருத்தங்கள், திட்டங்கள் மற்றும் செயல்படுத்தல்களுடன் சட்டத்தை நெருக்கமாகப் பின்பற்றி வருகின்றன.

"உயர் சாதியினரும், ஆன்மிக குருக்களும் தங்கள் சொந்த லாபத்திற்காக கோவில் வளங்களை கொள்ளையடிப்பதைத் தவிர்க்கவும், சமய நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும், சமய சொத்துக்களை நிர்வகிக்கவும்" அறநிலையத்துறையை அரசு இடைவிடாது கவனித்துக்கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்தி இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன். 
விவரணைகள்







வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Sunday, August 14, 2022

Hindu Religious and Charitable Endowments Department

Hindu Religious and Charitable Endowments Department

Synopsis
  1. Introduction
  2. Madras Endowments and Escheats Regulation, 1817
  3. Religious Endowments Act, 1863
  4. Charitable Endowments Act, 1890
  5. Code of Civil Procedure, 1908
  6. Charitable and Religious Trusts Act, 1920
  7. Hindu Religious Charities Board set up by Justice Party, 1927
  8. Various Acts
  9. Madras Hindu Religious and Charitable Endowments Act, 1951
  10. Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act, 1959
  11. Appointment of Trustee
  12. Salary to Temple Workers
  13. Temple Entry Acts, 1939 and 1947
  14. Hindu Religious Endowments Commission
  15. Hindu Religious Institutions
  16. Donations by Devotees
  17. Endowments Department and Waqf Board
  18. Notable Charities by Dravidian Parties
  19. Conclusion
  20. Reference
Introduction

Various rulers, including the Cheras, Cholas, Pandyas, Pallavas, Nayaks, Mysoreans, Travancoreans, and Cochinites, were instrumental in designing and constructing the magnificent temples of South India. Historically, rulers were entrusted with the care of temples due to their extensive property holdings.

After the abolition of monarchy in British India, control over numerous temples shifted to the upper castes. The transfer of temple property to private parties occurred without formal transactions. Consequently, devotees lodged several complaints with British India against the mismanagement, sale, and misuse of temple property. In response, various rules were adopted at different times to address the issue of inadequate temple administration. Chief among these measures was the establishment of an endowment department to oversee temple administration.
Madras Endowments and Escheats Regulation, 1817

In the provinces of Bengal, Madras, and Bombay, Temple Endowment Regulations were enacted in 1810, 1817, and 1827, respectively. The statues within the temples were legally recognized as entities with rights. Financial management of the temples was entrusted to local agents. The Madras Endowment and Escheats Regulation of 1817 granted the Board of Revenue extensive authority to regulate temple administrations. This included the collection of rent on temple lands, allocation of temple resources, maintenance of temple buildings, and prevention of the confiscation of temple property.

Religious Endowments Act, 1863

The Religious Endowment Act of 1863, applicable throughout India, was enacted to replace the 1817 Act with the objective of 'divesting the state from the administration of religious endowments and from receiving benefits owed to the state.

Charitable Endowments Act, 1890

The Charitable Endowments Act of 1890, applicable throughout India, defines charitable objectives as "the alleviation of poverty, the promotion of education, the provision of medical aid, or the promotion of any other cause of public welfare". Importantly, it is noteworthy that mandatory religious teaching was outlawed.

Code of Civil Procedure, 1908

The Code of Civil Procedure applies throughout India and serves as 'a body of law that regulates the procedure to be followed in courts of law.' In the event of an alleged breach of an express or implied trust created for a public purpose of a charitable or religious nature, individuals are granted rights under Section 92 of the Code of Civil Procedure of 1908. This section addresses issues such as the removal of any trustee, appointment of a new trustee, transfer of any property to the trustee, management of financial resources, and much more.

Charitable and Religious Trusts Act, 1920

The Charitable and Religious Trusts Act of 1920 was designed to oversee public trusts not covered by the Indian Trust Act of 1882. Applicable throughout India, it was enacted to 'establish control over the administration of religious trusts and to facilitate trust procedures.' This legislation specifically addresses trusts created for religious and charitable purposes, providing guidance to the trustees involved. In essence, public trusts are established to aid the public.

Hindu Religious Charities Board set up by Justice Party, 1927

For centuries, temple trustees, primarily from Brahmin and other upper castes, have been accused of exploiting the resources of temples. The newly-elected Justice Party in the Madras Province was appalled by the mismanagement of temples. In 1920, Raja of Panagal assumed the role of Chief Minister of Madras Presidency on behalf of the Justice Party and made efforts to bring the temples under government surveillance. In 1922, he proposed the Hindu Welfare Act for this purpose. Despite numerous obstacles, in 1925, he successfully introduced the Hindu Welfare Bill. Despite resistance from the then-right wing, he presented the bill to the Viceroy, Lord Irwin, who approved it.

The Madras Hindu Religious Endowments Act of 1927 eventually resulted in the establishment of the Hindu Religious Charities Board to serve the entire Madras Province. Through this legislation, the board was granted the right to control the management of temples. Additionally, it was given the authority to appoint officers for temples that were not properly managed. Notably, the temple management system in the union of India was significantly shaped by legislation introduced by the Justice Party, the pioneer in the Hindu religious endowment sector.
Various Acts

The laws enacted, including Acts 1 of 1928, V of 1929, IV of 1930, XI of 1931, XI of 1934, XII of 1935, XX of 1938, XXII of 1939 (twice), V of 1944, and X of 1946, were based on endowment principles.

Madras Hindu Religious and Charitable Endowments Act, 1951

In 1940, during the British Governorship (1939-1946), a special officer was appointed to overhaul the Hindu Religious Charities Board. The special officer indicated that direct government management of Hindu religious institutions would be more advantageous than government supervision via boards. In 1942, a commission led by a former Madras High Court judge found that establishing the Hindu Religious Charities Board as the state's central administration would be useful. Additionally, in 1950, C.R. Das, the chairman of the Law Committee, proposed that the day-to-day activities of temple administrations be governed by appropriate regulations.

In this context, the Hindu Religious and Charitable Endowments Act of 1951 was enacted to dissolve the Hindu Religious Charities Board and establish a government department, leading to subsequent changes throughout all of Tamil Nadu. The Act stipulated that the Endowment Commissioner would oversee temple administration, all temple affairs would be administered by the state, multiple levels of management with associated rights and responsibilities would be established, and hereditary temple personnel would be eliminated. At the time, this Act faced significant opposition from the right-wing.

Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act, 1959

The Hindu Religious and Charitable Endowment Act of 1959 was enacted by the Tamil Nadu government to replace all previously applicable religious laws throughout the state. This Act came into effect on January 1, 1960. Under this legislation, an IAS official serves as the Commissioner for the Hindu Religious Charities Department, with additional authority granted to the Commissioner.

The Act established numerous divisions within temples, and respective managers were appointed. An Advisory Committee was also created to advise the government on issues related to Hindu religious institutions. Specific authorities and responsibilities of temple officers were outlined. Additionally, measures to enhance the financial growth of the temples were introduced. Furthermore, matters involving the improper transfer of temple property to individuals were resolved under the court's directive.

Appointment of Trustee

The Hindu Religious and Charitable Endowments Act of 1959 empowers the government to appoint non-hereditary trustees to manage temples. Each such board of trustees includes additional members, with a mandatory representation of at least one woman and one member from the Adi Dravida or Tribal Class. The term of this committee is two years.

In case of a temporary vacancy in the Board of Trustees, an interim Thakar would be chosen to perform the functions of the Temple Trustees until the next Board of Trustees is selected.

Salary to Temple Workers

The Indian Constitution establishes the Union of India as a secular state. The secular concept prohibits the federal government from funding Hindu temples, and temple employees are not paid from the state treasury. For instance, the 14% tax that Tamil Nadu temples pay to the Tamil Nadu government is utilised for the payment of temple employees.

Temple Entry Acts, 1939 and 1947

Periyar's Vaikom agitation (1924-1925) in Kerala laid the groundwork for the temple entry struggle in Tamil Nadu. At 8:45 p.m. on July 8, 1939, five Adi Dravidians and one Nadar community, led by Congressman Vaidyanatha Iyer, invaded the Madurai Meenakshi Amman temple. The Madras Temple Entry Authorisation and Indemnity Act of 1939 was adopted on July 11, 1939, by Rajaji, the Chief Minister of the Madras Provincial Congress, to protect those who entered the temple and those who urged them to do so. Gandhi praised Vaidyanatha Iyer and his crew for the temple entry activity in a letter to Harijan dated July 22, 1939. He also sent a letter of congratulations on September 13, 1939.
Periyar criticized the political maneuverings of Rajaji, who approved the extravagance ordinance in 1939, stating, "it is a social injustice to pass a law protecting only those who wish to visit a temple without also passing a law allowing everyone to visit a temple". In 1947, O.P. Ramasamy, the Chief Minister of the Madras Provincial Congress, approved the Madras Temple Entry Authorization Act of 1947, which allowed people of all castes to enter temples.

Hindu Religious Endowments Commission

In 1960, the Union Government of India established the Hindu Religious Endowments Commission to investigate issues related to Hindu religious charities. From 1960 to 1962, Dr. C.P. Ramaswamy Iyer served as the Chairman of the Commission. The Commission provided certain suggestions to both the central and state governments. The current norm for temple administration is based on the recommendations made by the Commission.

*State governments that have not yet implemented rules governing Hindu religious trusts should swiftly enact the necessary legislation to exert control over trustees.

*State governments have the authority to remove temple trustees, appoint interim leaders, and take other corrective actions in the event of an emergency.

*State governments should establish a common good fund following the provisions of Section 97 of the Hindu Religious and Charitable Endowments Act, 1959.

*State governments should establish Agama, Archana, and Ritual training schools for priests.

*State governments should develop a legislative framework that uniformly governs all religious foundations.
Hindu Religious Institutions

The Tamil Nadu government has incorporated temples in private ownership, temples in the possession of princely states, and several sub-temples. Currently, the Hindu Religious Endowments Department is responsible for the administration of 9,166 listed temples and 36,802 unlisted temples.

Revenue Courts are operational to settle disputes, such as rent arrears, determining fair rent, evicting defaulters, and so on, between tenants cultivating on temple lands and those on record under the Tamil Nadu Cultivating Tenants Protection Act of 1955.
Andhra Pradesh, Telangana, Kerala, Karnataka, Pondicherry, Rajasthan, Bihar, Maharashtra, Madhya Pradesh, Uttar Pradesh, Jammu and Kashmir have Hindu Religious Endowment Acts in existence. The Hindu Endowments Act of 1968 is in effect in Singapore, while the Hindu Endowments Act of 1906 is in effect in Malaysia.

Donations by Devotees

It is traditional for devotees to donate for the organization of festivals, maintenance of inns, repair of buildings, administration of endowments, and preservation of the welfare of temple personnel. Additionally, devotees may contribute lands, buildings, gold, silver, and other assets to temples. Significantly, the government audits these contributions to the temple.
Endowments Department and Waqf Board 

Under the supervision of the Ministry of State Endowments, each state government oversees the Hindu Religious Endowments Department. Similarly, Waqf Boards are supervised by individual state governments on behalf of the Union Ministry of Minority Welfare. The Central Waqf Council, established in 1964 and operating under the Union Ministry of Minority Welfare, has a legislative nature and advises the Union Government on Waqf Board matters, as stipulated by the Waqf Act of 1954 (now a subsection of the 1995 Act).

In summary, the functioning of the Hindu Religious Endowments Department is regulated by the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act of 1959, while the Waqf Boards operate in accordance with the Waqf Act of 1995, with the Central Waqf Council playing a crucial advisory role.
Notable Charities by Dravidian Parties

The abolition of hereditary priesthood, allowing individuals from all castes to become priests, the establishment of the Ministry of Charities to administer temples, the recovery of ancient idols, the renovation of temple paintings, the maintenance of temple sculptures, the reconstruction of the Thiruvarur Thyagaraja temple chariot, the celebration of the 1000th anniversary of the Thanjavur Brihadeeswara temple, the establishment of children's mercy homes and rehabilitation homes for beggars funded by temple incomes, the reacquisition of temple lands, the creation of a welfare board for village temple priests, the implementation of the annadhanam scheme, consecration ceremonies, and a structured schedule for temple work are noteworthy charitable works carried out during the Dravidian party's reign.

Conclusion

The Justice Party, the pioneer of the Dravidian movement, laid the foundation for monitoring temple resources throughout British India by drafting the Hindu Endowments Act in 1925. In 1959, Congress Chief Minister Kamaraj made additional revisions to the Act, responding to the increased efficacy introduced by the Justice Party. Subsequently, the Dravidian parties faithfully adhered to the Act, implementing various revisions, schemes, and measures to preserve, safeguard, and oversee the administration of temples.

It is crucial for the government to consistently prioritize the charitable sector. This is essential to prevent the upper castes and spiritual leaders from exploiting temple resources for personal gain, to maintain religious harmony, and to effectively manage religious properties.
Reference

Tuesday, August 9, 2022

ஏரியும் ஆராய்ச்சியும்

ஏரியும் ஆராய்ச்சியும்

பொருளடக்கம் 
  1. முகவுரை 
  2. மர்ம ஏரி 
  3. ஆய்வுகளின் ஒரு பகுதி 
  4. கோட்பாடுகள் 
  5. நந்தா தேவி ராஜ் ஜாட் யாத்திரை 
  6. மலையேற்றம் தடை 
  7. முடிவுரை
  8. விவரணைகள் 
முகவுரை 

1942 இல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​ரூப்குண்ட் ஏரியில் பனிக்கட்டிக்கு அடியில் சிதறிக் கிடந்த நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகளின் எச்சங்களை இந்திய வனப் பாதுகாவலர் H.K.மத்வால் கண்டுபிடித்தார். ரூப்குண்ட் ஏரி, உத்தரகண்ட் மாநிலத்தில், இந்தியாவின் மிக உயரமான மலைகளில் ஒன்றான திரிசூலின் செங்குத்தான சரிவின் அடிப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 16,500 அடி உயரத்தில் உள்ளது. 
மர்ம ஏரி 

வழக்கமாக ஆண்டு முழுவதும் உறைந்து கிடக்கும் இந்த ஏரி, பருவம் மற்றும் வானிலைக்கு ஏற்ப விரிவடைந்து சுருங்குகிறது. பனி உருகும்போது மட்டுமே சதையுடன் கூடிய எலும்புக்கூடுகள் நன்கு தெரியும். இதுவரை இங்கு சுமார் 800 பேரின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரூப்குண்ட் ஏரியில் உள்ள உடல் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து பல மர்மங்களைத் தீர்க்க முயன்று வருகின்றனர்.
அதே நேரத்தில் “இவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? எப்போது, ​​எப்படி இறந்தார்கள்?” என்பது போன்ற பல விடை தெரியாத கேள்விகளால் குழப்பத்தில் உள்ளனர். உள்ளூர் அரசாங்கம் சுற்றுலாவுக்கான விளம்பரங்களில் ரூப்குண்ட் ஏரியை “மர்ம ஏரி” என்று குறிப்பிடுகிறது.

ஆய்வுகளின் ஒரு பகுதி 

ஏரியில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்களை ஆய்வு செய்தவர்கள் “இறந்தவர்களில் பல உடல்கள் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள், சில உடல்கள் சராசரி உயரத்தை விட உயரமானது, சில உடல்கள் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையானது, சில இறப்புகள் வெவ்வேறு காலத்தில் நிகழ்ந்திருக்கலாம்” என்று கண்டறிந்தனர். மேலும் இறந்தவர்கள் மரபணு ரீதியாக வேறுபட்டவர்கள் என்றும் ஒரு குழுவினர் தெற்காசியாவில் வாழும் மக்களைப் போன்ற மரபணுக்களைக் கொண்டிருப்பதாகவும் மற்ற குழுவினர் ஐரோப்பாவில் வாழும் மக்களைப் போன்ற மரபணுக்களைக் கொண்டிருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
கோட்பாடுகள் 

கோட்பாடு 1 = நாட்டுப்புற பாடல்கள் வாயிலாக தெய்வமாக வணங்கப்படும் இந்தியாவின் இரண்டாவது உயரமான மலையான "நந்தா தேவி" பெரும் புயலை உருவாக்கி ஏரியைக் கடக்க முயன்ற மக்களைக் கொன்றது. 

கோட்பாடு 2 = 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பேரிடரில் இப்பகுதியை ஆண்ட இந்திய மன்னரின் குடும்பத்தினர் மற்றும் காவல்படை வீரர்கள் புதையுண்டனர் . 

கோட்பாடு 3 = 19 ஆம் நூற்றாண்டில் திபெத்தை தாக்க முயன்ற இந்திய வீரர்கள் இமயமலைக்கு மேல் தங்கள் வழியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி இறந்தனர். 

கோட்பாடு 4  = பண்டைய காலத்தில் பரவிய ஒரு தொற்றுநோயால் இறந்தவர்கள் ஒன்றாக புதைக்கப்பட்டனர். 
இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனியை சேர்ந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மேற்கூறிய கோட்பாடுகள் ஆதாரமற்றவை என்று கண்டறியப்பட்டது. மேலும் பண்டைய காலத்தில் இப்பாதை ஜப்பானிய போர் படையினருக்கு / திபெத்திய வர்த்தகர்களுக்கு சொந்தமானது என்று கருதப்பட்டது. ஆனால் தொல்லியல் ஆய்வுகளின் படி இப்பகுதியில் போர்க் கருவிகளோ வர்த்தகப் பொருட்களோ கிடைக்கவில்லை. ஏரி வர்த்தக பாதையில் அமையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நந்தா தேவி ராஜ் ஜாட் யாத்திரை 

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நந்தா தேவி ராஜ் ஜாட் யாத்திரை என்பது உத்தரகாண்டின் மூன்று வார கால இந்து புனித யாத்திரை மற்றும் திருவிழா ஆகும். இந்த யாத்திரையின் இறுதித் தலமான ஹோம்குண்ட் செல்லும் வழியில் ரூப்குண்ட் அமைந்துள்ளது. 2004 இல் வெளியிடப்பட்ட தடயவியல் அறிக்கையின்படி, 9 ஆம் நூற்றாண்டில் ஹோம்குண்ட் பகுதிக்கு புனித யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த யாத்ரீகர்கள் வழியில் உள்ள ரூப்குண்ட் பகுதியில் மிக குறுகிய ஆனால் கடுமையாக பெய்த பாறாங்கல் அளவு ஆலங்கட்டி மழையால் தாக்கப்பட்டு இறந்தனர். நிற்க!!! ஆய்வின்படி இறந்தவர்களில் ஒரு குழுவினர் ஐரோப்பாவில் வாழும் மக்களைப் போன்ற மரபணு அமைப்பைக் கொண்டிருந்தனர் என்றால் கிறிஸ்தவ மதத்தை முன்னிறுத்தும் ஐரோப்பியர்கள் இந்து புனித யாத்திரைக்கு வருவார்களா? இவ்வாறு ஒன்று தொட்டு தொன்றுதொட்டு சிக்கலான கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. 
மலையேற்றம் தடை 

பல்லுயிர், உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள் காரணமாக உத்தரகாண்டின் உயரமான இடங்களில் முகாமிடுவதற்கு தடை விதித்து 2019 இல் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் மலையேற்றம் மேற்கொள்பவர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் ரூப்குண்ட் உச்சியை ஒரே நேரத்தில் அடைய சிரமப்பட்டனர். மலையேற்றத் தடை கிராம மக்களின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்தியது.
முடிவுரை 

இமயமலையில் உள்ள ரூப்குண்ட் ஏரி முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டு 80 ஆண்டுகளுக்குப் பிறகும், எலும்புக்கூடுகளின் மர்மம் இன்றுவரை தொடர்கிறது. இப்பகுதியை பல்வேறு நாட்டைச் சேர்ந்த பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகள் பல செய்தது உண்டு, செய்வது உண்டு.

உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இன்னும் பதில்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் சில பதில்கள் வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில் அது கதையை அளவிட முடியாத வழிகளில் வளப்படுத்துகிறது.
விவரணைகள்



வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

QWERTY விசைப்பலகையின் வரலாறு

QWERTY விசைப்பலகையின் வரலாறு

பொருளடக்கம்
  1. முகவுரை 
  2. ஆரம்பகால தட்டச்சு இயந்திரம் 
  3. அகரவரிசையும் சிக்கலும் 
  4. தந்தியும் சிக்கலும் 
  5. விசைப்பலகை பரிசோதனைகள் 
  6. QWERTY விசைப்பலகை 
  7. ரெமிங்டன் எண் 1 தட்டச்சு இயந்திரம் 
  8. ரெமிங்டன் எண் 2 தட்டச்சு இயந்திரம் 
  9. தரநிலையாக QWERTY
  10. DVORAK விசைப்பலகை
  11. தட்டச்சு சந்தை 
  12. முடிவுரை 
  13. விவரணைகள் 
முகவுரை 

QWERTY விசைப்பலகை தினசரி அடிப்படையில் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் ஒரு பொதுவான கருவியாகும். 1870 களில் தட்டச்சு இயந்திரத்திற்காக உருவாக்கப்பட்ட QWERTY விசைப்பலகை இன்று கணினி விசைப்பலகைகளுக்கான தரநிலையாக உள்ளது. 

நீங்கள் தட்டச்சு செய்யும் போது விசைப்பலகை ஏன் QWERTY அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று யோசித்திருக்கலாம். அவ்வாறு, QWERTY விசைப்பலகை வடிவமைக்கப்பட்ட விதத்திற்கு பல சுவாரஸ்யமான விளக்கங்கள் உள்ளன.
ஆரம்பகால தட்டச்சு இயந்திரம் 

வணிக நிறுவனங்களை திறம்பட நடத்துவதற்காக அமெரிக்க கண்டுபிடிப்பாளரும் செய்தித்தாள் வெளியீட்டாளருமான கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ் தனது சகாக்கள் கார்லோஸ் கிளிடன், ஜேம்ஸ் டென்ஸ்மோர் மற்றும் சாமுவேல் சோல் உதவியுடன் அமெரிக்காவில் ஆரம்பகால தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்து 1868 இல் காப்புரிமை பெற்றார். 

1868 இல் கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ் மற்றும் அவரது சகாக்கள் தங்களின் முதல் தட்டச்சு இயந்திரத்தை சிகாகோவில் உள்ள போர்ட்டர்ஸ் டெலிகிராப் கல்லூரியின் முதல்வர் எட்வர்ட் பேசன் போர்ட்டர் அவர்களுக்கு வழங்கினர். முதல் தட்டச்சு இயந்திரத்தின் விசைப்பலகை 28 விசைகளைக் கொண்டிருந்தது மற்றும் பியானோவைப் போல வடிவமைக்கப்பட்டது. ஒரு வரிசையில் A முதல் M வரை மற்றொரு வரிசையில் N முதல் Z வரை என்று விசைப்பலகை அகரவரிசையில் அமைக்கப்பட்டது. தட்டச்சு இயந்திரம் போர்ட்டர்ஸ் கல்லூரியில் பயன்படுத்தப்பட்ட ஹியூஸ் ஃபெல்ப்ஸ் பிரிண்டிங் டெலிகிராப்பை ஒத்திருந்தது. 
அகரவரிசையும் சிக்கலும் 

பயனர்கள் ஒவ்வொரு எழுத்தையும் எளிதாக அடையாளம் காணும் வகையில் ஆரம்பகால தட்டச்சு இயந்திரத்தில் விசைப்பலகை அகரவரிசைப்படி வடிவமைக்கப்பட்டன. அகரவரிசைப்படி அமைக்கப்பட்ட விசைப்பலகை பயனர்களை அதிக வேகத்தில் தட்டச்சு செய்ய அனுமதித்தன. ஆனால் பயனர்கள் நெருக்கமாக அமைந்துள்ள இரு விசைகளை மிக விரைவாக அழுத்தும் போது அந்தந்த விசைகளுடன் தொடர்புடைய நெம்புகோல்கள் தடைப்பட்டன. எனவே விசை நெரிசலை குறைக்கும் வகையில் புதிய விசைப்பலகை அமைப்பு தேவைப்பட்டது.

தந்தியும் சிக்கலும் 

மோர்ஸ் குறியீட்டின் உதவியுடன் மின் சமிக்ஞைகளை சுமந்து செல்லும் கம்பிகளை பயன்படுத்தி நீண்ட தூரத்திற்கு செய்திகளை அனுப்பும் முறை “தந்தி” எனப்படும். இவ்வாறு, தந்தி இயக்குபவர்கள் அகரவரிசை முறை குழப்பமானதாகவும் மோர்ஸ் குறியீட்டை மொழிபெயர்ப்பதில் சிரமம் இருப்பதாகவும் எண்ணினர். 

எடுத்துக்காட்டாக மோர்ஸ் குறியீட்டில் Z என்பது “. . . .” என்றும் SE என்பது “. . . .” என்றும் குறிக்கிறது. செய்தி பகிர்வின் போது Z என்பது SE உடன் இணைத்து குழப்பப்பட்டது. சில நேரங்களில் மோர்ஸ் குறியீட்டை பெறுபவர்கள் பின்வரும் கடிதங்களை பெறும் வரையில் Z அல்லது SE பொருந்துமா என்பதை தீர்மானிக்க முடியவில்லை. எனவே, தந்தி இயக்குபவர்களுக்கு எளிதாக்க, மோர்ஸ் குறியீட்டை பெறுபவர்கள் வேகமாக தட்டச்சு செய்ய விசைப்பலகையில் Z மற்றும் E ஆகிய இரண்டிற்கும் இடையே S என்பதை வைக்க யோசித்தனர்.
விசைப்பலகை பரிசோதனைகள் 

விசை நெரிசலை தவிர்ப்பதற்கும் தந்தி வழிமுறையை எளிதாக்குவதற்கும் விசைகளை ஒழுங்கமைப்பதற்கும் ஒரு திறமையான வழியைக் கண்டறிய கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ் விசைப்பலகை அமைப்பை மேம்படுத்துவதில் தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். 

இதன் பின்னணியில், 1870 இல் கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ் தட்டச்சு இயந்திரத்தில் எழுத்துக்களை 4 வரிசைகளாக ஒழுங்கமைத்தார். முதல் வரிசையில் எண்கள், இரண்டாவது வரிசையில் உயிரெழுத்துக்கள் மற்றும் நிறுத்தற்குறிகள், மூன்றாவது வரிசையில் 10 எழுத்துக்கள், நான்காவது வரிசையில் 10 எழுத்துக்கள் வடிவமைக்கப்பட்டன.
1873 இல் கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ் 1870 விசைப்பலகை அமைப்பை விட சற்றே மேம்பட்ட ஒரு விசைப்பலகையை வடிவமைத்தார். இது QWERTY அமைப்பின் முன்மாதிரியாக மோர்ஸ் குறியீடு பயனர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
QWERTY விசைப்பலகை 

1870 களில் தொழில்முறை தட்டச்சு செய்பவர்கள் இல்லாத காலகட்டத்தில் தந்தி இயக்குபவர்கள் மற்றும் சுருக்கெழுத்தாளர்கள் தான் தட்டச்சு இயந்திரங்களை பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர். இதன் பின்னணியில், கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ், விசைப்பலகைகளை அதிகம் பயன்படுத்திய தந்தி இயக்குபவர்களின் உள்ளீட்டை கொண்டு தொடர்ச்சியான சோதனைகளுக்கு பிறகு, விசைப்பலகை சிக்கலை தீர்க்க QWERTY விசைப்பலகையை வெற்றிகரமாக உருவாக்கினார். அடிக்கடி பயன்படுத்தப்படும் E, T, A, O, I, N எழுத்துக்களை விசைப்பலகை முழுவதும் பரப்பியும் E, D சொற்களின் சேர்க்கைகள் ஒரே விரலால் அடிக்கப்படுவதை உறுதி செய்தும் விசைப்பலகையை வடிவமைத்தார். 
சுருக்கமாக, QWERTY விசைப்பலகையானது, ஆரம்பகால விசைப்பலகையின் அகரவரிசை எழுத்துக்களை இடமாற்றம் செய்து வெவ்வேறு வரிசைகளில் எழுத்துக்களை ஒழுங்குபடுத்தியும் விரல்களை இலகுவாக பயன்படுத்தவும் விசைப்பலகையின் நெரிசலை தவிர்க்கவும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, QWERTY விசைப்பலகையில் உள்ள விசைகள் தட்டச்சு செய்பவரின் வேகத்தை குறைக்கும் ஒரு இரகசிய நோக்கத்தை கொண்டிருப்பதாக ஒரு கட்டுக்கதை பரவியது. இருப்பினும் நாளடைவில் இந்த கட்டுக்கதை பரவலாக மதிப்பிழந்தது.
ரெமிங்டன் எண் 1 தட்டச்சு இயந்திரம் 

அமெரிக்க உள்நாட்டு போரை (1861-1865) தொடர்ந்து துப்பாக்கி தயாரிப்பாளரான ரெமிங்டன் நிறுவனம் நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பில் இறங்கியது. இதன் பின்னணியில் கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் தட்டச்சு இயந்திரத்தின் உற்பத்தி உரிமையை ரெமிங்டன் நிறுவனத்திற்கு 1873 இல் விற்றனர். 
கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸின் வழிகாட்டுதலில் ரெமிங்டன் நிறுவனம் அசல் வடிவமைப்பில் தேவையான மாற்றங்களை செய்து QWERTY விசைப்பலகையுடன் கூடிய Sholes & Glidden தட்டச்சு இயந்திரங்களை 1874 இல் உற்பத்திக்கு கொண்டு வந்தது. இதனை, ரெமிங்டன் எண் 1 தட்டச்சு இயந்திரம் எனவும் கூறுவர். 
ரெமிங்டன் எண் 2 தட்டச்சு இயந்திரம் 

ரெமிங்டன் எண் 1 தட்டச்சு இயந்திரத்தில் பெரிய எழுத்துக்கள் (Upper Case) மட்டுமே இருந்தன. அதனால் 1878 இல் ரெமிங்டன் நிறுவனம் Shift Key உடன் புதிய மாடலான எண் 2 தட்டச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியது.
ரெமிங்டன் எண் 2 தட்டச்சு இயந்திரத்தில் உள்ள Shift Key வசதி ஒவ்வொரு விசையையும் பெரிய எழுத்து மற்றும் சிறிய எழுத்தாக (Upper and Lower Case) பயன்படுத்த அனுமதித்தது. மேலும் தட்டச்சு இயந்திரத்தின் உள்ளே ஒரு கருப்பு ரப்பர் ரோலர் வைக்கப்பட்டு அது விசைகளுக்கு சேதம் ஏற்படாமல் தடுக்க பயன்படுத்தப்பட்டது. 1890 வாக்கில் ரெமிங்டன் எண் 2 தட்டச்சு இயந்திரங்கள் சுமார் 1,00,000 அலகுகள் வரை விற்பனையானது. 
தரநிலையாக QWERTY 

1893 இல் ரெமிங்டன், கலிகிராஃப், யோஸ்ட், டென்ஸ்மோர் மற்றும் ஸ்மித்-பிரீமியர் ஆகிய ஐந்து பெரிய தட்டச்சு உற்பத்தி நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து அமெரிக்காவில் தட்டச்சு இயந்திர உற்பத்தியாளர்களைக் கட்டுப்படுத்தும் குறிக்கோளுடன் நியூயார்க்கில் யூனியன் தட்டச்சு அறக்கட்டளையை உருவாக்கினர். அத்துடன் அப்போது தரமான தட்டச்சு இயந்திரங்களுக்கான விலையை 100 டாலர்களாக நிர்ணயித்தனர்.

விசைப்பலகைகளுக்கான தரநிலையாக QWERTY அமைப்பை பயன்படுத்த அமெரிக்க அறக்கட்டளை நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, நாளடைவில் உலகம் முழுவதும் QWERTY விசைப்பலகை கொண்ட தட்டச்சு இயந்திரங்களின் சேவையும் அதன் தேவையும் தவிர்க்க முடியாததாகிவிட்டது.

DVORAK விசைப்பலகை 

QWERTY விசைப்பலகைக்கு எதிராக வெவ்வேறு காலகட்டத்தில் பல விசைப்பலகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் DVORAK விசைப்பலகை ஒரு கட்டத்தில் QWERTY விசைப்பலகைக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 
1936 இல் டாக்டர் ஆகஸ்ட் டுவோராக் மற்றும் டாக்டர் வில்லியம் டீலி ஆகியோரால் DVORAK விசைப்பலகை வடிவமைக்கப்பட்டது. தட்டச்சு செய்பவர்களுக்கு எழுத்துக்களை விரைவாகக் கண்டறிய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட DVORAK விசைப்பலகை மூலம் தட்டச்சு வேகத்தை 74 சதவீதமும் துல்லியத்தை 68 சதவீதமும் அதிகரிக்க முடியும் என்று டாக்டர் டுவோராக் வாதிட்டார்.
மேலும் QWERTY அமைப்பில் உள்ள அசாதாரண எழுத்து சேர்க்கைகள் தான் பெரும்பாலும் நிகழும் எழுத்து பிழைகளுக்கு காரணம் என்றும் டுவோரக் கூறினார். டாக்டர் டுவோராக் வாதங்களை முன்வைத்த போதிலும், DVORAK விசைப்பலகை QWERTY விசைப்பலகை பயன்பாட்டை மாற்றுவதில் தோல்வியடைந்தது. DVORAK விசைப்பலகை வேகமானது என்ற கூற்றுகளும் பரவலான விமர்சனங்களை பெற்றது. மேலும் DVORAK விசைப்பலகை அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், பயனர்கள் ஏற்கனவே QWERTY விசைப்பலகையின் செயல்பாட்டை நன்கு அறிந்திருந்ததால் புதிய தட்டச்சு முறையைக் கற்றுக்கொள்ள விரும்பவில்லை.

தட்டச்சு சந்தை 

தட்டச்சு இயந்திரங்களை பயன்படுத்தி எப்படி தட்டச்சு செய்வது என்று மக்களுக்கு தட்டச்சு கல்வியை முதல் முறையாக ரெமிங்டன் நிறுவனம் வழங்கியது. தங்கள் வணிக நோக்கங்களை முன்னெடுத்து செல்ல விரும்பும் நிறுவனங்கள், பயிற்றுவிக்கப்பட்ட தட்டச்சர்களை பணியமர்த்த தட்டச்சு இயந்திரங்களை வாங்க வேண்டியிருந்தது, அவை கணினிகள் பயன்பாடு உருவாகும் வரை தட்டச்சு இயந்திரங்களுக்கான சந்தையை உறுதி செய்வதாக அமைந்தது. 

காலப்போக்கில் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடிப்படையில் தட்டச்சு இயந்திரங்களின் வடிவமைப்பில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. அதே நேரத்தில் கணினிகளின் எழுச்சிக்கு பிறகு தட்டச்சு இயந்திர உற்பத்தியில் இனி ஏகபோகத்தை அனுபவிக்க முடியாது என்பதால், பல்வேறு தட்டச்சு இயந்திர உற்பத்தி நிறுவனங்களை கையகப்படுத்துதல்/இணைத்தல்/மூடுதல் ஆகியவை நடந்தன. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, விசைப்பலகையை பொருத்தவரை QWERTY அமைப்பானது தட்டச்சு இயந்திரங்களில் இருந்து தொடுதிரைகளுக்கு இடம்பெயர்ந்துள்ளது என்பது நுட்பமாக கவனிக்கத்தக்கது.

முடிவுரை 

QWERTY விசைப்பலகை என்பது முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கண்டுபிடிப்பு. ஆனால், அதே நேரத்தில் பழைய கனமான தட்டச்சு இயந்திரங்கள் முதல் நவீன கால தொடுதிரை இயந்திரங்கள் வரை QWERTY விசைப்பலகை வெற்றிகரமாக அதன் தொடர்பை தக்க வைத்து கொள்ளும் வகையில் பொருத்தமானதாக உள்ளது. இக்கட்டுரை QWERTY விசைப்பலகையின் வரலாற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும் என்று எண்ணி நிறைவு செய்கிறேன். 
விவரணைகள் 






வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -