மயிலை சீனி வேங்கடசாமி
முகவுரை
*வரலாறு, இலக்கியம், இயல், இசை, நாடகம், தொல்லியல், சமூகவியல், மானுடவியல் என்று பல துறைகளில் ஆய்வு செய்தவர் மயிலை சீனி வேங்கடசாமி.
*தமிழ்நாட்டிற்கும் பெளத்தம், சமணம், கிறிஸ்தவம் சமயத்திற்கும் உள்ள தொடர்பை ஆய்வு செய்ததில் முக்கியமானவர்.
*படித்தது பத்தாம் வகுப்பு வரை தான் ஆனால் தமிழ் ஆய்வுத்துறை முன்னோடியாக வலம் வந்தார்.
*திராவிடன், குடியரசு போன்ற திராவிட இதழ்களில் ஆசிரியராக பணி புரிந்தார்.
*களப்பிரர் ஆட்சியின் காலம் இருண்ட காலம் அல்ல என்று நிறுவினார்.
* தமிழ்நாடு பேரரசர்கள் பட்டியலை ஒழுங்குபடுத்தியதில் முக்கியமானவர்.
*தமிழ்நாடு வரலாறை ஒழுங்குபடுத்தி எழுதியதில் முதன்மையானவர்.
*திராவிடர்களின் நாட்டார் மரபு குறித்து ஆய்வு செய்தார்.
*33 நூல்களை எழுதியுள்ளார்.
மயிலை சீனி வேங்கடசாமி குறித்து பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை
தமிழையே வணிகமாக்கி
தன் வீடும் மக்கள் சுற்றம்
தமிழிலே பிழைப்பதற்கு
தலைமுறை தலைமுறைக்கும்
தமிழ் முதலாக்கிக் கொண்ட
பல்கலைத் தலைவன் எல்லாம்
தமிழ் சீனி வேங்கடத்தின்
கால் தூசும் பெறாறென்பேன்
விவரணைகள்
மயிலை சீனி.வேங்கடசாமி 10
மயிலை சீனி வேங்கடசாமி அறிமுகம்
மயிலை சீனி வேங்கடசாமி நூல்கள்
மறக்க முடியுமா மயிலை சீனி வேங்கடசாமி
http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-jan1-2017/32233-2017-01-16-07-11-28
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment