Chocks: நுழைவுத் தேர்வை ரத்து செய்த கலைஞர்

Sunday, November 5, 2023

நுழைவுத் தேர்வை ரத்து செய்த கலைஞர்

நுழைவுத் தேர்வை ரத்து செய்த கலைஞர்
பகுதி 1 

# 09.06.2005 தேதியிட்ட அரசாணையின்படி (G.O Ms 184) நுழைவுத் தேர்வு வேண்டாம் என்ற ஜெயலலிதாவின் உத்தரவை எதிர்த்து பிரியதர்ஷினி என்பவர் 2005 இல் தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதாவின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு தலைமையிலான அமர்வு ரத்து செய்தது. 

பகுதி 2 

# பிரியதர்ஷினி தொடர்ந்த வழக்கில், அன்றைய உயர்நீதிமன்றம், நுழைவுத் தேர்வு கூடாது என்று ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு நினைத்தால், அதற்கு முறையான சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

பகுதி 3 

# G.O ஆணை செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, 2006 இல் Tamil Nadu Regulation of Admission in Professional Courses Act என்ற சட்டத்தை ஜனாதிபதியின் ஒப்புதலின்றி ஜெயலலிதா இயற்றினார், மைனர் நிஷாந்த் ரமேஷ் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த சட்டத்தை ரத்து செய்தது. 

பகுதி 4 

# குடியரசு தலைவரின் ஒப்புதலை பெரும் முயற்சியில் ஈடுபடாமல் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் சென்றார். 

# இதற்கிடையே, 2006 இல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 

# இதையடுத்து, பதவியேற்ற தி.மு.க அரசு சார்பில், ஜெயலலிதாவை போல "தும்பை விட்டு வாலை பிடிக்காமல்" நுழைவுத் தேர்வை முறைப்படி ரத்து செய்ய இயற்றிய சட்டத்தை, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினார் முதல்வர் கலைஞர். 

# கலைஞரின் அரசு இயற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி அப்துல் கலாம்.

# அதன்படி கலைஞரின் முறையான முயற்சியால் 07.03.2007 அன்று நுழைவுத் தேர்வுக்கு முடிவுரை எழுதப்பட்டது. 

# இது தான் நுழைவுத் தேர்வு ரத்துக்கான உண்மை வரலாறு.

2005-2006 கதையின் சுருக்கம்

பிரியதர்ஷினி வழக்கில், நுழைவுத் தேர்வை ரத்து செய்ய உரிய சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது. ஆனால், நீதிமன்ற அறிவுரைப்படி ஜனாதிபதி ஒப்புதலை பெற ஜெயலலிதா முயற்சியே செய்யவில்லை.

பிரியதர்ஷினி வழக்கில் உயர்நீதிமன்றத்தின் அறிவுரையை முறையாக கேட்காமல் ஜெயலலிதா தொடர்ந்து செயல்பட்டதால் மைனர் நிஷாந்த் வழக்கிலும் ஜெயலலிதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. நுழைவுத் தேர்வை ரத்து செய்ய முறைப்படி சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று அதை ரத்து செய்தார் கலைஞர்.

நுழைவுத் தேர்வு கடந்து வந்த பாதை 

1984 இல் MGR தலைமையிலான அ.தி.மு.க அரசு, தொழில்முறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து, 1984-85 முதல் Tamil Nadu Professional Courses Entrance Examination (TNPCEE) அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரின் நலனுக்காக போராடிய பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரின் கொள்கைகளுக்கு எதிரானது நுழைவுத் தேர்வு முறை என்று தி.மு.க கடுமையாக எதிர்த்தது.

1997 இல் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு, ஒற்றை சாளர சேர்க்கை முறை (Single Window Admission System) அறிமுகப்படுத்தியது. அதுவரை, மாணவர்கள் பல கல்லூரிகளுக்கு பல விண்ணப்பங்களை அனுப்ப வேண்டியிருந்தது. ஆனால், ஒற்றை சாளர முறை மாணவர்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கையை ஒரே அமர்வில் உறுதி செய்தது.

2005 இல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு, மாணவர்களை பாதிக்கும் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். நீதிமன்ற அறிவுறுத்தலை பின்பற்றி வாக்குறுதியை முறையாக செயல்படுத்த ஜெயலலிதா முயற்சிக்கவில்லை. ஜனாதிபதியுடன் ஒப்பிடும்போது தன்னை உயர்ந்தவர் என்று ஜெயலலிதா நினைத்து கொண்டார் போலும். ஒரு வழியாக அதன் பின்னர், 2006 இல் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு, ஜனாதிபதி ஒப்புதலுடன் Tamil Nadu Regulation of Admission in Professional Courses Act, 2006 மூலம் பொறியியல், மருத்துவம், வேளாண்மை மற்றும் அவை சார்ந்த இதர படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பின் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற கடைசி TNPCEE தேர்வு

Examination = 18-19 May 2006 

Results = 04 June 2006 

நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி கலைஞர் எடுத்த முயற்சியால், 2007 முதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, +2 மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் கல்லூரி கலந்தாய்வு முறை உறுதி செய்யப்பட்டது. 

குறிப்பு = அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முனிரத்னா ஆனந்தகிருஷ்ணன், உயர்கல்விக்கான நுழைவு தேர்வை ரத்து செய்து, ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை முறையை அறிமுகப்படுத்திய தி.மு.க அரசின் கொள்கை வரைமுறைக்கு (Policy Formation) வழிகாட்டியாக இருந்தார்.
விவரணைகள் 

G.O Ms No 184 (09.06.2005)


Tamil Nadu Regulation of Admission in Professional Courses Act, 2006 


N.Priyadarshini vs The Secretary To Government on 27 June, 2005


Minor Nishanth Ramesh vs The State Of Tamil Nadu on 27 February, 2006 


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -