Chocks: சில கேள்விகள் சில பதில்கள்

Saturday, February 10, 2024

சில கேள்விகள் சில பதில்கள்

சில கேள்விகள் சில பதில்கள்
1.கேள்வி = இந்திய கடல்சார் படிப்புக்கு வித்திட்டவர் யார்?

1.பதில் = வழக்கறிஞர் பி.எஸ்.சிவசாமி, 12.01.1922 அன்று சட்டப்பேரவையில் "இந்தியாவில் கடல்சார் கல்லூரியை நிறுவ வேண்டும்" என்ற முன்வைத்த தீர்மானம் கடல்சார் படிப்புக்கு வித்திட்டது.


2.கேள்வி = நவீன உலகில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட முதல் சைபர் தாக்குதலை (Cyber-terrorism) மேற்கொண்டது யார்?

2.பதில் = 1997 இல் இலங்கை அரசுக்கு எதிராக விடுதலைப் புலிகள் முதல் சைபர் தாக்குதலை மேற்கொண்டது.


3.கேள்வி = பழங்காலத்தில் நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை எவ்வாறு தணிக்கை (Audit) செய்தன?

3.பதில் = பதிவேடு (Register)

4.கேள்வி = நவீன உலகின் முதல் Digital கடிகாரம் எது?

4.பதில் = 1972 இல் ஹாமில்டன் (Hamilton) நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்சர் (Pulsar) கடிகாரம்.


5.கேள்வி = இந்தியாவில் "கணினி அறிவியலுக்கும் ஈரோடு மாநகருக்கும்" உள்ள சுவாரஸ்யமான தொடர்பு என்ன?

5.பதில் = இந்தியாவில் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் முதன்முதலில் கணினி அறிவியல் பாடத்திட்டத்தை நிறுவியவர் வைத்தீஸ்வரன் ராஜாராமன், இந்தியாவில் கணினி அறிவியல் பாடத்திட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மூவரில் ஒருவர் பி.ஏ.வெங்கடாசலம், மெட்ராஸ் கிண்டி பொறியியல் கல்லூரிக்கு சென்று கணினிகளின் செயல்பாடுகளை பற்றி அறிந்து கொண்டு அறிவியல் வளர்ச்சியில் கணினிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று பேசியவர் பெரியார். 1960 காலகட்டத்தில் கணினியின் முக்கியத்துவத்தை அறிந்த மேற்கூறிய 3 ஆளுமைகளும் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள்.

6.கேள்வி = டெல்லியில் ஒரு கூட்டத்திற்கு செல்லும் வழியில் காந்தி கொல்லப்பட்டார். அதென்ன கூட்டம்?

6.பதில் = காந்தி டெல்லியில் உள்ள பிர்லா மாளிகையின் பின்புற தோட்டத்தில் தனது தினசரி அனைத்து மத பிரார்த்தனை கூட்டத்திற்கு செல்லும் வழியில் கொல்லப்பட்டார்.

7.கேள்வி = இந்தியாவில் முதல் பாலிடெக்னிக் (Polytechnic) கல்லூரியை தொடங்க வித்திட்டவர் யார்?

7.பதில் = கோபால்சாமி துரைசாமி நாயுடு (G.D.நாயுடு)


8.கேள்வி = நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங். அவருக்கு முன்பே நிலவில் கால் பதிக்க வேண்டியவர் விபத்தில் இறந்து விட்டார். அவர் யார்?

8.பதில் = குஸ் கிரிஸ்ஸம் (Gus Grissom), இறந்த வருடம் 1967, பணி = Apollo 1


9.கேள்வி = அமெரிக்காவுக்கு சுதந்திர நாளான  ஜூலை 4 இந்தியாவுக்கும் ஒரு முக்கியமான நாள் தான். அதென்ன முக்கியத்துவம்?

9.பதில் = 4 ஜூலை 1947 அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் குறித்தான "சுதந்திர மசோதா" பிரிட்டன் பாராளுமன்ற சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


10.கேள்வி = மருத்துவ ஆய்வக உலகில் "என்றும் அழியாத" பெண்மணி யார்?

10.பதில் =  காலவரையின்றி இனப்பெருக்கம் செய்யக்கூடிய ஒரே மனித உயிரணு வரிசையாக இருக்கும் ஹீலா உயிரணுக்களை (Hela Cells) கொடுத்த ஹென்ஹிட்டா லாக்ஸ் (Henrietta Lacks) மருத்துவ ஆய்வக உலகில் "என்றும் அழியாத" பெண்மணி என்று அழைக்கப்படுகிறார்.


11.கேள்வி = உலகின் அனைத்து இசை மரபுகளும் நமது பழந்தமிழ் இசை இலக்கணத்திலிருந்து வந்தவை என்பதை நிறுவிய தமிழிசையின் தந்தை யார்?

11.பதில் = ஆபிரகாம் பண்டிதர்


12.கேள்வி = இரண்டு கிரேக்க அறிஞர்களின் நூல்களை முன்மாதிரியாக கொண்டு, நவீன உலகின் அரசியல் மன்றமும் நீதி மன்றமும் வடிவமைக்கப்பட்டன. அந்த அறிஞர்கள் யார்?

12.பதில் = அரிசுட்டாட்டில் மற்றும் பிளேட்டோ (Aristotle and Plato)

13.கேள்வி = பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கேட்டு சாவர்க்கர் எழுதிய மன்னிப்பு கடிதங்கள் எத்தனை?

13.பதில் = 5 கடிதங்கள் (எழுதிய வருடம் = 1911, 1913, 1914, 1918 and 1920).


14.கேள்வி = 1971 இல் புரூஸ் லீ கூறிய "நீர் போல் இரு நண்பா" (Be Water, My Friend) என்பது பிரபலமான கூற்றாகும். அது போல, சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் தமிழறிஞர் கணியன் பூங்குன்றன் இயற்றிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்" பாடலில் வாழ்க்கையை நீருடன் இணைத்து உவமையாக ஒரு வரி உள்ளது. அதென்ன?

14.பதில் ⏬  

பாடல் வரி = நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

பொருள் = நீரின் போக்கில் செல்லும் தெப்பம்போல உயிர்வினைப்படி செல்லும்.

15.கேள்வி = இந்திய உச்ச நீதிமன்றத்தில் 13 நீதிபதிகளைக் கொண்டு விசாரிக்கப்பட்ட வழக்கு எது?

15.பதில் = கேசவானந்த பாரதி வழக்கு.


16.கேள்வி = "இருமுனை இணைவு" தான் சாதியின் நிறுவனமயமாக்கலுக்கு (Institutionalization) வழிவகுத்தது என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இங்கே, இருமுனை இணைவு என்றால் என்ன?

16.பதில் = "தூய்மை x மாசு" என்ற இருமுனை சமூகத்தில் இணையும் போது தான் சாதி நிறுவனமயமாக்கல் நிகழ்ந்ததாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். அதாவது, தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட ஆதிக்க சாதிகள் உருவாக்கிய "சுத்தம் x அசுத்தம்" என்ற தந்திரம் தான் சாதியை கட்டமைக்கிறது.

17.கேள்வி = இரண்டாம் உலகப் போரில் திருப்புமுனையாக அமைந்தவை எது?

17.பதில் ⏬

*ஜப்பான் அமெரிக்காவை தாக்கியது (Pearl Harbour Attack)
*அமெரிக்கா ஜப்பானை தாக்கியது (Hiroshima-Nagasaki)
*நார்மாண்டி படையிறக்கம் (Normandy Landing)
*பர்பரோசா நடவடிக்கை (Operation Barbarossa)
*ஸ்டாலின்கிராட் போர் (Battle of Stalingrad)
*அலன் டூரிங் கண்டுபிடிப்பு (Enigma Machine)

18.கேள்வி = 1976 நெருக்கடி நிலையின் போது இயற்றப்பட்ட 42 வது சட்டத்திருத்தம் எதைக் குறிக்கிறது?

18.பதில் ⏬ 

*நீதிமன்றங்களின் அதிகாரத்தை குறைக்கப்பட்டது.
*குடிமக்களுக்கான அடிப்படைக் கடமைகளை வகுக்கப்பட்டது.
*Socialism, Secular மற்றும் Intergrity ஆகிய சொற்கள் சேர்க்கப்பட்டது.
*கல்வி, வனம், எடை மற்றும் அளவு, விலங்கு மற்றும் பறவை பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியவை மாநிலப் பட்டியலில் இருந்து ஒருங்கியல் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.


19.கேள்வி = அதிகாரப்பூர்வமற்ற இந்திய மூவர்ணக்கொடி எங்கு, எப்போது, எதனால் முதல் முறையாக ஏற்றப்பட்டது?

19.பதில் ⏬

எங்கு = கொல்கத்தா
எப்போது = 07 ஆகஸ்ட் 1906
எதனால் = சுதந்திர கோரிக்கை

"செம்மஞ்சள், மஞ்சள், பச்சை" நிறத்தில் வடிவமைக்கப்பட்ட கொல்கத்தா கொடி வடிவமைக்கப்பட்டது. கொடியின் நடுவில் "வந்தே மாதரம்" என்று எழுதப்பட்டது. சசீந்திர பிரசாத் போஸ் (Sachindra Prasad Bose) மற்றும் ஹேமச்சந்திர கனுங்கோ (Hemchandra Kanungo) வடிவமைத்த கொல்கத்தா கொடி (Calcutta Flag) இந்தியாவின் முதல் அதிகாரப்பூர்வமற்ற கொடி (Unofficial Flag) என்று அறியப்படுகிறது.


20.கேள்வி = இந்தியாவின் முதல் போலீஸ் என்கவுண்டர் சம்பவம் எது?

20.பதில் = போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட மன்யா சர்வேயின் மரணம் தான் பதிவு செய்யப்பட்ட முதல் போலீஸ் என்கவுன்டர் என்று அறியப்படுகிறது.


21.கேள்வி = சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு உளவியல் ரீதியாக உள்ள "பயம்" என்ன?

21.பதில் = தூக்கம். 

22.கேள்வி = முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை பற்றி துப்பு துலக்க விசாரணை குழுவுக்கு முதலில் கிடைத்த முக்கியமான தடயம் என்ன?

22.பதில் = ஹரி பாபு என்பவர் Chinon CX கேமராவில் எடுத்த 10 புகைப்படங்கள்


23.கேள்வி = சுதந்திர இந்தியாவில் 1947 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் தூக்கிலிடப்பட்ட ஒரே பெண் குற்றவாளி யார்?

23.பதில் = 3 சிறுமிகளை கொன்றதற்காக 03-01-1955 அன்று ரத்தன் பாய் ஜெயின் (Rattan Bai Jain) தூக்கிலிடப்பட்டார்.


24.கேள்வி = தமிழ்நாட்டில் கடைசியாக தூக்கிலிடப்பட்ட குற்றவாளி யார்?

24.பதில் =  27-04-1995 அன்று ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்டார்.

25.கேள்வி = பழங்காலத்தில் தமிழ்நாட்டின் முதல் வணிக வளாகம் எது?

25.பதில் = மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகே அமைந்துள்ள "புது மண்டபம்" தான் தமிழ்நாட்டின் முதல் வணிக வளாகம். 1600 களில் வசந்த விழாவை நடத்த திருமலை நாயக்கர் கட்டிய புது மண்டபம், ஆங்கிலேய நுழைவுக்கு பிறகு 1800 நடுப்பகுதியில் இருந்து வணிக வளாகமாக செயல்பட்டு வந்தது. இன்று "சீர்மிகு நகரங்கள்" திட்டத்தின் கீழ் புது மண்டபம் கடைகள் காலி செய்யப்பட்டு பாரம்பரிய சின்னமாக பாதுக்காக்கப்படுகிறது.

26.கேள்வி = இந்திய கிரிக்கெட் அணி சார்பில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதல் சதம் அடித்த வீரர் யார்?

26.பதில் = கபில் தேவ் 


27.கேள்வி = நேருவின் அரசியல் உலகில் பின்னடைவாக பார்க்கப்படுவது எது?

27.பதில் = 1962 இல் சீனாவின் தீடீர் தாக்குதலால் இந்தியா தனது அக்சாய் சின் நிலப்பகுதியை சீனாவிடம் பறிகொடுத்தது.

28.கேள்வி = நவீன எண்ணெய் கிணறு எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

28.பதில் = 27-08-1859 அன்று அமெரிக்க நாட்டில் பென்சில்வேனியா மாகாணத்தில் டைட்டஸ்வில்லே பகுதியில் எட்வின் டிரேக் என்பவர் 69.5 அடி துளையிட்டு எண்ணெய்யை கண்டறிந்தார். பல்வேறு முரண்கள் இருப்பினும், Drake Well எனப்படும் இதுவே உலகின் முதல் எண்ணெய் கிணறு அதிகளவில் ஏற்கப்பட்டு இருக்கிறது.


29.கேள்வி = தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு இடையில் வசனம் இடம்பெற்ற முதல் பாடல் எது?

29.பதில் ⏬

திரைப்படம் = கைதி
வெளிவந்த ஆண்டு = 1951
பாடல் = Be Happy Be Jolly 
பாடலாசிரியர் = கே.டி.சந்தானம்
இயக்கம் = வீணை பாலச்சந்தர்

30.கேள்வி = வியட்நாம் போர் நிற்பதற்கு திருப்புமுனையாக அமைந்த புகைப்படம் எது?

30.பதில் = பான் தி கிம் ஃபூக் என்ற பெண் குழந்தை அலறியபடி ஓடி வரும் புகைப்படம்.


31.கேள்வி = நவீன உலகில் அறியப்பட்ட முதல் தார் ரோடு எது?

31.பதில் = 1824 இல் பாரிஸ் நகரில் உள்ள சாம்ப்ஸ்-எலிசீஸ் (Champs-Elysees) சாலையில் போடப்பட்ட தார் ரோடு தான் நவீன உலகில் அறியப்பட்ட முதல் தார் ரோடு ஆகும். 


32.கேள்வி = கம்பியில்லா தந்தி (Wireless Telegraphy) உதவியுடன் பிடிபட்ட முதல் குற்றவாளி யார்?  

32.பதில் = மருத்துவர் ஹவ்லி ஹார்வி கிரிப்பன் (Dr.Hawley Harvey Crippen)


33.கேள்வி = விண்வெளிக்கு முதலில் பயணம் மேற்கொண்டது யார்?

33.பதில் = விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட முதல் விலங்கு Laika என்ற நாய் மற்றும் முதல் மனிதர் யூரி கேகரின்.


34.கேள்வி = அயோத்திதாசரும் இரட்டைமலை சீனிவாசனும் எதில் கருத்து முரண் கொண்டனர்?

34.பதில் = அயோத்திதாசர் "தமிழன், திராவிடன்" என்ற சொல்லையும், இரட்டைமலை சீனிவாசன் "பறையன்" என்ற சொல்லையும் பயன்படுத்தியதில் கருத்து முரண் கொண்டனர்.


35.கேள்வி = பூமியைத் தாண்டி கண்டுபிடிக்கப்பட்ட முதல் தனிமம் எது?

35.பதில் = ஹீலியம் (Helium)

18.08.1868 அன்று ஆந்திர பிரதேசம் குண்டூரில் பிரெஞ்சு விஞ்ஞானி ஜூல்ஸ் ஜான்சன் என்பவர் சூரிய கிரகணம் ஆராய்ச்சியின் போது ஒரு தனிமத்தை கண்டுபிடித்தார். 20.10.1868 அன்று அந்த தனிமத்திற்கு ஹீலியம் (Helios = Sun in Greek) என பெயரிட்டவர் நார்மன் லாக்கர்.


36.கேள்வி = கண்ணதாசன் அவர்கள் தான் எழுதிய பற்பல பாடல்களில் தனக்கு மிகவும் பிடித்த பாடல்களாக எதை சொன்னார்?

36.பதில் = சம்சாரம் என்பது வீணை பாடல் (SPB, மயங்குகிறாள் ஒரு மாது, 1975) மற்றும் என்னடா பொல்லாத வாழ்க்கை பாடல் (SPB, தப்புத் தாளங்கள், 1978)

37.கேள்வி = இந்தியாவில் மிகவும் சர்ச்சைக்குரிய பகுதி மற்றும் உலகளவில் மிகவும் சர்ச்சைக்குரிய பகுதிகள் எவை?

37.பதில் = இந்தியாவில் காஷ்மீர், உலகளவில் தைவான் மற்றும் இஸ்ரேல் - பாலஸ்தீன் பகுதிகள்.

38.கேள்வி = இதுவரை உலகில் எழுதப்பட்ட மிகப் பழமையான கதை எது?

38.பதில் = 4000 ஆண்டுகளுக்கு முன்பு அக்காடியன் மொழியில் இயற்றப்பட்ட "கில்காமேஷ்" உலகில் எழுதப்பட்ட மிகப் பழமையான கதையாகக் கருதப்படுகிறது. சுமேரியா நாட்டில் உருக் (தெற்கு ஈராக்) தேசத்தை ஆட்சி செய்த மன்னன் கில்காமேஷ் மற்றும் அவரது காலத்தில் நடந்த வெள்ளப்பெருக்கை பற்றி பேசும் கதையே கில்காமேஷ் ஆகும்.

39.கேள்வி =  பழங்காலத்திலும் நவீன காலத்திலும்  இடவியல் வரைபடம் (Topography Map) வடித்த நாடுகள் எவை?

39.பதில் = பழங்காலத்தில் மெசொப்பொதாமியா மற்றும் நவீன காலத்தில் பிரான்ஸ்.

40.கேள்வி = 20 ஆம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்ட முதல் இனப்படுகொலை எது?

40.பதில் = ஆர்மேனியன் இனப்படுகொலை (Armenian Genocide)

41.கேள்வி = 20 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதல் மாபெரும் போராட்டம் எது?

41.பதில் = 1921 இல் தொழிலாளர்கள் நடத்திய "பக்கிங்காம் மற்றும் கர்னாட்டிக் (B & C) ஆலை போராட்டம்" தான் தமிழ்நாட்டில் முதல் மாபெரும் போராட்டம் ஆகும்.

42.கேள்வி =  மரணத்திற்குப் பின் மன்னிக்கப்பட்டு, பின்னர் நாணயத்தாளின் முகமாக மாறிய புகழ்பெற்ற கணினி விஞ்ஞானி யார்?

42.பதில் = அலன் டூரிங் (Alan Turing)


43.கேள்வி = தமிழ்நாட்டில் லோக் சபா எம்.பியாக (Lok Sabha MP), ராஜ்ய சபா எம்.பியாக (Rajya Sabha MP), சட்டமன்ற உறுப்பினராக (MLA), சட்ட மேலவை உறுப்பினராக (MLC) பணியாற்றிய ஒரே அரசியல்வாதி யார்?

43.பதில் = எல்.கணேசன்  [Lok Sabha MP  = 2004 / Rajya Sabha MP = 1980 / MLA = 1967, 1971,1989 / MLC = 1986]

44.கேள்வி = அவசர கால மருத்துவ தொலைபேசி எண் "108" உருவாக மூலகர்த்தா யார்?

44.பதில் = மருத்துவர் A.P.ரங்கா ராவ், சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி.


45.கேள்வி = இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்தியின் நுழைவுக்கு காரணமாக அமைந்த ரெளலட் சட்டத்தின்  வரைவை எழுதியது யார்?

45.பதில் = சி.வி.குமாரசாமி சாஸ்திரி.  

46.கேள்வி = சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தப்படும் ஹேஸ்டேக்கை (Hashtag) கண்டுபிடித்தவர் யார்?

46.பதில் = கிறிஸ் மெசினா (Chris Messina)


47.கேள்வி = சாக்லேட் (Chocolate) செய்ய தேவைப்படும் மூலப்பொருளான கொக்கோ பவுடர் (Cocoa Powder) மற்றும் வைர நகை செய்ய தேவைப்படும் வைரங்கள் எந்த கண்டத்தில் அதிகமாக இருக்கிறது?

47.பதில் = கொக்கோ பவுடர் / வைரங்கள் ஆப்பிரிக்கா கண்டத்தில் அதிகமாக இருக்கிறது. குறிப்பிடத்தகுந்த அளவு எண்ணெய், நிலக்கரி, தங்கம் கூட இருக்கிறது. ஆனால் ஆப்பிரிக்கா ஏழை நாடு, காரணம் அரசியல்.

48.கேள்வி = பெட்ரோலியம் என்றால் என்ன?

48.பதில் = லத்தீன் மொழியில் பெட்ரோலியம் என்றால் "பாறைக்குள் இருக்கும் எண்ணெய்" (பெட்ரா = பாறை / ஓலியம் = எண்ணெய்) எனப்படும். பண்டைய நுண்ணுயிரிகள் பெரும்பாலும் கடலோர மணல், வண்டல் மற்றும் பாறை அடுக்குகளின் கீழ் புதையுண்ட போது, ​​​​இந்த அடுக்குகளின் அழுத்தம் மற்றும் வெப்பம் மில்லியன் கணக்கான ஆண்டுகளில் நுண்ணுயிரிகளின் எச்சங்களை பெட்ரோலியமாக மாற்றுகிறது.

49.கேள்வி = எந்த வடிவமைப்பு, கருவிகளை வடிவமைக்க ஆதிகால மனிதனை தூண்டியது?

49.பதில் = பற்கள்

50.கேள்வி = மண்ணில், விண்ணில், கடலில் புதிய தகவல்களை (Big Data) திரட்ட மனிதன் தடம் பதித்த ஆராய்ச்சிகள் குறித்து சொல்லுங்கள்.

50.பதில் ⏬

*மண் - Soil = Justus Von Liebig = 1830s = Study of Plant Nutrients
*விண் - Space = Sputnik 1 = 1957 = First Artificial Satellite = Study of Space
*கடல் - Sea = HMS Challenger = 1872 to 1876 = Study of Deep Sea Creatures

51.கேள்வி = உலகமயமாக்கலின் முக்கிய கருவிகள்

51.பதில் ⏬

*Power - அதிகாரம் (Super Power)
*Money - பணம் (Dollars Currency)
*Logistics - தளவாடங்கள் (Ship, Train, Bus, Truck, Plane)
*Production - உற்பத்தி பெருக்கல் (Multiplication)

52.கேள்வி = கருந்துளை (Black Hole) பெயர் காரணம் என்ன?

52.பதில் = சிறைக்குள் நுழைந்தால் உயிருடன் தப்பிக்க முடியாது என்று கருதப்பட்ட, கருந்துளை சிறை என்று அழைக்கப்பட்ட, கல்கத்தா சிறைச்சாலையை குறிக்கும் வகையில் ராபர்ட் டிக் (Robert Dicke) கருந்துளை என்ற சொல்லை உருவாக்கினார்.


53.கேள்வி = தமிழ்நாட்டில் முதல் சுயமரியாதை திருமணம் என அறியப்படுவது எது?

53.பதில் = 1928 இல் அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தம் சிற்றூரில் சண்முகம் மற்றும் கைம்பெண் மஞ்சுளா ஆகியோருக்கு தந்தை பெரியார் சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்தார்.


54.கேள்வி = ஏன் 2 டிசம்பர் கியூபாவின் முக்கியமான நாள்?

54.பதில் ⏬

*2 டிசம்பர் 1956 = கியூபாவின் சர்வாதிகாரி ஃபுல்கென்சியோ பாடிஸ்டாவின் ஆட்சியைக் கவிழ்க்க ஃபிடல் காஸ்ட்ரோவின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. 
*2 டிசம்பர் 1961 = கியூபா பொதுவுடைமை நாடாகும் என்று பிரதமர் பிடல் காஸ்ட்ரோ அறிவித்தார்.
*2 டிசம்பர் 1976 = 1959 முதல் 1976 வரை 17 வருடங்கள் பிரதமராக பணியாற்றிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் ஜனாதிபதி ஆனார்.

55.கேள்வி = "மன்றோ கொள்கை" என்றால் என்ன?

55.பதில் = 2 டிசம்பர் 1823 அன்று "மன்றோ கொள்கை" ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் மன்றோ அறிமுகம் செய்தார். 6 டிசம்பர் 1905 அன்று “மன்றோ கொள்கை” உடன் “ரூஸ்வெல்ட் இணை” (Roosevelt Corollary) என்றொரு கொள்கையை அமெரிக்கா அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் இணைத்தார். ஐரோப்பிய விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாது, அமெரிக்க விவகாரங்களில் ஐரோப்பா தலையிடக்கூடாது, இனிமேல் மேற்கு அரைக்கோளம் (Western Hemisphere) காலனித்துவத்தை ஏற்காது, மேற்கு அரைக்கோளம் பகுதிகளை பாதுகாப்பது அமெரிக்காவின் பொறுப்பு என்பது “மன்றோ கொள்கை மற்றும் ரூஸ்வெல்ட் இணை” கொள்கைகளின் சுருக்கமான சாராம்சம் ஆகும். இதுவே, லத்தீன் அமெரிக்க நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிட உதவியது.

56.கேள்வி = 7 டிசம்பர் இரண்டாம் உலகப்போரை மாற்றி அமைத்த நாள். அதென்ன?

56.பதில் = 7 டிசம்பர் 1941 அன்று அமெரிக்காவின் ஹவாய்த் தீவில் அமைந்துள்ள பேர்ள் துறைமுகம் மீது ஜப்பானியக் கப்பற்படைத் தாக்குதல் நடத்தியதில் சுமார் 2000 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். இதையெடுத்து, இரண்டாம் உலகப்போரில் நேரடியாக களம் இறங்க அமெரிக்கா ஆயத்தமானது. பேர்ள் துறைமுகத் தாக்குதலுக்கு ஜப்பானைத் பழிவாங்க காத்திருந்த அமெரிக்கா 1945 இல் ஜப்பானின் ஹிரோஷிமா - நாகசாகி பகுதியில் அணுகுண்டை வீசி லட்சக்கணக்கான மக்களை கொன்றொழித்தது. இதைத் தொடர்ந்து, சில நாட்களில் முடிவுற்ற இரண்டாம் உலகப்போருக்கு பிறகு இரண்டாம் உலகப்போரில் வென்றாலும் பிரிட்டன் பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலைக்கு செல்ல காலனி நாடுகள் ஒவ்வொன்றும் விடுதலை பெற்றது, அமெரிக்காவும் Super Power ஆக உயர்ந்தது.


57.கேள்வி = ஜெய் ஹிந்த் என்ற சொல்லை நிறுவியவர் யார்?

57.பதில் = செண்பகராமன்


58.கேள்வி = ஆதிகால வேட்டையாடி மனிதர்களின் மனதில் முதலில் தோன்றியது பேய் நம்பிக்கையா அல்லது இறை நம்பிக்கையா?

58.பதில் = "இயற்கை" மீதான "பேய் பயம்" தான் "இறை நம்பிக்கை" உருவாக காரணம்.

59.கேள்வி = 28 டிசம்பர் இந்தியாவில் இரு பெரும் புள்ளிகளின் பிறந்தநாள். ஒருவர் இல்லை, ஒருவர் இருக்கிறார். சரியோ தவறோ ஆனால் இந்த இருவரால் பலர் வாழ்கிறார்கள்.

59.பதில் ⏬

திருபாய் அம்பானி = 28 டிசம்பர் 1932 - 6 ஜூலை 2002 

ரத்தன் டாடா = 28 டிசம்பர் 1937

60.கேள்வி = "ஆலய நுழைவு பிரவேசம்" நடந்த 1939 இல் வைத்தியநாதர் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்ற முதல் ஆறு தாழ்த்தப்பட்ட மக்கள் யார்?

60.பதில் ⏬

*முத்து
*விருதுநகர் சண்முகம் 
*மதிச்சியம் சின்னையா
*விராட்டிபத்து பூவலிங்கம்
*ஆலம்பட்டி முருகானந்தம்
*கக்கன் (முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்)

61.கேள்வி = உலகின் முதல் சட்ட வல்லுநர் யார்?

61.பதில் = உலகின் முதல் சட்ட வல்லுநர் பாபிலோனிய பேரரசர் ஹம்முராபி ஆவார். அவரது வழிகாட்டலில் "Code of Hammurabi" சட்டம் உருவானது.


62.கேள்வி = உலகில் அதிக போர்களை கண்ட வீரன் யார் ?

62.பதில் = சைமன் பொலிவார்

நாடுகளை கைப்பற்றுவதற்கு போர் தொடுத்த மாவீரர்கள் அலெக்சாண்டர் மற்றும் நெப்போலியன். ஆனால், லத்தீன் அமெரிக்க நாடுகள் விடுதலை அடைவதற்கு போர் தொடுத்த மாவீரர் சைமன் பொலிவார். சைமன் பொலிவாரால் விடுதலை பெற்ற ஒரு நாடு அன்னாரை நினைவு கூறும் விதமாக தங்கள் நாட்டுக்கு Bolivia என்று பெயரிட்டனர். சைமன் பொலிவருக்கு மரியாதை செய்யும் விதமாக 24 ஜூலை 1983 அன்று இந்திய ஒன்றிய அரசு தபால் தலை வெளியிட்டது. தற்போதைய சூழலில் மாறுபட்ட அரசியல் கருத்துக்கள் நிலவினாலும் அதிக போர்களை சந்தித்தவர் என்ற "பிம்பம்" சைமன் பொலிவாருக்கு தான் உள்ளது.

63.கேள்வி1997 இல் முதல் கேமரா போனில் புகைப்படம் எப்படி எடுக்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டது?

63.பதில் =  1997 இல் "கேமரா செல்போன்கள்" இல்லாத நிலையில், தொழிலதிபர் பிலிப் கான் தனது டிஜிட்டல் கேமரா மற்றும் மோட்டோரோலா செல்போனை இணைத்து கலிபோர்னியாவின் சாண்டா குரூஸில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த தனது மகளின் புகைப்படத்தை எடுத்து, ஆன்லைனில் பகிர்ந்து கொண்டார்.


64.கேள்வி = புகையிலை வரலாறின் சுருக்கம் என்ன?

64.பதில் ⏬

8000 ஆண்டுகளுக்கு முன்பு பூர்வீக அமெரிக்கர்களால் பயிரிடப்பட்ட புகையிலை, 15 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் மூலம் ஐரோப்பாவிற்கு வந்தது, மெல்ல 16 ஆம் நூற்றாண்டில் மத்திய அமெரிக்காவிற்கு வந்தது, 17 ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் புகையிலை பயிரிடப்பட்டு உலகளாவிய புகையிலை வர்த்தகத்தை நிறுவுவதற்கு பங்களித்தது.

65.கேள்வி = அறிவியல் உலகில் எந்த துகள் “பச்சோந்தி”என்று அழைக்கப்படுகிறது?

65.பதில் = துகள் இயற்பியலின் நிலையான மாதிரியின்படி (Standard Model of Particle Physics) மூன்று வகையான நியூட்ரினோ உள்ளன. அவை,

*எலக்ட்ரான் நியூட்ரினோ (Electron Neutrino)
*மியூவான் நியூட்ரினோ (Muon Neutrino)
*டாவ் நியூட்ரினோ (Tau Neutrino)

பிரபஞ்சத்தில் ஒலியின் வேகத்தில் செல்லும் போது நியூட்ரினோக்கள் தனது நிலையை "பச்சோந்தி" (Chameleon) போல மாற்றிக் கொள்கிறது என்று நிறுவிய ஜப்பான் விஞ்ஞானி தகாகி கஜிதா மற்றும் கனடா விஞ்ஞானி ஆர்த்தர் மெக்டொனால்டு ஆகிய இருவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு 2015 இல் வழங்கப்பட்டது.


66.கேள்வி = பொதுக்கருத்து வில்லனாக சித்தரித்தாலும், முதலாம் உலகப் போர் வெடிப்பதற்கு முன் முடிந்த வரை அமைதியைக் காக்க விரும்பியவர்களில் முக்கியமானவர், இரண்டாம் உலகப் போரின் போது இறந்தார். அவர் யார்?

66.பதில் = கடைசி ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கைசர் வில்லியம் (Kaiser Wilhelm II) தன்னால் இயன்றவரை அமைதி காக்க முயற்சித்தார் ஆனால் களச் சூழல் அவரை போரில் ஈடுபடத் தூண்டியது.



67.கேள்வி = கின்னஸ் உலக சாதனை நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?

67.பதில் = துபாய்

68.கேள்வி = Joseph Stalin - Engelsina Markizova புகைப்படத்தின் வரலாற்று பின்னணி என்ன?

68.பதில் = 1936 இல் Joseph Stalin, மலர்க்கொத்துடன் Engelsina Markizova என்கிற சிறுமியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மக்கள் மத்தியில் அவரை ஒரு கவர்ச்சியான தலைவராக சித்தரித்தது. எதிர்பாராதவிதமாக, 1938 இல் சிறுமியின் பெற்றோர் "ஜப்பானிய உளவாளிகள் மற்றும் ட்ரொட்ஸ்கி ஆதரவாளர்கள்" என்று முத்திரை குத்தப்பட்டு Great Purge (1936-1938) காலகட்டத்தின் போது ரஷ்யா அரசால் கொல்லப்பட்டனர்.


69.கேள்வி = Super Power என்ற சொல்லை உருவாக்கியவர் யார்?

69.பதில் = 1944 இல் "The Superpowers: The United States, Britain and the Soviet Union - Their Responsibility for Peace" என்ற நூலில் Super Power என்ற சொல்லை பேராசிரியர் வில்லியம் டி.ஆர்.பாக்ஸ் நிறுவினார்.


70.கேள்வி = "ஹரிஜன்" என்ற வார்த்தையை உருவாக்கியவர் யார்?

70.பதில் = வட இந்தியா பக்தி இயக்கத்தை சேர்ந்த நரசிங்க மேத்தா. 

71.கேள்வி = இந்தியாவில் தனி நபர் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் வங்கி எது?

71.பதில் = இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank - IOB).


72.கேள்வி அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா எந்த ஆண்டில் 1 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) எட்டியது? 

72.பதில் ⏬

*1970 - அமெரிக்க  
*1998 - சீனா 
*2007 - இந்தியா

73.கேள்வி = இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளுக்கும் (Big 3 = Germany, Italy, Japan) நேச நாடுகளுக்கும் (Big 3 = USA, USSR, UK) இடையே கடும் சண்டை நடந்தது. அந்த நாடுகள் ஏன் அச்சு நாடுகள் என்று அழைக்கப்பட்டன?

73.பதில் = 1930 களில் ஹங்கேரியின் பிரதமர் கோம்போஸ் ஐரோப்பிய சக்தியின் அச்சு ரோமில் இருந்து பெர்லின் வரை நீடிக்க வேண்டும் என்று விரும்பினார். கோம்போஸ் கூறிய “அச்சு” என்ற சொல்லின் அடிப்படையில், 1936 இல் ஜெர்மனியும் இத்தாலியும் “ரோம்-பெர்லின் அச்சு” என்கிற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பின்னர், இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி பெர்லின்-ரோம் ஒப்பந்தம், ஒரு தடையாக இல்லாமல், அமைதியை விரும்பும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு கூட்டு அச்சாக செயல்படும் என்றார். 1936 இல் முசோலினியின் அச்சுக் கருத்தை முன்னிலைப்படுத்தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளிவந்தது. 1940 இல் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் முதன்முதலில் "அச்சு" என்ற சொல்லை பயன்படுத்த தொடங்கினார். இதுவே இரண்டாம் உலகப் போரில் (1939-1945) ஜெர்மனி, இத்தாலி மற்றும் அதன் கூட்டணி நாடுகள் "அச்சு நாடுகள்" என்று அழைக்கப்படலாயிற்று.


74.கேள்வி = நடிகர் மற்றும் அரசியல்வாதி எம்.ஜி.ஆர் முரண் பற்றி சொல்லவும். 

74.பதில்  ⏬

*நம் நாடு (1969) திரைப்படத்தில் அரசியல் தலைவர் வேடத்தில் நடித்தார் (அண்ணா மறைந்த பிறகு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது).
*திரையில் "ஏழை" குழந்தைகளுக்கு கல்வி வேண்டும் என்பார் (ஆட்சியில் Management Quota மூலம் கல்வியை வணிகத் தொழில் ஆக்கினார்).
*திரையில் கொலைக்காரனாக நடித்ததில்லை (ஆட்சியில் போராளிகளை சுட்டு கொன்றார்).
*திரையில் பண்ணையார்களை எதிர்த்தார் (ஆட்சியில் பண்ணையாளர்களை வாழ வைத்தார்).
*திரையில் பக்திமான் வேடத்தில் நடித்ததில்லை (ஆட்சியில் பக்திமானாக வாழ்ந்தார்).
*திரையில் குடிக்காரனாக நடித்ததில்லை (ஆட்சியில் டாஸ்மாக்கை நிறுவினார்).

75.கேள்வி = 2008 இல் மரபியலாளர்களால் (Geneticists) அடையாளம் காணப்பட்ட முதல் இந்தியரின் பெயர் என்ன?

75.பதில் = விருமாண்டி

மரபியல் நிபுணர் ஸ்பென்சர் வெல்ஸ் முன்னெடுப்பில் ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சி கழகம் மற்றும் மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், இந்தியாவில் உள்ள பல மனிதர்களிடம் டி.என்.ஏ மாதிரிகளை சேகரித்து, ஆராய்ச்சி மூலம் ஒரே மாதிரியான மரபணுக்களை பகிர்ந்து கொள்ளும் மனிதனை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்தியது. அதன் அடிப்படையில், 2008 இல் பேராசிரியர் ராமசாமி பிச்சப்பன் மற்றும் ஆராய்ச்சி குழுவினர் விருமாண்டி என்ற மனிதனின் டி.என்.ஏவை பரிசோதித்து, எம் 130 என்ற மரபணுவை கண்டுபிடித்தனர். விருமாண்டி என்பவரின் மரபணு குறிப்பானது 70,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நிகழ்ந்த முதல் மனித குடியேற்றத்தின் அடையாளமாகும். ஆப்பிரிக்க மனிதர்களின் மரபணுக்களோடு ஒத்துப் போகிற M130 தான் இந்தியாவில் காணப்படும் பழமையான மரபணு குறிப்பான்.


வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -