Chocks: பா.ஜ.க சுருக்கமான வரலாறு

Monday, April 12, 2021

பா.ஜ.க சுருக்கமான வரலாறு

பா.ஜ.க சுருக்கமான வரலாறு
*இந்தியாவில் "வலதுசாரிகள், சங்கப் பரிவார், கரசேவர்கள்" பொருள் = இந்துத்துவா நிலைப்பாடு கொண்டவர்கள்.

இந்துத்துவா அமைப்புகளின் தொடக்கம் 

# 1909, 1918, 1932 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக பணியாற்றிய மதன் மோகன் மாளவியா, இந்துத்துவா பிரச்சாரத்தை மேற்கொள்ள 1915 இல் இந்து மகாசபை அமைப்பை நிறுவினார். 

# அரசியல் மயப்படுத்தப்பட்ட இந்து அடையாளத்தை உருவாக்குவதில்  முக்கிய பங்கு வகித்த மதன் மோகன் மாளவியா, ஏராளமான இந்துத்துவா தலைவர்கள் மீது செல்வாக்கு செலுத்தினார். 

# 1920 இல் பாலகங்காதர திலகர் இறந்த பிறகு, அவரது சீடர் பி.எஸ்.மூஞ்சே காங்கிரஸின் மதச்சார்பற்ற மற்றும் அகிம்சை அணுகுமுறையுடன் உடன்படவில்லை, அதற்கு பதிலாக இந்து மகாசபையுடன் பணிபுரிய தொடங்கினார்.

# பி.எஸ்.மூஞ்சே 1927 முதல் 1937 வரை வி.டி.சாவர்க்கர் பதவியேற்கும் வரை இந்து மகாசபை தலைவராக பணியாற்றினார். 

# வி.டி.சாவர்க்கரின் தலைமையில், இந்து மகாசபை இந்துத்துவா சித்தாந்தத்தை பரப்ப வியூகம் வகுத்து, அரசியல் ரீதியாய காங்கிரஸின் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் தீவிர எதிர்ப்பாளராக உருவெடுத்தது.

# இந்து மகாசபையை சேர்ந்த பி.எஸ்.மூஞ்சே, கே.பி.ஹெட்கேவருக்கு ஒரு புரவலராக விளங்கி அவரது மருத்துவ படிப்புக்கு நிதியளித்தார்.

இந்துத்துவா கொள்கைகளை தீவிரமாக  பரப்புவதற்காக கே.பி.ஹெட்கேவர் 1925 இல் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பை நிறுவினார்.

# ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த எம்.எஸ்.கோல்வல்கர் மற்றும் எஸ்.எஸ்.ஆப்தே ஆகியோர் சுவாமி சின்மயானந்தா ஆலோசனையுடன் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பை 1964 இல் தொடங்கினர்.

காந்தி கொலை 

# ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான நாதுராம் கோட்சே 1948 இல் இந்தியாவின் தேசத்தந்தை என போற்றப்படும் காந்தியை சுட்டு கொன்றார்.

# காந்தி படுகொலைக்கு பிறகு நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்டார் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சில காலம் தடை செய்யப்பட்டது.

பாபர் மசூதி சர்ச்சையின் தொடக்கம் 

# 1949 இல் பாபர் மசூதிக்குள் சட்டவிரோதமாக ராமர்-ஜானகி சிலைகளை இந்துத்துவாதிகள் வைத்தனர்.

# மேலும் சுதந்திர இந்தியாவில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதே தங்களது முதன்மையான கொள்கையென ஆர்.எஸ்.எஸ், ஜன சங்கம் உட்பட பல இந்துத்துவா அமைப்புகள் கொக்கரித்தது.

நேரு-லியாகத் ஒப்பந்தம்

# 1950 இல் இந்திய பிரதமர் நேரு - பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் இடையில் "லியாகத்-நேரு ஒப்பந்தம்" கையெழுத்திடப்பட்டது.

# இரு நாட்டிலும் வசிக்கும் சிறுபான்மையினரின் சமூக பாதுகாப்பையும் அரசியல் உரிமைகளையும் வழங்குவதே ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

லியாகத்-நேரு ஒப்பந்தத்தின் "சில" நோக்கங்கள்,

1. கட்டாய மத மாற்றங்கள் அங்கீகரிக்கப்படாது.

2. இரு நாடுகளும் சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்தல்.

3. அபகரித்து செல்லப்பட்ட பெண்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

4. தங்கள் சொத்துக்களை விற்பனை செய்ய நாட்டிற்கு திரும்பிச் செல்ல அகதிகளுக்கு உரிமை உண்டு.

5. கடத்தப்பட்டோரை விடுவிக்கப்படல், சூறையாடப்பட்ட பொருட்களை ஒப்படைக்கவும் வழிவகை செய்தல்.

# ஒப்பந்தத்தின் மூலம் கிழக்கு வங்காளத்தில் (வங்கதேசம்) உள்ள சிறுபான்மை இந்துக்களை பாகிஸ்தானின் கருணைக்கு விட்டுவிட்டதாக குற்றம் சாட்டி நேரு அமைச்சரவையில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக பணிபுரிந்த சியாமா பிரசாத் முகர்ஜி 1950 இல் பதவி விலகினார்.

பாரதிய ஜன சங்கத்தின் தொடக்கம் 

பதவி விலகிய சியாமா பிரசாத் முகர்ஜி 1951 இல் பாரதிய ஜன சங்கம் என்ற இந்துத்துவா அரசியல் கட்சியை தொடங்கினார்.

பாரதிய ஜன சங்கம் தொடங்க "நேரு-லியாகத் ஒப்பந்தம்" மட்டும் காரணமல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

# 1953 இல் சியாமா பிரசாத் முகர்ஜி மறைந்த பிறகு தீனதயாள் உபாத்தியாயா, வாஜ்பாய், எல்.கே.அத்வானி மற்றும் பலர் பாரதிய ஜன சங்கம் கட்சி தலைவராக இருந்துள்ளனர்.

பசு ஒரு மத அரசியல் விலங்கு 

# 1966 இல் பசுவதைக்கு நாடு முழுவதும் தடை விதிக்கக் கோரி, டெல்லியில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் பாரதிய ஜன சங்கம் ஆதரவுடன் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர்.  

# அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜரின் இல்லத்தை குறிவைத்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். 

# போராட்டம் வன்முறையாக மாறி, பொதுச் சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டு, காவல்துறை துப்பாக்கிச் சூடு மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது.

# காமராஜரின் பசுவதைத் தடைச் சட்டத்திற்கு எதிரான முந்திய பேச்சால் கோபமடைந்த போராட்டக்காரர்கள் அவரது இல்லத்தை குறி வைத்து தாக்குதல் நடத்திய போதும் காமராஜர் காயத்திலிருந்து தப்பித்தார். 

# இந்நிகழ்விற்கு, "பிற்போக்கு மற்றும் சமூக விரோத சக்திகள்" தான் காரணம் என்று கூறி வன்முறையை பகிரங்கமாகக் கண்டனம் செய்தார் காமராஜர். 

# "பிராமணரல்லாத தலைவரின் வெற்றிக்கு எதிரான பிராமண வெறுப்பின் வெளிப்பாடே இந்த தாக்குதல்" என்று காமராஜர் மீதான தாக்குதலை பெரியார் கண்டித்தார்.

நேருவின் மரணத்திற்கு பிறகு, சுதந்திர இந்தியாவில் நேருவியன் மதச்சார்பின்மையின் சகாப்தத்திலிருந்து விலகி, 1966 இல் டெல்லியில் நடந்த முதல் இந்துத்துவா கலவரம் இந்திய தேசிய அரசியலில் வகுப்புவாதத்தை முன்னிறுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது.

# பசுவை ஒரு மத அரசியல் விலங்காக வைத்து பசு பாதுகாப்புக்கு ஆதரவைத் திரட்டுவதில் சவால்களை எதிர்கொண்ட பிறகு, ஒரு கட்டத்தில் இந்துத்துவா அரசியல்வாதிகள் ராம ஜென்மபூமி இயக்கத்தின் மீது தங்கள் முதன்மையான கவனத்தை மாற்றினர். 

# பசு அரசியலில் இருந்து விலகி ராமரை மத அரசியல் சின்னமாக மாற்றி அரசியல் ஆதரவை பெற தொடங்கிய பின்னர், சங்கப் பரிவார் அமைப்புகள் இறுதியில் 1992 இல் பாபர் மசூதியை இடித்து 2024 இல் ராமர் கோவில் கட்டுவதற்கு வழிவகுத்தது.

ஜனதா கட்சியின் தொடக்கம் 

# நெருக்கடி நிலை முடிந்து 1977 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த ஜனதா கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. 

# ஜன சங்கம் உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராகவும், ஜனதா கட்சி உறுப்பினராகவும் ஆக இரண்டு உறுப்பினராக (Dual Membership) இருக்கக்கூடாது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து ஜன சங்கம் உறுப்பினர்கள் விலக வேண்டும் என்று கோரினார் சரண் சிங்.

# இதனை, வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட ஜன சங்கம் உறுப்பினர்கள் ஏற்கவில்லை. 

# செய்வதறியாது நின்ற மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய, சரண் சிங் பிரதமர் ஆனார். 

# சரண் சிங் அமைச்சரவையில் ஜன சங்கம் சார்பில் வாஜ்பாய், அத்வானி  பங்கேற்கவில்லை.

# இந்த பின்னணியில், ஜனதா கட்சி இரண்டு பிரிவாக நின்றது, 1980 நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா கட்சிக்கு ஜெகஜீவன் ராம் பிரதமர் வேட்பாளராக நிற்க, ஜனதா (Secular) கட்சிக்கு சரண் சிங் பிரதமர் வேட்பாளராக நிற்க, அந்த தேர்தலில் மொத்த ஜனதா கூடாரமே தோற்றது, இந்திரா காந்தி பிரதமரானார்.

பாரதிய ஜனதா கட்சியின் தொடக்கம் 

தேர்தலில் ஜனதா கட்சி தோற்ற பிறகு,  வாஜ்பாய், எல்.கே.அத்வானி உள்ளிட்ட ஜன சங்கம் உறுப்பினர்கள், ஜனதா கட்சியில் இருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியை 1980 இல் தொடங்கினர். 

# பாரதிய ஜனதா கட்சி மூலம் வாஜ்பாய், அத்வானி மெல்ல மெல்ல நாட்டிலே இந்துத்துவா வெறியை வளர்த்தனர்.

பா.ஜ.க ஆட்சியின் தொடக்கம் 

# 1996 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க 161 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், எந்தக் கட்சிக்கும் போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை.

# 1996 இல் பிரதமர் வாஜ்பாய் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை மாறாக மூன்றாவது அணி ஒன்றிணைந்தன் மூலம் தேவகௌடா பிறகு குஜ்ரால் இந்திய நாட்டின் பிரதமர் ஆனார்கள்.

# குஜ்ரால் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு 1998 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க 182 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், எந்தக் கட்சிக்கும் போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை.

# இதையெடுத்து, அ.தி.மு.க உட்பட பல்வேறு கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் வாஜ்பாய் பிரதமர் ஆனார்.

# பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகித்த ஜெயலலிதா பிரதமர் வாஜ்பாயிடம் மாநிலத்தில் தி.மு.க ஆட்சியை கவிழ்க்க சொல்லி தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார். அதற்கு, வாஜ்பாய் இணங்காத காரணத்தால் திடீரென கூட்டணியை விட்டு வெளியேறி பா.ஜ.க ஆட்சியை கவிழ்த்தார்.

# உலக அரசியல் அரங்கில், இரண்டு ஆண்டுகளில் மூன்று பிரதமர்களுடன் இந்திய அரசின் நிலைத்தன்மை வீழ்ந்த சூழலில், அரசியல் கண்ணியத்தை மீட்டெடுக்கும் வகையில், 1999 இல் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் (CMP-Common Minimum Programme) மூலம் கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலை தி.மு.க சந்தித்தது.

# 1999 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க 182 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், எந்தக் கட்சிக்கும் போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை.

# இதையெடுத்து, தி.மு.க உட்பட பல்வேறு கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் வாஜ்பாய் பிரதமர் ஆனார்.
# இதற்கிடையே, பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் இறுதி காலத்தில், கொள்கை வேறுபாடுகள் அதிகரிக்க தொடங்கிய நேரத்தில் கூட்டணியை விட்டு தி.மு.க விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.

பாபர் மசூதி இடிப்பு 

# 1992 இல் டெல்லியில் உள்துறை அமைச்சர் முன்னிலையில் சங்கப் பரிவார் தலைவர்களுக்கும் பாபர் மசூதி பாதுகாப்பு குழுவிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

# டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகவும், 06 டிசம்பர் 1992 முதல் அயோத்தி கோவிலுக்கு கரசேவை தொடங்க போவதாகவும் சங்கப் பரிவார் அமைப்பினர் அறிவித்தனர்.

# இதையொட்டி, மாநில பா.ஜ.க அரசின் ஆதரவோடும் பாதுகாப்போடும் 1,50,000 இந்துத்துவா கரசேவர்கள் பாபர் மசூதியை இடித்த போது, மாநில காவல்துறை உட்பட ஒட்டுமொத்த உத்தரப் பிரதேச மாநிலத்துறைகளும் கைகட்டி வேடிக்கை பார்த்தன.

# வலதுசாரிகள், 1966 டெல்லி கலவரத்தை விட அதிகமான ஆள்பலம் மற்றும் ஆயுத பலத்துடன், 06 டிசம்பர் 1992 அன்று பாபர் மசூதி இடிப்பை நடத்தினர்.

# ஆரம்பத்தில் நீதிமன்ற அறைக்குள் மட்டுப்படுத்தப்பட்ட அயோத்தி வழக்கு, சங்கப் பரிவார் அமைப்புகளின் வன்முறையால் வீதிக்கு வந்தது.

# பாபர் மசூதி இடிப்பின் விளைவாக, உடனடியாக நாடு முழுவதும் கலவரம் வெடித்தது, அதில் சுமார் 2000 பேர், பெரும்பாலும் முஸ்லீம்கள், கொல்லப்பட்டனர்.

# பாபர் மசூதி இடிப்பில் அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உட்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர்.

குஜராத் ரயில் எரிப்பு 

# 1992 இல் பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு, 10 வருடங்கள் கழித்து மிகப் பெரிய வன்முறை வெறியாட்டமாக குஜராத் முதல்வராக மோடி இருந்த நேரத்தில் 2002 இல் குஜராத் கலவரத்தை அரங்கேற்றியது காவி கும்பல்.

# 2002 இல் கோத்ரா ரயில் நிலையம் அருகே அயோத்தியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி ரயிலை வன்முறையாளர்கள் தீயிட்டு கொளுத்தியதில் அந்த ரயிலில் பயணம் செய்த 57 பேர் தீயில் கருகி இறந்தனர்.

# ரயிலில் இறந்தவர்கள் இந்துக்கள் என்பதால் இஸ்லாமியர்கள் தான் வன்முறையாளர்கள் என்று பிரச்சாரத்தை மேற்கொண்ட சங்கப் பரிவார் அமைப்புகள் கலவரத்தில் ஈடுபட தொடங்கினர்.

# 2002 பிப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெற்ற குஜராத் கலவரத்தில் சுமார் 2000+ பேர் பலியாகினர்.

# குஜராத் கலவரத்தின் வீரியம் எந்தளவுக்கு இருந்தது என்றால் அன்றைய குஜராத் முதல்வர் மோடிக்கு 2005 இல் அமெரிக்கா அரசாங்கம் விசா தர மறுக்கும் அளவுக்கு இருந்தது.

பா.ஜ.க பிரதமராக மோடி

2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க போதிய பெரும்பான்மையுடன் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆட்சிக்கு வந்ததும் மக்கள் விரோத திட்டங்களை மனம் போன போக்கில் நிறைவேற்றி தங்களது இந்துத்துவா கோரா முகத்தை நிரூபித்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக,

*நீட் தேர்வு

*காவி மயம்

*இந்தி திணிப்பு

*உதய் மின் திட்டம்

*அயோத்தி பிரச்சினை

*ஊடகத்தை கைப்பற்றுதல்

*புதிய வேளாண்மை சட்டம்

*மாநில அரசுகளை உடைத்தல்

*புதிய தேசிய கல்வி கொள்கை

*ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்

*இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம்

*முறையாக செயல்படுத்தப்படாத ஜி.எஸ்.டி

*இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370 நீக்கம்

*திட்டமிடல் இல்லாத பணமதிப்பிழப்பு நடவடிக்கை

# இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்ததற்கு, "லியாகத்-நேரு ஒப்பந்தத்தை குறிப்பிட்டு பாகிஸ்தானும் வங்கதேசமும் பிரிவினைக்கு பின்னர் அங்குள்ள சிறுபான்மையினரான இந்துக்களை பாதுகாக்க தவறியதாகவும், அந்த தவறை மோடி அரசு திருத்துவதாகவும், புதிய சட்ட திருத்தமானது அனைத்து சமுதாய மக்களுக்கும் பாதுகாப்பை வழங்க உறுதி செய்திடும்" என்று அமித் ஷா கூறியுள்ளார்.

# ஆனால், இது அப்பட்டமான பொய் பிரச்சாரமாகும். ஏனெனில், புதிய சட்ட திருத்தம் இஸ்லாமியர்களையும் ஈழ தமிழர்களையும் கணக்கில் கொள்ளவில்லை. அதுவே இந்துத்துவா முகமாகும்.

முடிவுரை 

# ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மிகப்பெரிய பலமே அது அரசியல் அமைப்பாக இல்லாமல் கலாச்சார அமைப்பாக பதிவு செய்து கொண்டதால் பலதரப்பட்ட மக்கள் (அரசு ஊழியர்கள் உட்பட) அதில் நேரடியாக அல்லது மறைமுகமாக பங்கெடுக்க முடிகிறது.

# மோடி - அமித் ஷா அம்பு எனில் எய்பவன் ஆர்.எஸ்.எஸ் என்றால் மிகையல்ல.

துணுக்கு செய்தி 

# 1920 களில் சிந்து சமவெளி நாகரிகம் "திராவிட நாகரிகம்" என்ற கருத்தியல் சர்வதேச கவனத்தை பெற்ற போது அதனை எதிர்த்து களம் காண "ஆரியர்கள்" பல்வேறு வலதுசாரி இயக்கங்களை தொடங்கினர்.

# 1978 இல் ஜனதா ஆட்சியில் பிரதமர் மொரார்ஜி தேசாய், காங்கிரஸ் முதலாளிகள் மீது கொண்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியால், இன்றைய மோடிக்கு முன்னோடியாக வெற்றி பெறாத பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தார்.

# தமிழ்நாட்டை சேர்ந்த  காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக (1964-1967) பதவி வகித்ததை போல தமிழ்நாட்டை சேர்ந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி அகில இந்தியா பா.ஜ.க தலைவராக (2001-2002) இருந்துள்ளார்.

Saffron Family

*RSS = Rashtriya Swayamsevak Sangh

*VHP = Vishva Hindu Parishad

*BJP = Bharatiya Janata Party

*Student Wing = ABVP = Akhil Bharatiya Vidyarthi Parishad (RSS)

*Labour Wing = BMS = Bharatiya Mazdoor Sangh (RSS)

*Farmer Wing = BKS = Bharatiya Kisan Sangh (RSS)

*Youth Wing = BJYM = Bharatiya Janata Yuva Morcha (BJP)

*Women Wing = Mahila Morcha (BJP)

*Militant Wing = Bajrang Dal (VHP)

விவரணைகள் 

Issue of Gujarat Chief Minister Narendra Modi's Visa Status


Vajpayee Wanted To Sack Modi


Vajpayee Gave Advice To Modi


பா.ஜ.க உருவான கதை


தாமரை மலர்ந்த கதை 


12 April 2002 - DMK Warms to Advani


3 March 2002 - DMK to Quit if Ayodhya Temple gets nods


21 December 2003 - DMK Quits NDA Government


BJP Showed True Colours Says Kalaignar 


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம். 

No comments:

Post a Comment

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -