Chocks: October 2024

Wednesday, October 2, 2024

சோழர்கள் பற்றி சில செய்திகள்

சோழர்கள் பற்றி சில செய்திகள்

விளக்கம்இந்த சுருக்கமான கட்டுரை, ஆழமாக (Depth) விவரிக்காமல், குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் மேலோட்டத்தை அகலமாக (Broad) வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆதித்த கரிகாலன் படுகொலை மற்றும் ராஜராஜ சோழன் வயது குறித்து ஐயங்கள் நிலவினாலும், இந்த கட்டுரை ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் பொதுவான தகவல்களை வழங்குகிறது. இது தலைப்பின் இறுதி ஆய்வாக கருதப்படக்கூடாது. ஒரு முழுமையான புரிதலுக்காக, தலைப்பில் இன்னும் விரிவான ஆதாரங்களைப் பார்க்க வாசகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
பொருளடக்கம் 
  1. முகவுரை 
  2. தலைநகரங்கள்
  3. சிறப்புகள்
  4. விமர்சனங்கள்
  5. சாளுக்கிய சோழ வம்சம்
  6. இலங்கையில் சோழர்கள்
  7. ஆட்சியில் பொன்னியின் செல்வன்
  8. ஆதித்த கரிகாலன் படுகொலை
  9. உடையார்குடி கல்வெட்டு
  10. படுகொலையின் பின்னணி
  11. காந்தளூர் சாலைப் போர்
  12. முடிவுரை
  13. விவரணைகள்
முகவுரை  

தமிழர் வரலாற்றில் சோழர்கள் முக்கியத்துவம் வாய்ந்த பேரரசாக விளங்குகிறார்கள். சோழர்களின் கலாச்சாரம், ஆவணங்கள், ஆட்சி முறைகள் மற்றும் செயல்கள் இன்றும் ஆராயப்படுகின்றன. ஆதித்த கரிகாலனின் படுகொலை மற்றும் தொடர்புடைய நிகழ்வுகள், சோழர் காலத்தின் அவசர நிலைகளை வெளிப்படுத்துகின்றன. நீண்ட வரலாற்றைக் கொண்ட சோழர்கள் பற்றிய சில தலைப்புகளின் கீழ் இக்கட்டுரையில் நாம் காண்போம்.

தலைநகரங்கள்

1. முற்காலச் சோழர்கள் காவிரிப்பூம்பட்டினம், உறையூர் மற்றும் திருவாரூர் நகரங்களை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர்.

2. இடைக்கால சோழர்கள் தஞ்சை, கும்பகோணம் மற்றும் சிதம்பரம் நகரங்களை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர்.

3. பிற்காலச் சோழர்கள் கங்கைகொண்ட சோழபுரம், பழையாறை மற்றும் தாராசுரம் நகரங்களை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர்.

சிறப்புகள்

1. தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற, முதல் நீர்ப்பாசன திட்டம் கொண்ட அணை என பரவலாக அறியப்படும் கல்லணையை கி.பி 1 ஆம் நூற்றாண்டில் திருச்சி அருகே கரிகால சோழன் கட்டினார்.

2. பெரிப்ளசு என்ற பண்டைய கிரேக்க நூல், முற்காலச் சோழர்களின் நாட்டையும், அதன் நகரங்கள், துறைமுகங்கள், வர்த்தகம் போன்றவற்றை போற்றி உள்ளது.

3. பேரரசுகளின் காலத்தில் தந்தையும் மகனும் இணைந்து ஆட்சி புரிவது மிகவும் குறைவாகவே நடக்கும் செயல் என்ற நிலையில், 1012 இல் ராஜராஜ சோழன் தனது மகனான முதல் ராஜேந்திர சோழனுக்கு இணை அரசனாக பட்டம் சூட்டினார்.

4. முதலாம் ராஜராஜ சோழன் தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டினார், மேலும், முதலாம் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டினார். 

5. இலங்கை, மாலத்தீவுகள், கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, போர்னியோ போன்ற பல்வேறு நாடுகளை சோழ அரசர்கள் கைப்பற்றினர்.

6. கடல் மாநகரங்களை சோழர்கள் போல எந்த இந்திய பேரரசும் கைக்கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

7. பிற்காலச் சோழர்கள் பட்டியலில், விசயாலயச் சோழன் முதல் அதிராஜேந்திர சோழன் வரை, நேரடி சோழ வாரிசுகளாக ஆட்சி புரிந்தனர். இதன் பின்னர், சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்பட்ட முதலாம் குலோத்துங்க சோழனின் சாளுக்கிய சோழ வம்சம் ஆட்சியை தொடர்ந்தது.

விமர்சனங்கள்

1. முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சி "பார்ப்பனர்-வேளாளர் கூட்டணி" (மதம்-வணிகம்) தரப்புக்கு பொற்காலமாக இருந்தது.

2. பிற சமயங்களை ஒதுக்கி, வைதீக ரீதியிலான சைவ சமயத்தை வளர்த்தார்கள்.

3. சிறுதெய்வ வழிபாட்டை ஒதுக்கி, பெருந்தெய்வ வழிபாட்டை ஊக்குவித்தார்கள்.

4. சோழர்களின் கலைத்திறன் மெச்சத்தக்கது, ஆனால் ஆட்சிமுறை மக்களுக்கு எதிரானது.

5. இறுதி காலங்களில் உழுகுடி, வெட்டிக்குடி, வணிகக்குடி இடையிலான பிரச்சனைகள் மற்றும் அதிக வரி விதிப்பு சோழர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.

6. ராஜராஜ சோழனையும் ராஜேந்திர சோழனையும் பாராட்டி பேசும் இந்து சாதியினர் சாளுக்கிய சோழ வம்சத்தின் ஆட்சியைப் பற்றி பேசுவதில்லை. சுருக்கமாக, சுங்கம் விதித்த சோழனைப் பற்றி பேசுகிற கூட்டம் சுங்கம் தவிர்த்த சோழனைப் பற்றி மெச்சுவதில்லை.

சாளுக்கிய சோழ வம்சம்

ராஜராஜ சோழன், தனது மகளான குந்தவைக்கு, சாளுக்கிய நாட்டில் (இன்றைய ஆந்திராவின் கோதாவரி-கிருஷ்ணா பகுதி) வேங்கியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த விமலாதித்தனுக்கு மணம் முடித்தார். அவர்களது மகன் ராஜராஜ நரேந்திரன், முதலாம் ராஜேந்திர சோழனின் மகளான மங்கை தேவியை மணம் முடித்தார்.

முதலாம் ராஜராஜ சோழனின் எள்ளுப் பேரனான வீரராஜேந்திர சோழனின் மகனான அதிராஜேந்திர சோழன் வாரிசு இல்லாமல் இறந்ததால், கீழைச் சாளுக்கிய அரச மரபைச் சேர்ந்த ராஜராஜ நரேந்திரனின் மகன், கீழைச் சாளுக்கிய இளவரசன் "முதலாம் குலோத்துங்க சோழன்" சோழ நாட்டை ஆட்சி புரிய தொடங்கினார். இதனால், சோழர்களின் ஆட்சி சாளுக்கிய சோழ வம்சமாக மாறியது.

இலங்கையில் சோழர்கள்

பல்வேறு சோழ அரசர்கள், பல்வேறு காலகட்டங்களில், இலங்கை அரசர்களுக்கு எதிராக போரிட்டனர். குறிப்பாக, முதலாம் ராஜராஜ சோழன் இலங்கையை கைப்பற்றி அப்பகுதிக்கு “மும்முடி சோழ மண்டலம்” என பெயரிட்டார். 1070 இல் முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிப் பொறுப்புக்குப் பெற்றார். சாளுக்கியர்கள், கலிங்கர்கள், பாண்டியர்கள், சேரர்கள் உள்ளிட்ட பல்வேறு போர்களில் ஈடுபட்ட முதலாம் குலோத்துங்க சோழன், இலங்கையில் சோழப் படைகளை வழிநடத்த, அவரது மைத்துனன் ராஜேந்திரனை அனுப்பினார்.

சோழர்களை தோற்கடிக்க, முதலாம் விஜயபாகு சிங்களப் படைகளை திரட்டினார். மேலும், சோழர்களுடன் நேரடி மோதலில் வெற்றி பெறுவது கடினம் என்பதை உணர்ந்த முதலாம் விஜயபாகு, ஒருபுறம் இரகசியத் தாக்குதல்களையும் மறுபுறம் நேரடி தாக்குதல்களையும் நடத்துவதற்காக படைகளை அனுப்பினார். இதே காலகட்டத்தில், பல்வேறு உள்நாட்டு போர்களால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, சோழப் படையினர் இலங்கை மீதான கவனத்தை கைவிட்டு, தங்கள் தாய்நாட்டுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மும்முடிச் சோழமண்டலத்தை "பொலன்னறுவை ராஜ்ஜியம்" எனப் பெயரிட்டு, முதலாம் விஜயபாகு சுதந்திர இலங்கை அரசை நிறுவினார்.

பிற்காலத்தில், பொலன்னறுவை ராஜ்ஜியத்தின் முதலாம் பராக்கிரமபாகு, பாண்டியர்களின் அரியணை சச்சரவில் முதலாம் பராக்கிரம பாண்டியரை ஆதரித்தார். இதற்கு எதிராக, இரண்டாம் ராஜராஜ சோழன் குலசேகர பாண்டியனை ஆதரித்தார். சிங்களப்படைகள் விரைந்து செயல்படுவதற்கு முன்பே, சோழர்களின் ஆதரவால் முதலாம் பராக்கிரம பாண்டியரை கொன்று குலசேகர பாண்டியன் அரியணை ஏறினார். இதற்குப் பிறகு, முதலாம் பராக்கிரம பாண்டியனின் மகன் மூன்றாம் வீரபாண்டியன் அரியணை ஏறுவதற்காக முதலாம் பராக்கிரமபாகுவின் உதவியைப் பெற்றார். அதையொட்டி, குலசேகர பாண்டியன் சோழர்களிடம் தஞ்சம் புகுந்தார். ஆனால் முடிவில், மூன்றாம் வீரபாண்டியனின் மகன் விக்ரம பாண்டியன் சிங்களப்படைகளை வீழ்த்தி, சோழர்களின் ஆதவுடன் அரியணை ஏறினார்.

ஆட்சியில் பொன்னியின் செல்வன்

1. அண்ணன் கண்டராதித்த சோழனின் மகன் மதுராந்தக சோழன் என்ற உத்தம சோழன்.

2. கண்டராதித்த சோழனின் தம்பி அரிஞ்சய சோழனின் மகன் சுந்தர சோழன்.

3. சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன், ஒரே மகள் குந்தவை மற்றும் இளைய மகன் முதலாம் ராஜராஜ சோழன்.

4. குந்தவையின் கணவர் வந்தியத்தேவன், மற்றும் வந்தியத்தேவன்-குந்தவை தம்பதியினருக்கு குழந்தை இல்லை.

கண்டராதித்த சோழன் சிவச் சாமியாராகிறார். அவரது மகன் மதுராந்தக சோழன் குழந்தை என்பதால், கண்டராதித்த சோழனின் தம்பி அரிஞ்சய சோழன் அரியணை ஏற்கிறார். அவருக்கு பிறகு, அவரது மகன் சுந்தர சோழன் அரியணை ஏற்கிறார். இப்போது, சுந்தர சோழன் இறந்துவிடுகிறார். கண்டராதித்த சோழனின் மகன் மதுராந்தக சோழன் அரியணை ஏற்கிறார். அவருக்கு பின்னால், சுந்தர சோழனின் இளைய மகன் ராஜராஜ சோழன் (பொன்னியின் செல்வன்) அரியணை ஏற்கிறார்.

ராஜராஜ சோழன் வழியிலான சோழ ஆட்சி தென்னிந்தியாவில் புகழ்பெற்றது; கடல் கடந்து கொடி நாட்டியது என்றெல்லாம் போற்றினாலும், ராஜராஜ சோழன் ஆட்சியானது பார்ப்பனர்களுக்கு பொற்காலமாக விளங்கியது மற்றும் பாமர மக்களுக்கு பாரமாக அமைந்தது என்பது வரலாற்றாசியர்களின் கருத்தாகும்.

ஆதித்த கரிகாலன் படுகொலை

சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை கொல்கிறார். அதை தொடர்ந்து, ஆதித்த கரிகாலனை பாண்டியனின் ஆபத்துதவிகளான ரவிதாசன், சோமன், பரமேஸ்வரன் உள்ளிட்ட பார்ப்பனர்கள் கொல்கிறார்கள். மூத்த மகன் ஆதித்த கரிகாலன் முதலில் இறந்துவிடுகிறார்; அடுத்ததாக அவரது தந்தையான சோழ அரசர் சுந்தர சோழன் துயருற்று இறந்துவிடுகிறார். அதன் பின்னர், கண்டராதித்த சோழனின் மகன் மதுராந்தக சோழன் ஆட்சிக்கு வருகிறார், ராஜராஜ சோழன் இளவரசர் ஆகிறார்.

ஆதித்த கரிகாலனை கொன்ற குற்றவாளிகள் பற்றி அரசர் மதுராந்தக சோழன் விசாரிக்கவில்லை என்றும், அதற்கான கேள்விகளை எழுப்பிய குந்தவையின் கணவர் வந்தியத்தேவனை சிறையில் அடைத்ததாகவும் வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, மதுராந்தக சோழனுக்குப் பிறகு ஆட்சி பொறுப்பேற்ற ராஜராஜ சோழன், குற்றவாளிகளான ரவிதாசனின் கூட்டத்தை கண்டறிந்து, அவர்களை கொல்லாமல் நாடு கடத்துகிறார். அத்துடன், வந்தியத்தேவனையும் விடுதலை செய்கிறார். மேலும், பார்ப்பனர்களை கொல்வது பாவம் என்ற மதத் தத்துவத்தால், ரவிதாசன் உட்பட பார்ப்பன கூட்டத்தை ராஜராஜ சோழன் கொல்லவில்லை என வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.

உடையார்குடி கல்வெட்டு

ஆதித்த கரிகாலனை கொன்ற கொலையாளிகள் பார்ப்பனர்கள் என்பதற்கான ஆதாரம், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலூகா, உடையார்குடியில் அமைந்துள்ள அனந்தீஸ்வரர் கோவிலின் கருவறை மேற்கு புற சுவட்டில் காணப்படும் உடையார்குடி கல்வெட்டாகும்.

ஆதித்த கரிகாலனின் முன்னாள் காதலியும், ஆதித்த கரிகாலன் கொன்ற வீரபாண்டியனின் மகளுமான  நந்தினி என்ற கற்பனை கதாபாத்திரத்தின் சதி வலைப்பின்னலே, ஆதித்த கரிகாலனின் மரணத்திற்கு காரணம் என்றொரு பிரபல நாவலின் கதை, பார்ப்பனர்களை பழிப்பதில் இருந்து காப்பாற்றியது. ஆனால், முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் எழுப்பப்பட்ட உடையார்குடி கல்வெட்டுப் படி சொல்ல வேண்டுமெனில், "ஆதித்த கரிகாலனை கொன்ற கொலையாளிகள் பார்ப்பனர்கள்". ஆதித்த கரிகாலன் மறைந்த பிறகு, மதுராந்தகச் சோழன் அரசராக ஆட்சிப் பொறுப்பேற்றார். ராஜராஜ சோழன், மதுராந்தகச் சோழன் மறைந்த பிறகு, அரசனாகி பார்ப்பனர்களுக்கு அனுசரணையாக ஆட்சி புரிந்தார்.

பின் குறிப்பு = முதலாம் ராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் எழுப்பப்பட்ட திருவாலங்காட்டுச் செப்பேட்டில் "ஆதித்தன் மறைந்தான், காரிருள் சூழ்ந்தது" என்ற சொற்றொடரும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இதில் ராஜராஜசோழனின் இளம் வயது குறித்து வரலாற்றாசியர்கள் மத்தியில் ஐயப்பாடு நிலவுகிறது.

படுகொலையின் பின்னணி

முதலாம் ராஜராஜ சோழன் தனது மகளுக்கு குந்தவை என்று பெயரிட்ட நிலையில், குந்தவை ராஜராஜ சோழனுக்கு அக்கா அல்லது தாய் என்ற விவாதங்கள் உள்ளன. ராஜராஜ சோழனின் ஆட்சியில் கட்டுங்கடா அதிகாரம் செலுத்திய குந்தவை உண்மையில் ராஜராஜ சோழன் அரியணை ஏற, பார்ப்பனர்களின் உதவியை நாடி ஆதித்த கரிகாலனை கொன்றாரா? அல்லது அரியணைக்கு ஆசைப்பட்டு மதுராந்தகச் சோழன் பார்ப்பனர்களின் உதவியை நாடி ஆதித்த கரிகாலனை கொன்றாரா? என்பதற்கு விடையில்லை. எப்படியாகினும், மிக சிறுவயதில் இருந்த முதலாம் ராஜராஜ சோழன், நிச்சயம் ஆதித்த கரிகாலனை கொன்றிருக்க முடியாது.

மொத்தத்தில், ஆதித்த கரிகாலன் படுகொலையால் பார்ப்பனர்கள், மதுராந்தகச் சோழன், ராஜராஜ சோழன், குந்தவை மற்றும் சிற்றரசுகள் லாபம் பெற்றார்கள் என்றால் அது மிகையாகாது. 

காந்தளூர் சாலைப் போர் 

அரியணை ஏறியவுடன், ராஜராஜ சோழன் பங்கெடுத்த போர்களில் காந்தளூர் சாலைப் போர் முக்கியமானதாகும். சோழனுக்கும் சேரனுக்கும் இடையே நடைபெற்ற போரில், சோழப் படைகள் காந்தளூர் கல்விச் சங்கத்தை அழித்தனர். காந்தளூர் கல்விச் சங்கத்தில் பயிற்சி பெற்ற பார்ப்பனர்கள், ஆதித்த கரிகாலனை கொன்றதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக ராஜராஜ சோழன் காந்தளூர் சாலைப் போரை தொடுத்தாரா? அப்படியெனில், ஆதித்த கரிகாலனை படுகொலை செய்த பார்ப்பனர்களை கொல்லாமல் நாடு கடத்திவிட்டு, காந்தளூர் கல்விச் சங்கத்தை முற்றிலும் அழித்தது ஆய்வுக்குரியது.

முடிவுரை 

ஆதித்த கரிகாலன் பார்ப்பனர்களை எதிர்த்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. எடுத்துக்காட்டாக, சேர நாட்டில் பார்ப்பனர்களின் கலசத்தை ஆதித்த கரிகாலன் எட்டி உதைத்தது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், ஒரு கொலை நடக்கிறதானால், அதன் பயன் யாருக்கு போய் சேர்கிறது என்பதை பொறுத்து தான் விசாரணை அமையும். அந்த வகையில், ஆதித்த கரிகாலன் படுகொலை யாருக்கு பயன் தந்திருக்கிறது? சோழ ஆட்சிக்காலத்தில் கொடி கட்டி பறந்த பார்ப்பனர்களுக்கும், எதிர்பாராதவிதமாக ஆட்சிக்கு வந்த மதுராந்தக சோழனுக்கும், பிரமாண்டத்தை பரப்பிய ராஜராஜ சோழனுக்கும் தான்  அந்த பயன் சென்றடைந்து இருக்கிறது.

விவரணைகள் 

ராஜமாணிக்கனார், சதாசிவ பண்டாரத்தார், நீலகண்ட சாஸ்திரி மற்றும் பல வரலாற்றாசிரியர்கள் எழுதிய சோழர்களின் வரலாற்று நூல்கள்.

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

இஸ்ரேல்-ஈரான் மோதல் மற்றும் யூத-அரேபிய உறவுகள்

இஸ்ரேல்-ஈரான் மோதல் மற்றும் யூத-அரேபிய உறவுகள்

குறிப்பு = இந்த சுருக்கமான கட்டுரை, ஆழமாக (Depth) விவரிக்காமல், குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் மேலோட்டத்தை அகலமாக (Broad) வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்பின் காலகட்டங்களை உள்ளடக்கிய இந்த கட்டுரை ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் பொதுவான தகவல்களை வழங்குகிறது. இது தலைப்பின் இறுதி ஆய்வாக கருதப்படக்கூடாது. ஒரு முழுமையான புரிதலுக்காக, தலைப்பில் இன்னும் விரிவான ஆதாரங்களைப் பார்க்க வாசகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

பொருளடக்கம் 
  1. முகவுரை 
  2. தற்கால போர்கள்
  3. ஒளிந்திருக்கும் உள் அரசியல்
  4. புவிசார் அரசியல்
  5. ஈரான் அரசியல் 
  6. இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்
  7. பின்னிணைப்பு
  8. விவரணைகள்
  9. முடிவுரை 
முகவுரை 

ஒரு வல்லரசு மற்றொரு வல்லரசின் அண்டை நாடுகளுக்கு அல்லது எதிரி நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்கும் போது, ​​அதனை வல்லரசுகள் பெரிதாக அலட்டிக் கொள்ளாது. ஆனால், தொழில் ரீதியாக ஆயுதங்களை வழங்குவதோடு நிறுத்தாமல், ஒரு வல்லரசு மற்றொரு வல்லரசின் விவகாரங்களில் நேரடியாக தலையிட்டால், அது குறிப்பிடத்தக்க மோதலுக்கு வழிவகுக்கும். மேலும், வல்லரசுகள் தங்களுக்கிடையே நேரடி மோதலில் ஈடுபட்டால், அது உலகப் போர் அல்லது மிகப் பெரிய மோதலாக விரிவடையக்கூடிய சாத்தியம் உள்ளது. இந்த கட்டுரையில், 2020 முதல் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க போர்களை வரலாற்று சூழலுடன் சுருக்கமாக ஆராய்வோம்.
தற்கால போர்கள்

தற்கால போர்களின் நிகழ்வுகள் 2014 இல் "ரஷ்யா-கிரிமியா" மோதலுடன் தொடங்கின. இது உலகளாவிய அரசியல் பதட்டத்திற்கு சாத்தியமான ஊக்கமாக கருதப்பட்ட போதிலும், ரஷ்யா-கிரிமியா மோதல் உலகத்தின் கவனத்தைப் பெறவில்லை. அதன் தொடர்ச்சியாக, 2022 இல் "ரஷ்யா-உக்ரைன்" மோதல் ஏற்பட்டது. அதன் பின், யூத-அரேபிய இடையிலான மோதலாக 2023 இல் "இஸ்ரேல்-பாலஸ்தீனம்" மோதல் உருவானது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதலின் தாக்கத்தால் 2024 இல் "இஸ்ரேல்-ஈரான்" இடையிலான பதட்டங்களை உருவாக்கி, யூத-அரேபிய பிரிவின் பரந்த சூழலை பரிணமித்தது.

மொத்தத்தில், ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் மற்றும் இஸ்ரேல்-ஈரான் போர் சூழல்கள் உலக நாடுகளையும் ஊடகங்களையும் அதிக அளவில் ஈர்த்துள்ளன.

ஒளிந்திருக்கும் உள் அரசியல்

சபஹார் துறைமுகம் (Chabahar Port) தொடர்பாக இந்தியாவுடன் ஈரான் செய்துள்ள ஒப்பந்தத்தை அமெரிக்கா ரசிக்கவில்லை. இந்த பின்னணியில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுள்ள நிலைப்பாடு, யூத வழி வந்த இஸ்ரேலின் வளர்ச்சிக்கு எதிராக ஷியா வழி வந்த ஈரான் கொண்டுள்ள நிலைப்பாடு போன்றவை கூர்ந்து கவனிக்க வேண்டியதாகும்.

யூத-அரேபிய போரில் ரஷ்யாவின் பங்கு ஆய்வுக்குரியதாகும், ஏனெனில் தற்சமயம் ரஷ்யா வகிக்கும் நடுநிலைமை முக்கியத்துவம் வாய்ந்தது. அதே நேரத்தில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. ஒரு வேளை, ரஷ்யா களத்தில் இறங்கி அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தால், யூத-அரேபிய மோதலில் குறிப்பாக "இஸ்ரேல்-ஈரான்" மோதல் உலகளாவிய மூன்றாம் உலகப் போராக அல்லது மீண்டும் ஒரு பனிப்போராக வெடிக்கும் வாய்ப்பு உள்ளது.
புவிசார் அரசியல்

ஈரானியர்கள் ஷியா (Shia) பிரிவை, பாலஸ்தீனியர்கள் சன்னி (Sunni) பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆவர். எனவே, இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் என்பது பாலஸ்தீனிய அரசியல் கோரிக்கைகளை ஆதரிப்பதற்காக அல்ல; மாறாக, இஸ்ரேலின் பிராந்திய மேலாதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாகும்.

சன்னி பிரிவை சேர்ந்த பாலஸ்தீனியர்கள், "ஏமன், ஈரான், ஈராக், லெபனான், சிரியா" போன்ற ஷியா பிறை (Shiite Crescent) நாடுகளில் உள்ள அரசியல் செல்வாக்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குகிறார்கள். ஷியாவை சேர்ந்த சிரியா மற்றும் பிற பிராந்தியங்களுக்கு எதிரான சன்னி தலைமையிலான ISIS போர் போன்ற பல்வேறு மோதல்களின் மூலம், சன்னி தரப்பினர் ஷியா சக்தி பலவீனமடைவதை விரும்புகிறார்கள்.

மொத்தத்தில், ஷியா நாடுகள், சன்னிகள் அதிகமாக உள்ள பாலஸ்தீனப் போராட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. மாறாக, அரேபியர்களுக்கு (சன்னிகள்) எதிராக யூத இஸ்ரேலின் அரசியல் எழுச்சி, ஈரான் மற்றும் ஈராக் (ஷியாக்கள்) நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. எனவே, இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் போரிடுகிறது. அதாவது, இஸ்ரேல்-ஈரான் மோதல் புவிசார் அரசியலில் (Geopolitical Dynamics) வேரூன்றியுள்ளது.

ஈரான் அரசியல் 

தற்கால போர்களின் நெருக்கடியான சூழலில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விமான விபத்தில் மரணித்துள்ளார். ஈரானின் அடுத்த உச்சத் தலைவராக இப்ராஹிம் ரைசி வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இந்த விமான விபத்தை சாதாரணமாகக் கருத முடியாது. இதற்கிடையில், ஈரானும் உலக அரசியலும் புதிதல்ல. எடுத்துக்காட்டாக, 1953 மற்றும் 1979 சம்பவங்களை சுருக்கமாகப் பகிர்கிறேன். 

1951 இல் ஈரான் எண்ணெய் தொழிலில் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கா உரிமை கொண்டாடுவதை விரும்பாத ஈரான் பிரதமர் முகமது மொசாதேக், ஈரான் எண்ணெய் தொழிலை தேசியமயமாக்கினார். இதற்கு எதிராக, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கா அரசுகள் 1953 இல் ஈரான் அரசை சதித்திட்டம் தீட்டி கவிழ்த்தனர். இதற்காக, அமெரிக்காவின் CIA மற்றும் பிரிட்டிஷின் MI6 உறுதுணையாகப் பணியாற்றின. வல்லரசு ஆதரவில், ஈரானின் அனைத்து அதிகாரங்களையும் புதிதாக பெற்ற பஹ்லவி, ஈரான் அரசராக அமர்ந்தார். அரசரான பஹ்லவி, ஈரான் எண்ணெய் தொழிலில் அமெரிக்க நிறுவனங்களுக்கு 40% உரிமையை வழங்கினார்.

1953 முதல் 1979 வரை, மேற்கத்திய நாடுகளின், குறிப்பாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஆதரவால் ஆட்சி செய்த பஹ்லவி ஆட்சியை விரும்பாத ஈரான் மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். புரட்சியின் வெளிப்பாடாக, பஹ்லவி ஆட்சி கலைக்கப்பட்டு, கொமேனி (Khomeini) ஈரானின் உச்சத் தலைவராக புதிய பதவிக்கு வந்தார். ஷியா பிரிவை சேர்ந்த பஹ்லவியின் மேற்கத்திய அடிப்படையிலான ஆட்சி தூக்கியெறியப்பட்டு, அதே பிரிவை சேர்ந்த கொமேனியின் இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படையில் மதவாத ஆட்சி அமைக்கப்பட்டது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்

ஆபிரகாமின் வழித்தோன்றல்களான பண்டைய இஸ்ரவேலர்கள் கானானில் குடியேறினர். கானானில் ஏற்பட்ட பஞ்சம், இஸ்ரவேலர்களை எகிப்துக்கு குடிபெயர வழிவகுத்தது; அங்கு அவர்கள் இறுதியில் அடிமைப்படுத்தப்பட்டனர். பத்து கட்டளைகளை பெற்ற பிறகு, மோசே இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து வாக்களிக்கப்பட்ட தேசத்தை (The Promised Land) நோக்கி அழைத்து சென்றார். பாலைவனத்தில் தண்ணீர் வழங்கல் தொடர்பாக மோசேயின் கீழ்ப்படியாமை (Striking the Rock), அவரை வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் நுழைவதை தடுத்தது. மோசேக்கு பதிலாக, யோசுவா இஸ்ரவேலர்களை கானானுக்கு அழைத்து சென்றார்; அங்கு அவர்கள் கானானிய பழங்குடியினரை எதிர்கொண்டனர்.

பல்வேறு பேரரசுகளின் வரலாற்றை கொண்ட இன்றைய நாடுகளின் பகுதிகளை கானான் உள்ளடக்கியது. 7 ஆம் நூற்றாண்டு தொடங்கி, கானானில் அரேபியர்களின் செல்வாக்கால் மதமாக இஸ்லாம் உருவானது. 1917 இல் பால்ஃபோர் பிரகடனம் (Balfour Declaration), யூத தாயகத்தை ஆதரித்தது; பிரிட்டிஷ் ஆட்சியின் போது, பாலஸ்தீனத்தில் யூதர்கள் அதிக அளவில் குடியேற்றத்திற்கு வழிவகுத்தது. பல நூற்றாண்டுகளாக ஒட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த பாலஸ்தீனம், சுயநிர்ணயம் மற்றும் மாநில உரிமையை கோரி வந்த நிலையில், 1948 இல் உருவாக்கப்பட்ட இஸ்ரேல், இஸ்ரேல் எதிர் நிலையில் பாலஸ்தீனம் என இரு நாட்டு மோதலுக்கு வழிவகுத்தது.

யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்களுக்கு புனிதமான இடமாகக் கருதப்படும் கோவில் மலையை (Temple Mount) இஸ்ரேல் பராமரிக்கிறது. கானான் பகுதியில் அமைந்துள்ள காசா (Gaza Strip) பகுதியை பாலஸ்தீனம் நிர்வகிக்கிறது. காசா மற்றும் கோவில் மலை, இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான அரசியல், மத மற்றும் கலாச்சார மோதல்களுக்கு மைய புள்ளிகளாக மாறி, யூத-அரபு மோதலின் அடிப்படையை உருவாக்குகின்றன.

யூதர்கள் தங்களை கடவுளின் குழந்தைகள் என்றும், உலகின் மூத்த குடிமக்கள் என்றும் கருதுகின்றனர். யூத மதத்தில் வேரூன்றிய கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்கள், உலகளாவிய சமூகம், அரசியல், பொருளாதாரம் மற்றும் மத விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்துவதால், மேட்டிமை மனப்பான்மை கொண்ட யூத மதம் அதை விரும்பவில்லை. இதுவே தொடரும் மோதல்களின் அடிப்படையாக இருக்கிறது என வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.
முடிவுரை 

யூத-அரேபிய மோதலுக்கு கிறிஸ்தவ பெரும்பான்மையுள்ள நாடுகள் மத்தியஸ்தப் பாத்திரத்தை கையாண்டு வந்தாலும், பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்திய போது, அந்நாடுகள் செயலற்ற நிலையில் வேடிக்கை பார்த்தன. இருப்பினும், இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுத்த போது, திடீரென விழித்து கொண்டது போல கண்டனங்களை தெரிவித்தன. இதனால், தற்கால போர்களில் முக்கியமாக "இஸ்ரேல்-ஈரான்" மோதல் தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. இந்த மோதல் தனிப்பட்ட நாடுகளுக்கிடையே வளைகுடா போராக விரிவடையலாம், வல்லரசுகள் ஈடுபட்டால் மூன்றாம் உலகப் போராக பரிணமிக்கலாம், அல்லது அமைதிக் கொடியை உயர்த்தி, அடுத்தடுத்து போரே நடைபெறாமல் போகலாம்.

உலக நாடுகளில் நிலவும் அரசியல் நிகழ்வுகள் போர் பதட்டங்களை மட்டுமல்ல, பொருளாதார இழப்புகளை அதிகரிக்கவும் செய்கின்றன. இதனால், இந்த மோதலின் உலகளாவிய விளைவுகளையும் அடுத்ததாக வரவிருக்கும் நிலைமைகளையும் பொறுத்திருந்து கவனிக்க வேண்டும்.

பின்னிணைப்பு 

// நேரு-மோடி நிலைப்பாடு //

வரலாற்று ரீதியாக, 1950 களுக்குப் பிறகு, பாலஸ்தீனிய நிலங்கள் இஸ்ரேலால் சர்வதேச ஆதரவும் எதிர்ப்பும் எதிர்கொண்ட நிலையில் ஆக்கிரமிக்கப்பட்டன. இந்நிலையில், நேருவின் ஆட்சிக்காலத்தில், இந்தியா பாலஸ்தீனின் கோரிக்கைகளை ஆதரித்தது. ஆனால் மோடியின் ஆட்சிக்காலத்தில், இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கத் தொடங்கியது.

// ஆரிய அரசியல்  // 

பாலஸ்தீனம் முதல் ஈரான் வரை உள்ள இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகளை இந்துத்துவா கும்பல் தீவிரமாக ஆதரிக்கிறது. இவ்வாறு, இஸ்ரேலுக்கான இந்துத்துவா கும்பலின் ஆதரவு ஒரு வரலாற்று தொடர்பைக் கொண்டுள்ளது. அதாவது, யூதர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும், அவர்கள் அரசியல் நடவடிக்கைகள் மூலம் பாலஸ்தீனத்தில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறார்கள். அதே நேரத்தில், ஆரியர்கள் (இந்துத்துவா கும்பல்) எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும், அவர்கள் மத சடங்குகள் மூலம் இந்தியாவில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறார்கள். மேலும், யூதர்களும் ஆரியர்களும் பிற இனங்களுடன் கலந்தாலும், இனத்தூய்மை பற்றி இன்னமும் பேசிக் கொண்டிருப்பது விசித்திரமானது.

விவரணைகள்

யூதம் - கிறிஸ்தவம் - இஸ்லாம் ஓர் பார்வை

https://chocksvlog.blogspot.com/2020/10/1.html

ஆதாம் ஏவாள் வம்சமும் ஆபிரகாமிய மதங்களும்

https://chocksvlog.blogspot.com/2020/11/3.html

Israeli-Palestinian Conflict

https://chocksvlog.blogspot.com/2023/10/israeli-palestinian-conflict.html

Fundamentals of Abrahamic Religions

https://chocksvlog.blogspot.com/2020/11/2.html




Scientist Einstein and Socialist Nehru on Israel and Palestine


Israel’s first PM asked Nehru to help promote peace in the Region


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

சோழர்கள் பற்றி சில செய்திகள்

சோழர்கள் பற்றி சில செய்திகள் விளக்கம் =  இந்த சுருக்கமான கட்டுரை, ஆழமாக (Depth) விவரிக்காமல், குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் மேலோட்டத்தை அகலம...