Chocks: அமெரிக்காவும் இந்தியாவும் சுயாட்சியும்

Monday, April 12, 2021

அமெரிக்காவும் இந்தியாவும் சுயாட்சியும்

அமெரிக்காவும் இந்தியாவும் சுயாட்சியும்
அமெரிக்க அரசியலமைப்பு

# பிரிட்டன் ஆட்சியிலிருந்து விடுதலை பெற 13 காலனிகளும் ஒருங்கிணைந்து காங்கிரஸ் பேரவையை (Continental Congress) தொடங்கி மக்கள நலன் மற்றும் விடுதலை நலன் கருதி திட்டங்களை வகுத்து வந்தனர்.

# பல்வேறு தொடர் போராட்டங்கள் மூலம்13 காலனிகளும் 1776 இல் விடுதலை அடைந்தனர்.

# பிறகு மக்கள் நலத்திட்டங்களை செயலாற்ற 13 காலனிகளும் கூட்டமைப்பாக இணைந்து கூட்டமைப்பு சட்டத்தை இயற்றினர் (Articles of Confederation).

# இங்கே காங்கிரஸ் பேரவை (Continental Congress) கூட்டமைப்பு காங்கிரஸ் (Congress of the Confederation) என்றானது.

# 13 காலனிகளுக்கு மத்தியில் "வலுவான ஒற்றை மேற்பார்வையாளர்" இல்லாமல் இருந்த காரணத்தால் 13 காலனிகளும் கூட்டமைப்பு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் சுணக்கம் காட்டினர்.

# மேலும் கூட்டமைப்புக்கு பொருளாதார நிதிச்சுமை ஏற்பட்டது.

# இதனை கருத்தில் கொண்டு கூட்டமைப்பு சட்டத்தை கைவிட்டு 1787 இல் உலகின் முதல் நவீன அரசியலமைப்பு சட்டமான அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தை இயற்றினர் (Consitution of the United States).

# இங்கே கூட்டமைப்பு காங்கிரஸ் (Congress of the Confederation) அமெரிக்க காங்கிரஸ் (United States Congress) என்றானது.

# அமெரிக்க காங்கிரஸில் மாநில பிரதிநிதிகள் (Lower House = House of Representatives / Upper House = Senate) தங்களது மாநில கோரிக்கைகளை எடுத்துரைப்பர்.

# அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் (Constitution of the United States) வழியில் Legislative (Congress), Executive (President), Judicial (Supreme Court) என்ற கூட்டாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு அதிபருக்கு உச்சபட்ச அதிகாரம் வழங்கப்பட்டது.

# அதே சமயம் அதிபர் மாநில அரசு முடிவுகளில் தலையீடாமலும் மாநில அரசுகள் அதிபர் முடிவுகளில் தலையீடாமலும் இருக்கும் வகையில் "இயன்றவரை" மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கை கடைப்பிடிப்பது உறுதி செய்யப்பட்டது.

# இருப்பினும் சில நேரங்களில் மாநிலங்களின் கோரிக்கையை மீறி அதிபர் சில காரியங்களை சாதித்துக் கொள்ள இயலும் எடுத்துக்காட்டாக Obama Healthcare.

# அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் பாணியை பின்பற்றி பல்வேறு நாடுகள் தங்கள் அரசியலமைப்பு சட்டங்களை இயற்றிக் கொண்டனர்.

இந்திய அரசியலமைப்பு

முகலாயர்கள் பாதையில் இந்தியா

# வரலாற்றில் இந்தியா என்றுமே ஒரே நாடாக இருந்ததில்லை ஆனால் 17 ஆம் நூற்றாண்டில் முகலாயர்கள் தங்களது நிர்வாக வசதிக்காக இந்தியாவை ஒற்றை நிர்வாகத்தின் கீழ் (மத்திய அரசு) இந்தியாவின் பல்வேறு பகுதிகளை இணைத்தனர்.

# மாகாணத்தில் (மாநிலங்கள்) சுபேதார் (கவர்னர்) முகலாயரின் ஏஜென்ட்டாக செயல்பட்டார்.

# முகலாயர்கள் ஆட்சிக்கு பிறகு ஆட்சிக்கு வந்த பிரிட்டிஷ் அரசும் இதே பாணியை பின்பற்றியது.

# பிரிட்டிஷ் அரசு தங்களது காலனிய ஆட்சியை வலுவாக்கி கொள்ள பிரித்தாளும் சூழ்ச்சியை (Divide & Rule Policy) கைக்கொள்வது வழக்கமாக இருப்பினும் பிற பிரிட்டிஷ் காலனிகளில் "மத்திய அரசு" என்ற ஒற்றை போக்கு கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

# இங்கே இந்தியாவில் முகலாயர்கள் வழியில் பிரிட்டிஷ் அரசு அதிகார குவியல் காரணமாக "மத்திய அரசு" அமைப்பை விரும்பி செயல்படுத்தியது.

# காங்கிரஸ் அரசும் பா.ஜ.க அரசும் முகலாயர்கள் மற்றும் பிரிட்டிஷார் கடைப்பிடித்த பாணியை மாறி மாறி பின்பற்றி வருகின்றனர்.

இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்

# 24 மார்ச் 1946 இல் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவது குறித்தும் பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரங்களை இந்தியத் தலைமைக்கு மாற்றுவது குறித்தும் விவாதிக்கும் நோக்கில் பல பிரதிநிதிகளை கொண்ட அமைச்சரவை தூதுக்குழு (Cabinet Mission Plan) இங்கிலாந்து பிரதமர் கிளமெண்ட் அட்லீயின் முன்முயற்சியில் வடிவமைக்கப்பட்டது,

# அமைச்சரவை தூதுக்குழு (Cabinet Mission Plan) பரிந்துரைகளின் பேரில் 1946 இல் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் (Constituent Assembly of India) இந்திய அரசியலமைப்பை தொகுக்க தேர்ந்தெடுக்கப்பட்டது.

# 1946 இல் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் 389 உறுப்பினர்களைக் கொண்ட (சுதேச மாநிலங்களிலிருந்து 93 பேரும் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து 296 பேரும் அடங்குவர்) மாகாண சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது. (Constituent Assembly of India was elected by the Provincial Assemblies in 1946).

# 9 டிசம்பர் 1946 அன்று புதுதில்லியில் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் முதல் கூட்டம் நடந்தது.

# டாக்டர் சச்சிதானந்த் அவையின் இடைக்கால ஜனாபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் 11 டிசம்பர் 1946 அன்று டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஜனாதிபதியாகவும் எச்.சி.முகர்ஜி துணை ஜனாபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

# இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் எட்டு முக்கிய குழுக்களை நியமித்தது அதில் மிக முக்கியமானது வரைவுக் குழு (Drafting Committee).
# 29 ஆகஸ்ட் 1947 அன்று இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் இந்தியாவுக்கான வரைவு அரசியலமைப்பை (Draft Constitution for India) தயாரிக்க டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் ஒரு வரைவுக் குழுவை (Drafting Committee) அமைத்தது.

# 2 செப்டம்பர் 1946 அன்று இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்திலிருந்து இடைக்கால இந்திய அரசு (Interim Government of India) நிறுவப்பட்டு பிரிட்டிஷ் இந்தியாவை சுதந்திர இந்தியாவாக (Transition of British India to Independent India) மாற்றுவதற்கான பணியைக் கொண்டிருந்தது.

# இந்திய அரசு சட்டம் 1935 க்கு (Government of India Act 1935) மாற்றாக புதிய இந்திய அரசியலமைப்பு (Constitution of India) 26 நவம்பர் 1949 அன்று இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தால் நாட்டின் அடிப்படை சட்ட நிர்வாக ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு டொமினியன் இந்தியா குடியரசு இந்தியாவாக மாறியது.

# குடியரசு தினமாக கொண்டாடப்படும் 26 ஜனவரி 1950 அன்று இந்திய அரசியலமைப்பு (Constitution of India) நடைமுறைக்கு வந்தது.

# முதல் பாராளுமன்ற தேர்தல் மூலம் 1952 இல் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்படும் வரை இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றமே இந்தியாவின் தற்காலிக நாடாளுமன்றமாக மாறியது (Constituent Assembly of India became Provisional Parliament of India until the New Parliament was constituted in 1952 through the first Parliament elections).

இந்திய மாநில சுயாட்சி

# 1930 - 1940 களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் யூனியன் (Union) சொல்லிற்கு பதிலாக பெடரல் (Federal) சொல்லை பயன்படுத்த வேண்டுமென மாநில தலைவர்கள் வைத்த கோரிக்கை ஈடேறவில்லை.

# இந்து - முஸ்லீம் மக்களின் தூதுவராக முஸ்லீம் லீக் சார்பில் செயல்பட்ட ஜின்னா 1937 வரையில் மாநில சுயாட்சி, பிரதிநிதித்துவம் போன்ற கொள்கைகளை தான் பேசி வந்தார்.

# ஆனால் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் இடங்களில் மாநில சுயாட்சி உரிமை தரக்கூடாது என்று வாதிட்டனர் இந்துத்துவாதிகள்.

# ஒரு கட்டத்தில் பார்ப்பன இந்துத்துவாதிகள் மேற்கொண்ட சமநிலை அற்ற அரசியல் போக்கினால் மனம் கொதித்து ஜின்னா பாகிஸ்தான் நாடு மற்றும் பெரியார் திராவிட நாடு கேட்டு கோரிக்கைகளை வைத்தனர்.

# தனி நாடு கோரிக்கை குறித்து ஜின்னாவும் பெரியாரும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

# இதற்கிடையில் அமைச்சரவை தூதுக்குழு (Cabinet Mission Plan) முன்வைத்த திட்டங்களுக்கு ஜின்னாவின் முஸ்லீம் லீக் 6 ஜூன் 1946 லும் நேருவின் காங்கிரஸ் 25 ஜூன் 1946 லும் ஒப்புதல் அளித்தது.

# ஆனால் 10 ஜூலை 1946 இல் யாரும் எதிர்பாராதவிதமாக காங்கிரஸ் இத்திட்டத்திற்கு முழுமையாக கட்டுப்படாது என்றார் நேரு.

# இதனால் அதிர்ச்சி அடைந்த ஜின்னாவின் முஸ்லீம் லீக் தமது ஒப்புதலை 29 ஜூலை 1946 இல் வாபஸ் வாங்கியது.

# இதன் பிறகு "பாகிஸ்தான்" என்ற தனி நாடு கோரிக்கையே விடுதலைக்கான ஒரே வழி என்று எண்ணி அதற்கான ஆரம்பமாக 16 ஆகஸ்ட் 1946 இல் ஜின்னாவின் நேரடி நடவடிக்கை நாள் (Direct Action Day) அமைந்தது.

# பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு 14 ஆகஸ்ட் 1947 இல் பாகிஸ்தான் தனி நாடாகியது.

# 1963 இல் பிரிவினைவாதம் சட்டவிரோதமானது என்று நேரு சட்டம் இயற்ற, நமது திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்ட போதிலும் அதற்கான காரணங்கள் அப்படியே தான் இருக்கின்றன என்றார் அண்ணா.

# ஒரு வேளை பாகிஸ்தான் நம்மோடு இருந்திருந்தால் இந்திய அரசியலமைப்பின் சட்ட முகவரி மாறியிருக்கலாம், இந்துத்துவாதிகளும் வலுவிழந்திருக்கலாம், மாநிலங்களும் சுயாட்சி பெற்றிருக்கலாம்.

இன்றைய நிலை 

# திராவிட நாடு கோரிக்கை வலுவிழந்த பின்னர் "மத்தியிலே கூட்டாட்சி மாநிலத்திலே சுயாட்சி" போன்ற முழக்கங்களை தி.மு.க இன்று வரை மிக தீவிரமாக பேசி வருகிறது.

# அண்ணாயிசம் பேசிய எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மாநில சுயாட்சி முழக்கங்களை கண்டும் காணாமலும் விட்டது.

# பின்னர் ஜெயலலிதா "நானே பிரதமர்! நானே முதல்வர்!" என்ற பாணியிலும் எடப்பாடி "நானே அடிமை! எனக்கேது உரிமை!" என்ற பாணியிலும் ஆட்சி செய்தனர்.

# மொத்தத்தில் தி.மு.கவின் மாநில சுயாட்சி கொள்கைகளை அ.தி.மு.க குழிதோண்டி புதைத்தது.

ரத்தின சுருக்கமாக

# அமெரிக்க மாநிலங்கள் இணைந்து மத்திய அரசை உருவாக்கி "இயன்றவரை" மாநில சுயாட்சியை உறுதி செய்தது = Federal = கூட்டாட்சி

# இந்திய மத்திய அரசு மாநிலங்களை உருவாக்கி "இயன்றவரை" மாநில சுயாட்சியை குறைத்தது = Unitary = ஒற்றையாட்சி

பின் குறிப்பு

இந்திய அரசை எதிர்த்து "அடிப்படை உரிமை" தொடர்பாக வழக்கு தொடுக்க மாநில அரசுகள் பயன்படுத்துவது Article 32. இது உச்சநீதிமன்றத்திற்கு அசல் (Original) அதிகார வரம்பை அளிக்கிறது ஆனால் பிரத்தியேக (Exclusive) அதிகார வரம்பு அல்ல ஏனெனில் உயர்நீதிமன்றங்கள் கூட அரசியலமைப்பு 226 வது பிரிவின் கீழ் அந்த அதிகார வரம்பை கொண்டுள்ளன.

இந்திய அரசை எதிர்த்து "மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே உள்ள உரிமை" தொடர்பாக வழக்கு தொடுக்க மாநில அரசுகள் பயன்படுத்துவது Article 131. இது உச்சநீதிமன்றத்திற்கு அசல் (Original) மற்றும் பிரத்தியேக (Exclusive) அதிகார வரம்பை அளிக்கிறது. இதன் மூலம் தேர்தல்களில் எழும் மோதல்கள், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் எழும் மோதல்கள் போன்றவற்றை உச்சநீதிமன்றம் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியும்.

Article 131 மூலம் முதன்முதலாக 1962 இல் மத்திய காங்கிரஸ் அரசுக்கு எதிராக கையகப்படுத்தல் சட்டம் தொடர்பாக வழக்கு தொடுத்தது மேற்கு வங்க காங்கிரஸ் அரசு. மிக சமீபத்தில் 2020 இல் மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தது கேரளா கம்யூனிஸ்ட் அரசு.
விவரணைகள்

நூல் 1 = மாநில சுயாட்சி - முரசொலி மாறன்

நூல் 2 = திராவிட தேசீயம் : மாநில சுயாட்சி ஏன் - அண்ணா

நூல் 3 = மலர்க மாநில சுயாட்சி (இரண்டு தொகுதிகள்) - கு. ச. ஆனந்தன்

மாநில சுயாட்சி உரிமைக்குரலின் கதை


மாநில சுயாட்சி குறித்து சுப.வீ விளக்கம்


மாநில சுயாட்சி குறித்து தலைவர் கலைஞரின் ஐம்பெரும் முழக்கங்கள்


Constituent Assembly of India


1962 State of West Bengal vs Union of India


2020 State of Kerala vs Union of India


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -