எண்கள் வரலாறு
எண்கள் உருவாக்கத்தில் சுமேரியர்கள், ரோமானியர்கள், சீனர்கள், இந்தியர்கள் என பல நாட்டினரின் பங்களிப்பு இருக்கிறது. பண்டைய காலத்தில் பல நாட்டில் பல வகையிலான எண்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் கணித எண்களை சுழி எண் (பாழ் / பூஜ்யம்) கொண்டு 1 - 2 - 3 - 4 - 5 - 6 - 7 - 8 - 9 - 0 என ஒருமுகப்படுத்தியது பல்வேறு இந்தியா கணிதவியலாளர்கள் ஆவர். மொத்தத்தில் இன்றைய நவீன எண்கள் பயன்பாட்டை உலகிற்கு அறிமுகம் செய்தது இந்தியா தான். இந்திய எண்களை அரபிய வணிகர்கள் மேற்குலக நாடுகளுக்கு அறிமுகம் செய்து அங்கும் இப்பயன்பாடு பரவியதால் ஐரோப்பியர்கள் இந்த எண்களை "இந்திய (இந்து) - அராபிய எண்ணுருக்கள்" (Hindu - Arabic Numberal System) என அழைத்தனர். இதற்கிடையில், எண்கள் வரலாற்றில் தமிழுக்கு என தனித்துவமான எண்கள் இருந்துள்ளது ஆனால் காலப்போக்கில் வழக்கொழிந்து விட்டது.
இந்திய கணிதவியலாளர்கள் பிராமி எண்களை உருவாக்க பேரரசர் அசோகரின் வேண்டுகோள் முக்கிய காரணமாகும். இந்த பிராமி எண்களே நவீன எண்களின் (இந்திய - அரேபிய எண்கள்) நேரடி மூதாதையர் வடிவம் ஆகும். சுருங்கச்சொன்னால் பிராமி எண் -> தேவநாகரி எண் -> அரபிக் எண் -> நவீன எண் -> ஐரோப்பா பரவல் -> இந்திய - அரேபிய எண் பயன்பாடு அறிமுமானது.
நிகோலா டெஸ்லா கூறிய 3-6-9 கோட்பாடு, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறிய சார்புக் கோட்பாடு (Theory of Relativity), செயற்கை நுண்ணறிவு (AI), பெரிய தரவு (Big Data), டிஜிட்டல் சந்தை (Digital Market) போன்ற பல்வேறு முன்னெடுப்புகளை கணித எண்கள் சாத்தியப்படுத்தி உள்ளது. கணித எண்கள் இல்லையேல் உலகம் என்றோ முடிந்த கதையாக மாறிருக்கும் ஏனெனில் எண்கள் வாழ்வின் அங்கமாக விளங்க காரணம் இந்த பிரபஞ்சம் எண்களால் நிறைந்தது.
விவரணைகள்
Tamil Numeration System
Mathematics - Universe
Bakhshali Manuscript
Brahmagupta
Ramanujan
Aryabhatta
6174
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment