Chocks: சுயமரியாதைத் திருமணம்

Monday, May 17, 2021

சுயமரியாதைத் திருமணம்

சுயமரியாதைத் திருமணம்
05 மே 1928 அன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி சுக்கிலநத்தம் சிற்றூரில் சண்முகத்திற்கும் "கைம்பெண்" மஞ்சுளாவிற்கும் பெரியார் தலைமையில் முதல் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. 08 டிசம்பர் 1929 அன்று பிரபல சுயமரியாதை தீரர் குத்தூசி குருசாமிசாமிக்கும் குஞ்சிதம் அம்மாளுக்கும் பெரியார் தலைமையில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் குறிப்பிடத்தக்கது. சுயமரியாதை திருமணம் புரிவது தெய்வகுற்றம் என்று கூச்சலிட்ட சனாதனவாதிகளிடம் “நான் என்ன மனிதருக்கும் மாட்டுக்குமா திருமணம் செய்து வைக்கிறேன்? ஆறறிவு மனிதர்களாக பிறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் தானே திருமணம் செய்து வைக்கிறேன்? அது எப்படி தவறாகும்?” என்று பெரியார் பேசினார்.

1951 இல் அம்பேத்கரின் இந்து சட்ட மசோதா நாடாளுமன்ற விவாதத்திற்கு கொண்டு வரப்பட்டபோதும், பெரும் எதிர்ப்பின் காரணமாக மசோதா நிறைவேற்றப்படாத போது, அம்பேத்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 1955 இல் நேருவின் முயற்சியால் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சில மாற்றங்களுடன் இந்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்து மதத்தின் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் சாஸ்திர சடங்குகளுடன் கலப்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இந்து சட்ட மசோதா கோரியது. ஆனால் சாதி, மதம், சாஸ்திரம், சடங்கு போன்ற விஷயங்களை உடைத்து நடைபெறும் சுயமரியாதை திருணத்தை அங்கீகரிக்க இந்திய ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று பெரியார் எண்ணினார்.

சுயமரியாதைத் திருமணத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்த பெரியாரின் கொள்கையை முதல்வர் அண்ணா தமிழ்நாட்டில் சட்டமாக்க விரும்பினார். மசோதா சட்டமாக்க வருவதற்கு முன்பே அண்ணா பெரியாருக்கு மசோதாவின் வரைவு நகலை அனுப்பினார். அதில் “மாலை மற்றும் தாலி” என்று குறிப்பிடப்பட்டு தாலி கட்டாயமாக்கப்பட்டத்தை கவனித்த பெரியார், “மாலை அல்லது தாலி” என்று மாற்றி, தாலியை கட்டாயமாக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அதன் பிறகு 1967 இல் இந்து திருமணச் சட்டத்தில் உரிய திருத்தங்களுடன் “சுயமரியாதை திருமணச் சட்டம்” தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் அண்ணாவால் நிறைவேற்றப்பட்டது.

விவரணை 

சுயமரியாதை திருமணம் பற்றி தந்தை பெரியார் 


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -