- முகவுரை
- தமிழர்கள் மற்றும் இரும்பு
- தொழில்நுட்ப வளர்ச்சி: ஒப்பீடு
- திராவிட மரபின் பாகங்கள்
- திராவிடர் மற்றும் ஆரியர்
- இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு
- என்ன செய்தோம்?
- முடிவுரை
- பின்ணினைப்பு
- விவரணைகள்
தொழில்நுட்ப கால வரிசையில் (கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம்), தமிழ் நிலப்பரப்பானது சிந்து சமவெளி நிலப்பரப்பை விட தொழில்நுட்ப ரீதியாக விரைவில் முன்னேறியது, அல்லது சிந்து சமவெளி தமிழ் நாட்டை விட பின்னடைந்திருந்தது என கூறலாம். அதே நேரத்தில் தொடர் தொல்லியல் ஆய்வுகள் மட்டுமே சிந்து சமவெளிக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள இதர தொடர்புகளை எடுத்துக்காட்டும்.
பழங்கால ரோமாபுரிக்கும் சிரியாவுக்கும் அதிகளவில் உருக்கு (Wootz Steel) ஏற்றுமதி செய்தது தமிழ்நாட்டின் ஈரோட்டில் உள்ள கொடுமணல் நகரமாகும். சேரர்கள் ஆண்ட காலகட்டத்தில் கொடுமணலில் இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் அறியப்பட்டது. அதனால், கொடுமணல் ஏற்றுமதி செய்த உருக்கு மூலம் பல்வேறு வாள்கள் வடிவமைக்கப்பட்டன, உதாரணமாக சிரியாவின் டமாஸ்கஸ் ஸ்டீல் (Damascus Steel).
வரலாற்று ரீதியாக, கொடுமணல் வாள் உலகின் நவீன வாள் (Modern Swords) பயன்பாட்டுக்கும், கலப்பு உலோக (Alloys) ஆராய்ச்சிக்கும் துவக்கமாக இருந்தது. மேலும், மின்சாரத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மைக்கேல் பாரடே (Michael Faraday) 1819 இல் மேற்கொண்ட கொடுமணல் வாள் பற்றிய ஆராய்ச்சி, உலோகத் தொழில்நுட்ப வரலாற்றில் முக்கிய பங்காற்றியுள்ளது.
// பா.ஜ.கவின் மௌனம் //
உலகளவில் இரும்புக் காலத்தை தொடங்கிய மண் மற்றும் இனம் என்று நாடே பெருமிதத்துடன் கொண்டாட வேண்டிய தருணம் இது. அதன்படி, “இரும்பின் தொன்மை” என்பது தமிழ்நாட்டின் பெருமை மட்டுமல்ல, இந்திய ஒன்றியத்தின் பெருமையும் ஆகும். தமிழ்நாட்டின் இரும்புக் காலம் குறித்து உண்மையான ஆர்வத்துடன் பேசிய ஒரே தேசிய தலைவர் ராகுல்காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் மேடைகளில் தமிழ் வரலாற்றை மார் தட்டிக் கொள்ளும் 56 இன்ச் மார்புள்ளவர், “இரும்பின் தொன்மை” குறித்து ஒரு சொல்லும் பேசவில்லை. பார்ப்பனர்களோ, ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை உருட்டிக்கொண்டே இருக்கிறார்கள். தொல்லியல் ஆய்வறிக்கைகள் ஆதாரமாக இருந்தாலும், அவற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.
பார்ப்பனர்களுக்கும், அம்பானிக்கும், அதானிக்கும் அடிமையாக இருக்கும் பிரதமரை, அமைச்சர்களை மற்றும் அவர்களை ஆதரிக்கும் கட்சிகளைக் குறித்து நினைத்தால், "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?” என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது". எது எப்படியாகினும், தண்ணீருக்குள் பந்தை அழுத்தினாலும் அது மீண்டும் மேலே வருவது போல, “இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி குமரி முனையிலிருந்து எழுதப்பட வேண்டும்” என்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கூறியது போல், வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பிலிருந்து தொடங்கும். நாளைய உலக வரலாறு அதை எட்டுத்திக்கும் சொல்லும்!