Chocks: January 2025

Friday, January 24, 2025

தமிழ்நாட்டில் இரும்பு காலம்

தமிழ்நாட்டில் இரும்பு காலம்

கால வரிசை = முதலில் கற்காலம் அதன் பிறகு வெண்கல காலம் அதன் பிறகு இரும்பு காலம்!

பொருளடக்கம்
  1. முகவுரை 
  2. தமிழர்கள் மற்றும் இரும்பு
  3. தொழில்நுட்ப வளர்ச்சி: ஒப்பீடு
  4. திராவிட மரபின் பாகங்கள்
  5. திராவிடர் மற்றும் ஆரியர்
  6. இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு
  7. என்ன செய்தோம்?
  8. முடிவுரை
  9. பின்ணினைப்பு
  10. விவரணைகள்  
குறிப்பு = பழம்பெருமை சோறு போடாது என்பதை நினைவில் கொள்வது சாலச் சிறந்தது. மேலும், வரலாற்றின் மகத்துவத்தை ஆதிக்கம் செலுத்துவதற்குப் பயன்படுத்துவது தவறு. மொத்தத்தில், வரலாற்றுத் தரவுகளை முறையாக வெளிக்கொணர்ந்து, தொன்மையைப் புரிந்து கொண்டு, எதிர்கால வளர்ச்சியை நோக்கி முன்னேறுவது தான் சிறந்தது.

முகவுரை 

தமிழ்நாட்டில் அண்மைக்கால அகழ்வாராய்ச்சிகளில் "கொடுமணல், கீழ்நமண்டி, மயிலாடும்பாறை, ஆதிச்சநல்லூர், சிவகளை" போன்ற இடங்களில் பரவலாக கண்டுபிடிக்கப்பட்ட இரும்பு பொருட்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதன்படி, உலகளவில் இரும்புக் காலம் கி.மு. 1200 இல் மேற்கு ஆப்பிரிக்காவில் தொடங்கியது என்று கூறப்பட்டு வந்த நிலையில், ஆரிய-திராவிட போரை உறுதி செய்யும் வகையில் கி.மு. 3345 லேயே (5370 ஆண்டுகளுக்கு முன்பு) தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு அறிமுகமானது என்ற அசாத்திய ஆய்வறிக்கையை 23-01-2025 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட இரும்பு பொருட்கள் உலகின் மற்ற பகுதிகளுக்கு முன்னதாக இருப்பதை நிரூபித்துள்ளது.
தமிழர்கள் மற்றும் இரும்பு

இந்தியா துணைக்கண்டத்தின் இரும்புக் காலம் கி.மு. 1400 இல் ஆரம்பமானதாகவும், இரும்பை ஆரியர்கள் கண்டுபிடித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், அதற்கு முன்னரே தமிழ் நிலப்பரப்பில் இரும்பை பிரித்து பயன்படுத்தும் தொழில்நுட்பம் இருந்தது என்பது ஆய்வறிக்கைகள் மூலம் தற்போது அறிவியல்பூர்வமாக உறுதியாகியுள்ளது. எனவே, ஆரியர்களுக்கு முன்பே தமிழர்கள் முன்னேறிய நாகரிகத்தை கொண்டவர்கள் என்பது உறுதியாகியுள்ளது.

மொத்தத்தில் இந்தியாவுக்கு இரும்பை அறிமுகம் செய்தது ஆரியர்களே என்ற வாதம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், வேதங்களை விட தமிழ் தொன்மையானது என்பதும், ஆரியர்களுக்கு முன்பே திராவிட வழித் தோன்றலான தமிழர்கள் இரும்பை கைக்கொண்டு இருந்தனர் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் தொழில் மரபு, ஆரியர்களுக்கு முன்னதாக இருந்தது என்பதையும் இது நிரூபிக்கின்றது.
தொழில்நுட்ப வளர்ச்சி: ஒப்பீடு

சிந்து சமவெளி நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் வெண்கலத்தை பயன்படுத்திய காலத்தில், தமிழ் நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் இரும்பை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்த நிலை, தமிழ் மக்கள் தொழில்நுட்ப ரீதியாக சிந்து சமவெளி மக்களைக் காட்டிலும் முன்னேறி வாழ்ந்திருக்கின்றனர் என்பதை நிரூபிக்கின்றது. Beta Carbon Dating தரவுகளின் அடிப்படையில், இரும்பு பயன்பாடு தமிழ்நாட்டில் சிந்து சமவெளி மக்களுக்குப் முன்னதாக இருந்தது என்பதை காட்டுகிறது.

தொழில்நுட்ப கால வரிசையில் (கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம்), தமிழ் நிலப்பரப்பானது சிந்து சமவெளி நிலப்பரப்பை விட தொழில்நுட்ப ரீதியாக விரைவில் முன்னேறியது, அல்லது சிந்து சமவெளி தமிழ் நாட்டை விட பின்னடைந்திருந்தது என கூறலாம். அதே நேரத்தில் தொடர் தொல்லியல் ஆய்வுகள் மட்டுமே சிந்து சமவெளிக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள இதர தொடர்புகளை எடுத்துக்காட்டும்.

கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் ஆகிய தொழில்நுட்பக் கால வரிசையில், தமிழ் நிலப்பரப்பு, சிந்து சமவெளி நிலப்பரப்பை விட தொழில்நுட்ப ரீதியாக விரைவாக முன்னேறியது. மேலும், சிந்து சமவெளி தமிழ்நாட்டை விட பின்னடைந்திருந்தது. இவ்வாறான வேறுபாடுகளை வெளிப்படுத்துவதற்கும், சிந்து சமவெளி மற்றும் தமிழ்நாட்டின் இடையே உள்ள இதர தொடர்புகளை வெளிப்படுத்துவதற்கும், தொடர்ச்சியான தொல்லியல் ஆய்வுகளே முக்கியம்.


திராவிட மரபின் பாகங்கள்

இந்த வேறுபாடுகள், சிந்து சமவெளி மற்றும் தமிழ்நாடு மக்களுக்கிடையிலான வேறுபாடுகளை காட்டுகின்றன. ஆனால் இந்த இரு நாகரிகங்களும் பரந்த திராவிட மரபின் பாகங்களாகும். சிந்து சமவெளி மற்றும் தமிழ்நாடு உட்பட பழம்பெரும் இந்தியாவில் வாழ்ந்த, வாழும் நம் அனைவருக்கும் முன்னோர்களே திராவிடர்கள். புரோட்டோ-திராவிட மொழி, இந்த இரு நாகரிகங்களின் முந்தைய மொழியாக இருந்தது. காலப்போக்கில், மொழிகள் பிரிந்து, தற்போதைய இந்தியா மாநிலங்களின் வடிவம் உருவானது. அதன்படி, இந்தோ-ஆரிய மற்றும் திராவிட மொழி குடும்பங்கள் உருவாகின.

திராவிடர் மற்றும் ஆரியர்

இந்தியா துணைக்கண்டத்தில் திராவிடர் எனக் குறிப்பிடப்படுவோர் தமிழர்கள், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், துளுவர்கள் ஆகியோரே. ஆரியர்கள் எனக் குறிப்பிடப்படுவோர் பல பிரிவுகளில் வாழும் பார்ப்பனர்களின் குழுக்கள்.  

திராவிட மரபினத்தை சேர்ந்த சிந்து சமவெளி நாகரிகமும் தமிழ்நாட்டின் நாகரிகமும் தொன்மை வாய்ந்தவை. நமக்கு மூதாதையர்கள் திராவிடர்கள்! ஆரியர்கள் இடையில் வந்தவர்கள். தமிழ் நிலப்பரப்பில் தொல்லியல் மேடுகள் கிடைத்தால், மேலும் பல புதுமையான தகவல்கள் வெளியாகக்கூடும்.

 இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு

"ஆப்பிரிக்காவிற்கு வெளியே" (Out of Africa) கோட்பாட்டின் அடிப்படையில், தற்கால மனிதர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த விருமாண்டி என்ற நபர், "ஆப்பிரிக்காவிற்கு வெளியே" கோட்பாட்டை ஆதரிக்கும் "M130" மரபணுவை கொண்டிருப்பதாக, விஞ்ஞானி பிச்சப்பன் தலைமையிலான ஆய்வுக்குழுவினரால் 2008 இல் கண்டறியப்பட்டது.

இந்த கண்டுபிடிப்பும், இரும்பின் தொன்மையும், தொல் தமிழர்களின் வாழ்வியல் வரலாறையும், அதனுடன் தொடர்புடைய தொல்பொருள் ஆராய்ச்சியும் எதிர்காலத்தில் பல தகவல்களை நமக்கு வெளிப்படுத்தக்கூடும்.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் மனிதர்களின் பரவல் குறித்து தொல்லியல் துறையின் மேலான ஆராய்ச்சிகள் புதிய தகவல்களை வெளிப்படுத்தத் தொடங்கினால், இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்று மையம் தமிழ்நாட்டில் தொடங்குவதை உறுதிப்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
 
என்ன செய்தோம்?

உலகில் முதன்முதலில் இரும்பை உருக்கி பயன்படுத்தத் தொடங்கியவர்கள் தமிழ் நிலப்பரப்பில் வாழ்ந்தவர்களே என்பது உறுதியாக நிலைநாட்டப்பட்டுள்ளது. கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், சுமார் 2500 ஆண்டுகளுக்கால சேர, சோழ, பாண்டியப் பேரரசுகளுக்கு முன்னரே, சுமார் 5300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் இரும்புடன் வேலை செய்யத் தொடங்கிவிட்டனர் என்பது தெளிவாகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு, ஈரோட்டில் உள்ள கொடுமணல் நகரம் இரும்பை உருக்கி, உயர்தர எஃகு தயாரிப்பதில் உலகளவில் புகழ்பெற்றது. இருப்பினும், 5300 ஆண்டுகளுக்கு முன்பான ஆரம்ப காலங்களில் இரும்பின் துல்லியமான பயன்பாடுகள் இன்னும் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக்கான பகுதி ஆக உள்ளது.

முடிவுரை

மொத்தத்தில், தொடர்ச்சியான ஆராய்ச்சிகளே வரலாற்று புதிர்களுக்கு பல்வேறு விடைகளை அளிக்க முடியும். அதற்கு, பேரறிஞர் அண்ணா கூறியது போல், முதலில் நாம் "காத்திருக்க பழக வேண்டும்". ஏனெனில் காலமும், முயற்சியும் செவ்வனே பணிகளைச் செய்யும்; இடையில் வந்தவர்களைச் சுட்டிக் காட்டும்.

பின்ணினைப்பு

// கொடுமணல் வாள் //

இன்று பல நாடுகளில் பரிசாக வழங்கப்படும் வாள், வீரத்தின் அடையாளமாகவும், எதிரிகளை வீழ்த்துவதற்கான கெளரவமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. பழங்கால தமிழ் அரசர்களின் படை வீரர்களும் தங்களின் போர்களில் வாளாதிருக்கவில்லை; அவர்கள் பல போர்களில் விவேகத்துடன் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளனர். அப்படிப்பட்ட போர்களில் முதன்மையான ஆயுதமாக இருந்தது வாள். வீரத்தின் அடையாளமாகவும், வெற்றியின் அடையாளமாகவும் கருதப்பட்ட வாள்களில் கொடுமணல் வாள் பிரசித்தி பெற்றது.

பழங்கால ரோமாபுரிக்கும் சிரியாவுக்கும் அதிகளவில் உருக்கு (Wootz Steel) ஏற்றுமதி செய்தது தமிழ்நாட்டின் ஈரோட்டில் உள்ள கொடுமணல் நகரமாகும். சேரர்கள் ஆண்ட காலகட்டத்தில் கொடுமணலில் இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் அறியப்பட்டது. அதனால், கொடுமணல் ஏற்றுமதி செய்த உருக்கு மூலம் பல்வேறு வாள்கள் வடிவமைக்கப்பட்டன, உதாரணமாக சிரியாவின் டமாஸ்கஸ் ஸ்டீல் (Damascus Steel).

வரலாற்று ரீதியாக, கொடுமணல் வாள் உலகின் நவீன வாள் (Modern Swords) பயன்பாட்டுக்கும், கலப்பு உலோக (Alloys) ஆராய்ச்சிக்கும் துவக்கமாக இருந்தது. மேலும், மின்சாரத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மைக்கேல் பாரடே (Michael Faraday) 1819 இல் மேற்கொண்ட கொடுமணல் வாள் பற்றிய ஆராய்ச்சி, உலோகத் தொழில்நுட்ப வரலாற்றில் முக்கிய பங்காற்றியுள்ளது.

// பா.ஜ.கவின் மௌனம் //

உலகளவில் இரும்புக் காலத்தை தொடங்கிய மண் மற்றும் இனம் என்று நாடே பெருமிதத்துடன் கொண்டாட வேண்டிய தருணம் இது. அதன்படி, “இரும்பின் தொன்மை” என்பது தமிழ்நாட்டின் பெருமை மட்டுமல்ல, இந்திய ஒன்றியத்தின் பெருமையும் ஆகும். தமிழ்நாட்டின் இரும்புக் காலம் குறித்து உண்மையான ஆர்வத்துடன் பேசிய ஒரே தேசிய தலைவர் ராகுல்காந்தி என்பது குறிப்பிடத்தக்கது. 

அரசியல் மேடைகளில் தமிழ் வரலாற்றை மார் தட்டிக் கொள்ளும் 56 இன்ச் மார்புள்ளவர், “இரும்பின் தொன்மை” குறித்து ஒரு சொல்லும் பேசவில்லை. பார்ப்பனர்களோ, ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை உருட்டிக்கொண்டே இருக்கிறார்கள். தொல்லியல் ஆய்வறிக்கைகள் ஆதாரமாக இருந்தாலும், அவற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். 

பார்ப்பனர்களுக்கும், அம்பானிக்கும், அதானிக்கும் அடிமையாக இருக்கும் பிரதமரை, அமைச்சர்களை மற்றும் அவர்களை ஆதரிக்கும் கட்சிகளைக் குறித்து நினைத்தால், "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?” என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது". எது எப்படியாகினும், தண்ணீருக்குள் பந்தை அழுத்தினாலும் அது மீண்டும் மேலே வருவது போல, “இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி குமரி முனையிலிருந்து எழுதப்பட வேண்டும்” என்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கூறியது போல், வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பிலிருந்து தொடங்கும். நாளைய உலக வரலாறு அதை எட்டுத்திக்கும் சொல்லும்!

விவரணைகள் 

இரும்பின் தொன்மை 


Antiquity of Iron


A Tale of Wootz Steel  


Wootz Steel before European Industrial Revolution


Alexander wanted Steel from Tamil Nadu


Wootz Steel Story Presentation


Kodumanal - The City that Clothed Rome


Technology of Iron and Steel In Tamil Nadu


Kodumanal - Archaeology Department


Present Indian Steel Industry


Keeladi Musuem 


"Out of Africa" Theory in Tamil Nadu


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Thursday, January 23, 2025

சீமானின் வரலாறு "காவி"

சீமானின் வரலாறு "காவி" 

பொருளடக்கம்
  1. முகவுரை
  2. ஏன் பெரியார் மட்டும் அதிகமாக எதிர்க்கப்படுகிறார்?
  3. பெரியாருக்கு பின்னால் திரண்ட படை 
  4. தமிழ் தேசியத் தலைவர்கள்
  5. மறைமலை அடிகள் பார்வையில் பெரியார்
  6. பெருஞ்சித்திரனார் பார்வையில் பெரியார் 
  7. பாரதிதாசன் பார்வையில் பெரியார்
  8. வ.உ.சி பார்வையில் பெரியார்
  9. கி.ஆ.பெ.விசுவநாதம் பார்வையில் பெரியார்
  10. சீமானும் அவரது வரலாறும்
  11. சீமானின் கொடியத் திட்டம்  
  12. முடிவுரை 
  13. விவரணைகள் 
முகவுரை

2000 களில் பெரியாரை ஆதரித்து பெரியாரிய மேடைகளில் முழங்கிய சீமான், 2010 ஆம் ஆண்டில் நாம் தமிழர் கட்சி தொடங்கி, அதே ஆண்டில் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியாரை ஆதரித்து பேசிய சீமான், 2022 வரை பெரியார் நினைவேந்தலை நடத்திய சீமான், இன்று இந்திய ஒன்றியமே பா.ஜ.கவின் இந்துத்துவா பிரச்சாரத்தால் நெருக்கடியான சூழலில் சிக்கியிருக்கும் நிலையில், திடீரென பெரியாரை எதிர்த்து பேசுகிறார். பெரியாரின் கருத்துகளை எதிர்த்து அல்ல, மாறாக சொல்ல தகாத விஷயங்களை எல்லாம் பெரியார் சொன்னதாக கூசாமல், பொய் பேசிக் கொண்டிருக்கிறார் சீமான்.
நடிகர் சோ. ராமசாமி மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி ஆதரவில் "நாம் தமிழர்" கட்சி பெயரை சி.பா.ஆதித்தனார் (1958 முதல் 1967 வரை "நாம் தமிழர்" பெயரில் அரசியல் கட்சியை நடத்தியவர்) குடும்பத்தினரிடமிருந்து இரவல் வாங்கிய சீமான், இன்று RSS கும்பலின் கைப்பாவையாக மாறி, வெளிப்படையாக பெரியாரை ஏசுகிறார். இவ்வாறு, சீமான் பெரியாரை எதிர்க்க காரணமென்ன என்பதை காண்போம் வாருங்கள்!

ஏன் பெரியார் மட்டும் அதிகமாக எதிர்க்கப்படுகிறார்?

ஒரு மின்சார பொருளின் கண்டுபிடிப்பிற்கு ஒரே ஒரு விஞ்ஞானியின் பெயர் கூறப்படுவது சான்றாக இருந்தாலும், அந்த விஞ்ஞானிக்கு முன்னர் பல விஞ்ஞானிகள் அந்த வெற்றியை எட்டுவதற்கான அடிப்படைகளை உருவாக்கி விட்டு சென்றிருப்பார்கள்.

ஒரு மருத்துவ பரிசோதனையின் வெற்றிக்கு ஒரே ஒரு மருத்துவர் காரணமாக சொல்லப்பட்டாலும், முன்பே பல மருத்தவர்கள் அந்த பரிசோதனைக்கு அதை வெற்றிக்கு அருகில் கொண்டு செல்லும் முயற்சிகளை செய்திருப்பார்கள்.

ஒரு விளக்கொளி வெளிச்சம் பாய்ச்சினால், அந்த ஒளிக்கு பல்வேறு திரிகளும், எண்ணெய்யும், தீக்குச்சியும் காரணமாக அமைந்திருக்கும்.

ஒரு மரம் வெட்டப்படுகையில், அந்த கடைசி வெட்டில் அது கீழே விழுந்தாலும், அந்த கடைசி வெட்டிற்கு முன்பே அந்த மரம் பல்வேறு வெட்டுகளை பெற்றிருக்கும்.

அது போல பார்ப்பனீயத்திற்கு எதிரான கிளர்ச்சிகளில் பல்வேறு காலகட்டங்களில் பல தலைவர்கள் பங்காற்றியுள்ளார்கள் என்பது மறுக்க முடியாதவையே. மேலும், வள்ளுவர், வள்ளலார், அயோத்திதாசர் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் இம்மண்ணுக்கான சமூக விடுதலையைப் பற்றி பேசியிருக்கின்றனர். இந்நிலையில், ஏன் பெரியார் மட்டும் அதிகமாக எதிர்க்கப்படுகிறார்?"

அதற்கான காரணம், பெரியார் மட்டுமே பேசுவதோடு மட்டுமல்லாமல், எழுதுவதோடு மட்டுமல்லாமல், களத்திற்கு வந்தார்! இடைவிடாது போராடினார்! பார்ப்பனிய சூழ்ச்சிகளை தோலுரித்து காட்டுவதையே தனது அன்றாட பணியாக அமைத்து கொண்டார்! இவ்வகையிலேயே, பெரியார் தனித்து நிற்கிறார்!

ஆங்கிலேயர்களுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பொதுவுடைமை தலைவர்கள் விடுதலை கோரி போராடி கொண்டிருந்த வேளையில், நமக்கு விடுதலை என்பது ஆங்கிலேயர்களுக்கு எதிரானதாக மட்டுமல்ல, சமூக விடுதலை என்பதும் முக்கியம் என்றவர் பெரியார். சமூக விடுதலைக்கு தடையாக உள்ள பார்ப்பனீய சூழ்ச்சிகளை அகலமாக மட்டுமல்ல, ஆழமாகவும் தனது சமூக நீதி கருத்துக்களால் அம்பலப்படுத்தியவர் பெரியார். இன்னும் சொல்ல போனால், ஆரிய பார்ப்பனீயத்தை எதிர்க்கும் கருவியாக திராவிடத்தை வெகுமக்களிடம் கொண்டு சேர்த்தவர் பெரியார் என்றால் அது மிகையாகாது.

பெரியாருக்கு பின்னால் திரண்ட படை 

தமிழ்நாட்டின் நூற்றாண்டு கால அரசியல் என்பது வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட “ஆரிய-திராவிட” போரில் தான் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது. இத்தகைய சூழலில், திராவிட அரசியலுக்கு ஆதரவாக பெரியார் காட்டியே ஒளியே திராவிட இயக்கங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது.

சமூகம் விழிப்புணர்வு செய்யத் தகுதியான பல காரியங்களை செய்து, நமக்குள் "இனம், மொழி, கல்வி, சுயாட்சி" என்ற உணர்வுகளை ஊட்டி, திராவிட இயக்கத்தை வலிமையாக கட்டமைத்த பெரியார் பின்னால், மாபெரும் தம்பிகள் படைத் தானே அணிவகுத்தனர். அந்த படையில் பணியாற்றிய அண்ணா, கலைஞர், அன்பழகன் உட்பட பல்வேறு திராவிட இயக்கத் தலைவர்கள், பெரியாரிடம் பயின்று, தேர்தல் அரசியல் இயக்கமான தி.மு.கவை தொடங்கினர். அப்பேற்பட்ட தி.மு.கவுக்கு துணையாக, நேற்றும் இன்றும் பலதரப்பட்ட பெரியாரிய அமைப்புகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன.

பெரியார் மற்றும் அவர்தம் தம்பிகள் படையினரின் வலிமை மிக்க அரசியல் போராட்டத்தால் தான் தமிழ்ச் சமூகம் பல்வேறு மாற்றங்களை கண்டிருக்கிறது, கண்டும் வருகிறது. பிற இந்திய மாநிலங்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றங்களை கணக்கிட்டால், நிறை குறை இருப்பினும் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது வெள்ளிடை மலை.

தமிழ் தேசியத் தலைவர்கள்

பெரியார், தமிழ் தேசியம் போன்ற வாதங்களை தாண்டி, சமூக விடுதலையை தனது முக்கியக் கடமையாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், தமிழ் தேசியத் தலைவர்களாக அறியப்படுகிற "மறைமலை அடிகள், பெருஞ்சித்திரனார், பாரதிதாசன், வ.உ.சி., கி.ஆ.பெ.விசுவநாதம்" போன்றோர் பெரியாருக்கு எதிராக செயல்பட்டனர் என்று சீமான் தொடர்ச்சியாக பொய்களை கூறி வருகிறார்.

ஆனால், தலைசிறந்த தமிழறிஞர்களை ஒருங்கிணைக்கும் அறிவுப் பாலமாக விளங்கிய பெரியாரை "மறைமலை அடிகள், பெருஞ்சித்திரனார், பாரதிதாசன், வ.உ.சி, கி.ஆ.பெ.விசுவநாதம், திரு.வி.க, நாவலர் சோமசுந்தர பாரதியார், இலக்குவனார், தேவநேயப் பாவாணர், அண்ணல் தங்கோ, குன்றக்குடி அடிகளார்" போன்றோர் ஆதரித்தனர் என்பது உள்ளங்கையில் நெல்லிக்கனி போல. 

அதே நேரத்தில், சில தமிழ் தேசியத் தலைவர்களுக்கும் பெரியாருக்கும் இடையில் நிலவிய முரண்கள் என்பது கருத்து முரண் தான்; பகைமையல்ல. மேலும், பெரியார் தனது கருத்துக்களுடன் பிறர் முரண்படுவதை வரவேற்றவர் என்பதும், சரியான சுட்டிக்காட்டல்களைப் பெரியார் ஏற்காமல் விட்டதுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறைமலை அடிகள் பார்வையில் பெரியார்

"யான், ஆராய்ந்து எழுதி அரிதே அச்சிட்டு வெளிப்படுத்துங் கோட்பாடுகள் யாவும் கலைஞர்க்கும், புலவர்க்கும், பொதுமக்களிற் சிறந்தார் சிலர்க்குமே பயன் தருகின்றன. ஆனால் ஈ.வெ.ராவின் கிளர்ச்சியோ சிற்றூர் - பேரூர்களிலெல்லாம் பரவி பயன் விளைக்கின்றது. இதனால் எனது நோக்கங்களும், விருப்பங்களும் அவராலே எளிதில் எங்கும் முற்றுறுகின்றன. ஆதலால் ஈ.வெ.ரா. நெடிதினிது வாழ்க! அவர் முயற்சி வெல்க!"

 பெரியார் பற்றி மறைமலை அடிகள்

பெருஞ்சித்திரனார் பார்வையில் பெரியார் 

பெரியார் ஒரு கட்சியின் தலைவரல்லர்
ஒர் இனத்தின் தலைவர்
ஒரு காலத்தின் தலைவர்
ஒரு வரலாற்று நாயகர்
பெரியார் தோன்றியிருக்கவில்லையெனில்
ஒர் இனத்தின் அடிமை வரலாறே முற்றுப் பெற்றிருக்காது
நாட்டின் மேல் போர்த்திக் கிடந்த இருள் விலகியிருக்காது
தமிழனின் தலை எழுத்தே மாற்றப் பெற்றிருக்காது
ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுக்கால வரலாற்றை
மாற்றியமைத்த வரலாறு பெரியாருக்கு உண்டு.

பெரியார் பற்றி பெருஞ்சித்திரனார்

திரவிடத்தின் மக்கட்குத் தீந்தமிழின் ஆற்றல் தான் அவர் தம் மூச்சு!

திராவிடம் பற்றி பெருஞ்சித்திரனார்

பாரதிதாசன் பார்வையில் பெரியார்

செந்தமிழ் கேரளம் ஆந்திரமும் - அவை
சேர்ந்திடும் கன்னட நன்மொழிகள்
அந்த மிகுந்த திராவிடம் அல்லது
ஆரியச் சொல் லாமோ - அவர்
வேர் வந்த சொல்லாமோ?

- திராவிடம் பற்றி பாரதிதாசன் 

சுயமரியாதைப் பெயர்கொள் பயிர்செழிக்கத்
தொண்டு செய்யும் இராமசாமித் தலைவா!

பெரியார் பற்றி பாரதிதாசன் 

வ.உ.சி பார்வையில் பெரியார்

"ஈ.வெ.ராவிடத்தில் உள்ள சிறப்புக் குணம் என்னவென்றால் மனதில் படும் உண்மைகளை ஒளிக்காமல் சொல்லும் ஒரு உத்தமக் குணம் தான். அவரை எனக்கு இருபது ஆண்டுகளாகத் தெரியும். அவரும் நானும் ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்து வந்தோம். அந்த இயக்கத்தில் அயோக்கியர்கள் சிலர் வந்து புகுந்த பிற்பாடு நானும் அவரும் விலகிவிட்டோம். பிறகு அவர் ஆரம்பித்து நடத்தப்பெறும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்கமாயிருப்பதால் என்னால் ஆன உதவியை அவ்வியக்கத்திற்கு செய்து வருகிறேன். அவரைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் தமிழ்நாட்டில் எல்லாத் தலைவர்களைவிட பெரிய தியாகி என்று தான் சொல்ல வேண்டும். ஆகையினால் அவருடைய திருஉருவப் படத்தை ஒவ்வொருவரும் வைத்து காலை, மாலை பகல் முதலிய வேளைகளில் வணங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்".

சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி வ.உ.சி 

கி.ஆ.பெ.விசுவநாதம் பார்வையில் பெரியார்

“சுயமரியாதை இயக்கத்தை இனி எக்காலத்திலும் எவராலும் எந்த வகையிலும் அழிக்க முடியாது. அப்படி அழித்துவிடலாம் என்று எண்ணுவது சமுத்திரத் தண்ணீரை இறைத்துவிடலாம் என்பதைவிட மோசமானது".

சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி கி.ஆ.பெ.விசுவநாதம்

சீமானும் அவரது வரலாறும்

*சிலவற்றை விளக்குவதற்காக சாதி சார்ந்த சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சீமானின் அரசியல் வியூகத்தை கூர்ந்து கவனித்தால், அவர் எப்பொழுதும் தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு சாதி (குறிப்பாக நாயுடு, நாயக்கர், ரெட்டி, செட்டி) பின்னணியில் உள்ளவர்களை கடுமையாக எதிர்ப்பார். ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த கள்ளர், மறவர், அகமுடையார், வன்னியர், கவுண்டர், யாதவர், நாடார், பள்ளர், பறையர் போன்றவர்களை எதிர்ப்பதில்லை. எடுத்துக்காட்டாக, சசிகலா, டி.டி.வி.தினகரன், ராமதாஸ், அன்புமணி, வேல்முருகன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், திருமாவளவன், அம்பேத்கர், அயோத்திதாசர் போன்றவர்கள் சீமானின் கடுமையான விமர்சனங்களில் இருந்து தப்பித்து விடுவார்கள். அதாவது, தமிழ் தேசியம் என்கிற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு சனாதனத்திற்கு ஆதரவாக சாதி தேசியத்தையே சீமான் கட்டமைக்க முயல்கிறார் என்பது வெள்ளிடை மலை.

சீமான் "தமிழ் மற்றும் மலையாளி" கலப்பு, சீமான் மனைவி கயல்விழி "தமிழ் மற்றும் தெலுங்கு" கலப்பு பரம்பரையில் வந்தவர்கள். இவ்வகையில், சீமான் வீட்டிலே திராவிடம் (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு — இவை அனைத்தும் திராவிட மொழிக் குடும்பமாகும்) இருக்கிறது. ஆனால், திராவிடத்தை எதிர்த்து சீமான் பேசுவது, மல்லாக்க படுத்து எச்சில் துப்புவது போல ஆகிறது. மேலும், கடந்த காலங்களில் தான் ஒரு நாடார் (சாணார்) சாதி என்றும், தன் தந்தை ஒரு பனையேறி என்றும் கூறியிருந்த சீமான், தனது வரலாறு தெரியாமல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காலகட்டத்தில், அருந்ததியர்களை (சக்கிலியர்) தெலுங்கு சாதி மற்றும் தூய்மை பணியாளர்கள் என விமர்சித்தார்.

"சக்கிலியன் முகத்துல முழிச்சாலும் சாணான் முகத்துல முழிக்கக்கூடாது" என்பது ஆதிக்க சாதிகளின் சொலவடை. சாதி வரலாறு இப்படியிருக்க, சாணார்கள் மெல்ல முன்னேறி, கல்வி கற்க, தொழில் செய்ய, பொருளாதாரம் வளர, சமூக அந்தஸ்து உயர, நாடார்கள் என்ற இன்றைய நிலையை அடைந்தனர். அவ்வாறு தன்னை நாடாராக சொல்லிக் கொண்ட சீமான், சக தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கு குரல் கொடுக்காமல், பா.ஜ.கவுக்கு ஆதரவாக, சனாதனத்தை போற்றும் சாதி தேசியத்தை மேற்கொள்ளும் முயற்சியில் இன்னென்ன மக்கள் ஆடு மாடு மேய்ப்பது, விவசாயம் செய்வது என்று பேசி வருகிறார்.

இன்று சமூக நிலை, பொருளாதாரம், மற்றும் அரசியல் ரீதியாக முன்னேறிவிட்ட நாடார்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கு குரல் எழுப்பாமல், ஆரியர்களின் காலாட்படையாக செயல்படுவதாக "நாடார் வரலாறு கறுப்பா காவியா?" என்ற நூலில் வழக்கறிஞர் லஜபதி ராய் கூறியிருப்பது நினைவுகூரத்தக்கது. இவ்விடத்தில், "சீமான் வரலாறு கறுப்பா காவியா?" என்று வினவினால் தற்சமயம் "சீமானின் வரலாறு காவி" என்றே கூற முடியும்.

சீமானின் கொடியத் திட்டம் 
 
இன்றைய சூழலில், சமூக-அரசியல் உலகில் பெரியாருக்கு கொடுக்கப்பட்டுள்ள உயரிய இடத்தை, அதாவது Larger than Life (இம்மாதிரியான அணுகுமுறையை பெரியாரே ஏற்க மாட்டார் என்பது வேறு) என்ற இடத்தை உடைத்தெறிந்து, அதை வைத்து இளைய சந்ததியினருக்குப் பெரியார் குறித்து அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி, அவரது அரசியல் பணிகளை சர்ச்சைகளுக்குள்ளாக்கி, பெரியாரால் எழுப்பப்பட்ட திராவிட அடையாளத்தை மங்கச் செய்து, நாம் தமிழரின் தமிழ் தேசியமான (உண்மையான தமிழ்த் தேசியம் என்பது சமத்துவமே) சாதி தேசியத்தை அரசியலில் நுழைக்க முயற்சிகள் மேற்கொள்வதே சீமானின் கொடியத் திட்டமாகும்.

முடிவுரை 

1960-1980 களில், பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையிலான வேறுபாட்டை சினிமாவில் லாவகமாக பயன்படுத்தி, எம்.ஜி.ஆர் சினிமாவிலும், அரசியலிலும் முன்னேறி வெற்றிக் கண்டார். அந்த பாணியை சீமான் இப்போது பின்பற்ற முயல்கிறார். ஆனால், இன்றைய காலகட்டத்தில், சீமானின் விபரீத ஆசை நிறைவேறுமா? அவர் பாணியில் பதில் சொல்ல வேண்டுமானால், "வாய்ப்பு இல்ல ராசா".

உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்த துரோகியும், பைத்தியக்காரனில் கெட்டிக்காரன் வகையறாவைச் சேர்ந்தவரும், RSS கும்பலிடம் கைகோர்த்தவரும், திரள்நிதி தயவில் வாழ்பவரும், ருசி கண்ட பூனையாகவும் உருமாறிவிட்ட சீமானின் மக்கள் விரோத அரசியலை எதிர்த்து, பொதுவெளியில் அம்பலப்படுத்த வேண்டும். அத்துடன், மக்களிடம், குறிப்பாக இளைய சமுதாயத்தினரிடம் பெரியாரியத்தை இடைவிடாது அதிகளவில் கொண்டு போய் சேர்க்கவும் வேண்டும்.

மொத்தத்தில், சமூக முன்னேற்றத்திற்கான பெரியாரின் உழைப்பை குறைமதிப்புக்கு உட்படுத்த முயற்சிக்கும் சீமான் போன்றோர், இறுதியில் வரலாற்று ரீதியாக காலத்தால் அகற்றப்படுவார்கள்.

விவரணைகள்

பெரியாருக்கு ஆதரவாக சீமானின் கடந்தகால செயல்பாடுகள் (2010 to 2022)







தமிழ் தேசியத் தலைவர்களும் பெரியாரும் 






வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

Waterways Shaped Ancient Civilizations

Waterways Shaped Ancient Civilizations Waterways have always been vital to the development of Ancient Civilizations. By supporting agricultu...