Chocks: காந்தி அகிம்சைவாதியா?

Sunday, November 5, 2023

காந்தி அகிம்சைவாதியா?

காந்தி அகிம்சைவாதியா?
1. முதல் உலக போருக்கு பிறகு பிரிட்டன் அரசு இந்தியாவுக்கு அரசியல் சுதந்திரத்தை வழங்கும் என்ற நம்பிக்கையில் தன்னார்வ நிதி திரட்டும் பிரச்சாரங்களை மேற்கொள்ள இந்தியர்களை காந்தி ஊக்குவித்தார்.

2. முதல் உலக போருக்கு பிறகு, 1919 இல் "மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்" மூலம் பிரிட்டன் ஆட்சியில் இந்தியர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். 

3. இரண்டாம் உலக போரில் இந்திய ஆதரவுக்கான நிபந்தனையாக இந்தியாவிலிருந்து பிரிட்டன் அரசு வெளியேற வேண்டும் என்று காந்தி கோரினார்.

4. காந்தியின் கோரிக்கையை பிரிட்டன் அரசு ஏற்காததால், 1942 இல் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தை காந்தி தொடங்கினர். 

5. இரண்டாம் உலக போர் தீவிரமடைந்து, இந்தியாவில் ஜப்பானிய படையெடுப்பின் சாத்தியமான அச்சுறுத்தல் எழுந்ததால், பிரிட்டனின் போர் முயற்சியை ஆதரிக்க காந்தி ஒப்புக் கொண்டார்.

6. அதே நேரத்தில் இரண்டாம் உலக போருக்கு பிறகு, பிரிட்டன் அரசு இந்தியாவுக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை காந்தி விதித்தார். 

7. இந்திய ராணுவ வீரர்கள் போராட காந்தி இசைவு தெரிவித்தது அவரது அகிம்சை கொள்கைக்கு எதிரானது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

8. பாசிசத்தை முறியடிக்கும் உலக போரை ஆதரித்த காந்தி, நேதாஜியை ஏன் ஆதரிக்கவில்லை என்று நேதாஜி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

9. வரலாற்று தரவுகளின்படி, அம்பேத்கரின் கோரிக்கை மீதான காந்தியின் செயல்பாடும், இந்து மதம் குறித்த காந்தியின் கருத்தும் சர்ச்சைக்குரியவை.

10. காந்தியை மேற்கூறியவாறு பல அடுக்குகளில் ஆய்வு செய்யலாம், ஆனால் அதே நேரத்தில் காந்தியின் அகிம்சை எதிர்ப்பு பிரிட்டன் அரசின் அணுகுமுறையில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டிருந்ததை மறுக்க இயலாது.

11. 1917 இல் சம்பாரண் இயக்கம், 1918 இல் கெடா இயக்கம், 1919 இல் கிலாபத் இயக்கம், 1920 இல் ஒத்துழையாமை இயக்கம், 1930 இல் கீழ்ப்படியாமை இயக்கம் மற்றும் 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவை காந்தியின் முக்கிய அகிம்சை இயக்க போராட்டங்கள் ஆகும்.

12. ஏற்கனவே உள்ள அமைப்புக்குள் இருந்து கொண்டு அமைப்பை சீர்ப்படுத்த முயன்ற காந்தியின் கருத்துக்கள் மற்றும் வழிமுறைகளுடன் உடன்படாத இந்துத்துவா குழுவின் உறுப்பினரான நாதுராம் கோட்சேவால் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

13. அகிம்சையை தீவிரமாக பின்பற்றிய காந்தியை பற்றிய சிலரது தவறான நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய "காந்தி அகிம்சைவாதியா?" என்ற தலைப்பு கொடுக்கப்பட்டது.

14. ஆம்! காந்தி அகிம்சைவாதி தான். "காந்தி அப்படி செய்திருக்கலாம்! காந்தி இப்படி செய்திருக்கலாம்!" என்று நாம் பேசி போராட வேண்டியது காந்திக்கு எதிராக அல்ல மாறாக காந்தியின் கொள்கைகளுக்காக அவரை வெறுக்கும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

"அகிம்சைவாதியாக வாழ்ந்த காந்தி 

இறுதியில் கொல்லப்பட்ட காந்தி" 

இதுவே காந்தியின் இரண்டடி சுருக்கமாகும்.

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -