Chocks: இன்று ஒரு தகவல்

Monday, February 12, 2024

இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல்
இன்று ஒரு தகவல் - 1

பிரதமர் வாஜ்பாய் வற்புறுத்திய போதிலும் ஜனாதிபதி K.R.நாராயணன் சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குவதை தடுத்தார். அவருக்கு பின் பிரதமர் வாஜ்பாய் ஆதரவில், ஜனாதிபதியான A.P.J.அப்துல் கலாம், காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை புறக்கணித்து, 2003 இல் இந்திய நாடாளுமன்றத்தில் மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு எதிரே நாடாளுமன்றத்தில் சாவர்க்கர் உருவப்படத்தைத் திறந்து வைத்தார்.

விவரணை 

President Ignores Opposition, Unveils Savarkar Portrait


இன்று ஒரு தகவல் - 2

13 ஆம் நூற்றாண்டில், ஆசியாவிற்கு பயணம் செய்த இத்தாலிய வணிகர் மார்கோ போலோ, தனது "மார்கோ போலோவின் பயணங்கள்" புத்தகத்தில் ஆசியாவின் செல்வமான மிளகு (Spices) பற்றி குறிப்பிட்டார். இந்த வெளிப்பாடு, இலாபகரமான மிளகு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக, ஆசியாவிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு நேரடி கடல் வழிகளை நாட ஐரோப்பியர்களுக்கு உந்து காரணிகளில் ஒன்றாக இருந்தது.

விவரணை 

History of Spices


இன்று ஒரு தகவல் - 3

*ATM பயன்பாட்டை கண்டுபிடித்தவர்  John Shepherd Barron (Indian born Scottish Inventor).

*1967  இல் உலகில் முதன்முதலாக ATM பயன்பாட்டை அறிமுகம் செய்த வங்கி Barclays, லண்டன். 

*1987  இல் இந்தியாவில் முதன்முதலாக ATM பயன்பாட்டை அறிமுகம் செய்த வங்கி HSBC, மும்பை.

ஆறு இலக்கங்கள் கொண்ட ATM குறியீட்டை (PIN) வடிவமைத்து தனது மனைவியிடம் பரிசோதனை செய்தார் John Shepherd Barron. பரிசோதனையில் தனது மனைவி எளிதாக நினைவில் வைத்திருக்கும் எண்களின் நீளம் நான்கு என்பதைக் கண்டறிந்தார். இதன் விளைவாக, நான்கு இலக்க குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டு, அதுவே உலகத் தரமாக (Standard) மாறியது.

விவரணை 

History of ATM PIN


இன்று ஒரு தகவல் - 4

புளிய மரத்தின் (Tamarind Tree) கடினத்தன்மை காரணமாக, இது கறிக் கடைகளில் வெட்ட பயன்படும் மரக்கட்டையாக பயன்படுத்தப்படுகிறது.

இன்று ஒரு தகவல் - 5

இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டம் 1939-1945. அப்போது, பர்மா, மலேசியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் பிரிட்டிஷாரின் காலனி நாடுகளாக இருந்தது. பிரிட்டிஷாரின் உணவு உள்ளிட்ட போர்க்கால தேவைகளை பூர்த்தி செய்வதே காலனி நாடுகளுக்கு பிரதான  வேலையாக இருந்தது. பர்மாவில் அரிசி உற்பத்திக்கும், மலேசியாவில் ரப்பர் உற்பத்திக்கும், இலங்கையில் தேயிலை உற்பத்திக்கும் தமிழர்கள் தான் பெருமளவில் கூலி வேலை செய்து வந்தனர். இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் தமிழர்களை ஓய்வின்றி வேலை செய்ய கொடுமைப்படுத்தி, பர்மாவில் உற்பத்தியான அரிசியையும், மலேசியாவில் உற்பத்தியான ரப்பரையும், இலங்கையில் உற்பத்தியான தேயிலையும் அதிகளவு தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்தது பிரிட்டிஷ்.

இதற்கிடையே, இரண்டாம் உலகப்போரில் ஆசியாவில் ஜப்பானின் கைகள் ஓங்கியது. இதன் பின்னணியில், பர்மாவையும் மலேசியாவையும் 1941-1945 வரை ஆக்கிரமித்து பிரிட்டிஷாரை கதறச் செய்தது ஜப்பான். இதையொட்டி, உணவு உற்பத்திக்கு பர்மாவை நம்பி இருந்த பிரிட்டிஷ், செய்வதறியாமல் கையை பிசைந்து நின்றது. அப்போது பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு சதித்திட்டம் தீட்டினார். அதன்படி, இந்தியாவின் வங்காளத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த அரிசியையும் போர் வீரர்களுக்கு உணவளிக்க தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்து கொ‌ண்டது பிரிட்டிஷ். வின்ஸ்டன் சர்ச்சில் அரசியல் கொள்கையால் வங்காளத்தில் செயற்கை பஞ்சம் உருவானது. வின்ஸ்டன் சர்ச்சில் என்ற மனிதர் செய்த பேரழிவு (Man Made Disaster) வங்காளம் போதிய உணவின்றி கதிகலங்கியது.

ஜப்பான் ஆக்கிரமிப்பால் பர்மாவில் இருந்து வங்காளத்திற்கு வர வேண்டிய அரிசி இறக்குமதியும் தடைப்பட்டது. மேலும், பிரிட்டிஷாரின் அரிசி மறுப்புக் கொள்கை (Denial Policy of Rice) காரணமாக வங்காளத்தில் இருந்த அரிசி அடுக்குகள் (Stacks) இடிக்கப்பட்டது, வங்காள கடலோர மாவட்டங்களில் இருந்து அதிகப்படியான அரிசி அகற்றப்பட்டது மற்றும் வங்காளத்தில் உற்பத்தியான அரிசியை ஜப்பான் களவாட கூடாது என்றும், வங்காளத்தினரும் அரிசியை மறைத்து எடுத்து செல்லக் கூடாது என்றும் போக்குவரத்தை மறுப்பதற்காக வங்காளத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கான படகுகள் அகற்றப்பட்டது. மொத்தத்தில், வங்காளத்தின் அனைத்து அரிசி இயக்கத்தையும் பிரிட்டிஷ் நிறுத்தியது.

1943 இல் வங்காள பஞ்சம் (Bengal Famine) என்ற மோசமான பஞ்சத்தால் சுமார் 30 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். இப்பஞ்சத்திற்கு 1940 களில் ஏற்பட்ட வட இந்தியப் பெருங்கடல் சூறாவளியை பிரிட்டிஷ் காரணமாக கூறினாலும், வின்ஸ்டன் சர்ச்சில் அரங்கேற்றிய சதித்திட்டம் தான் முதன்மையானது. அரிசி மறுப்புக் கொள்கை அடிப்படையில் பிரிட்டிஷ் செயல்பட்டதும், வங்காள பஞ்சம் குறித்து "Indians are reproducing like rabbits and how come Mahatma Gandhi is still alive if the shortages were so severe?" என்று வின்ஸ்டன் சர்ச்சில் பேசியதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

விவரணை

Colonial Bio-politics and the Great Bengal Famine of 1943


இன்று ஒரு தகவல் - 6

ஐயர்கள் சமஸ்கிருதத்தில் கொச்சையான மந்திரங்களை உச்சரித்து இந்து திருமணங்களை நடத்தி வைக்கிறார்கள். மற்றவர் திருமணங்களில் சொல்லப்படும் கொச்சையான மந்திரங்கள், ஐயர்கள் வீட்டு திருமணங்களில் சொல்லப்படுவதில்லை, மாறாக அவர்களுக்கு நேர்மறை மந்திரங்கள். மற்றவர் திருமணங்களை நடத்தி வைக்கும் ஐயர்கள் தங்கள் வீட்டு திருமணங்களை நடத்தி வைப்பதில்லை, மாறாக அவர்களுக்கு சாஸ்திரிகள் நடத்தி வைப்பர்.

இன்று ஒரு தகவல் - 7

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முனிரத்னா ஆனந்தகிருஷ்ணன் (Munirathna Anandakrishnan), உயர்கல்விக்கான நுழைவு தேர்வை ரத்து செய்து, ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை முறையை அறிமுகப்படுத்திய தி.மு.க அரசின் கொள்கை வரைமுறைக்கு (Policy Formation) வழிகாட்டியாக இருந்தார்.

இன்று ஒரு தகவல் - 8

2015 இல் சென்னையில் செயற்கை வெள்ளத்தில் சுமார் 400 பேர் இறந்தனர். குறிப்பாக மின்சார பாதிப்பால் MIOT மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 18 பேர் இறந்தது, 25 லட்சம் மக்களின் வீடுகள் தண்ணீரில் மூழ்கியது என்று சென்னையே ஸ்தம்பித்து நின்றது! 

2015 சென்னை வெள்ளம் குறித்து 2016-2017 காலகட்டத்தில் Comptroller and Auditor General of India (CAG) வெளியிட்ட அறிக்கையில் கூறியது யாதெனில்  "Due to all these factors, we conclude that the flooding was man-made in terms of the CWC guidelines". சுருக்கமாக சொன்னால், ஜெயலலிதாவின் ஆட்சி நிர்வாகத்தை குற்றம் சாட்டி 2015 சென்னை வெள்ளம் குறித்து வெளியான CAG அறிக்கையை முழுமையாக வாசிப்பதன் மூலம் Women Made Disaster குறித்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது.

விவரணை

Performance Audit of Flood Management in Chennai


இன்று ஒரு தகவல் - 9

காவிரி ஆறு தலைக்காவேரியில் இருந்து பாய்ந்து காவிரிப்பூம்பட்டினம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. அதாவது, காவிரி ஆறு குடகு மலையில் இருந்து தொடங்கி சுமார் 800 கிலோமீட்டர் பாய்ந்து வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிறது. "காவிரி புகும் பட்டினம்" என்ற பெயர் மருவி "காவிரிப்பூம்பட்டினம்" எனப் பெயர் பெற்றது.

தமிழர் நாகரீகத்தை பறைசாற்றும் சிலப்பதிகாரம் உட்பட பல்வேறு தமிழ் இலக்கியங்களில் காவிரிப்பூம்பட்டினம் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. காவிரி என்றால் காவிரி ஆற்றை குறிக்கும். பட்டினம் என்றால் கடற்கரை நகரத்தை குறிக்கும். தமிழ்நாட்டில் கடல்சார் தொல்லியல் ஆராய்ச்சிக்கு காவிரிப்பூம்பட்டினம் பிரசித்தி பெற்றது ஆனால் தொடர் ஆராய்ச்சிக்கு பல்வேறு தடங்கல்கள் இருந்து வருவது வேதனைக்குரியது.

இன்று ஒரு தகவல் - 10

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை பொறுத்த வரையில் அதன் சந்தை மதிப்பை (Share Price) விட சந்தை மூலதனமே (Market Capitalization) முக்கியத்துவம் வாய்ந்தது. அவை Large Cap, Mid Cap, Small Cap என மூன்று வகைப்படும்.

இன்று ஒரு தகவல் - 11

ஒரு இந்திய பிரதமர் ஊடகங்களை நேரடியாக (Live) சந்தித்த கடைசி நாள் 03 ஜனவரி 2014. அவர் தான் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங். அன்றைய கடைசி பேட்டியின் போது அவர் சொன்னது "History will be kinder to me than the Media". 

இன்று ஒரு தகவல் - 12

அரியணை அரசியலில் இருந்து காமராஜரை ஒழித்து கட்டியது ராஜாஜி கோஷ்டி அல்ல, பக்தவத்சலம் கோஷ்டி தான்.

இன்று ஒரு தகவல் - 13

"திராவிடர்" என்ற இனம் சார்ந்த கருத்தியல் சொல்லாடல் தான் தமிழருக்கு, கன்னடருக்கு, தெலுங்கருக்கு, மலையாளிக்கு  பாதுகாப்பு, அதுவே திராவிட நாட்டுக்கு நிலவரணாகும். ஒரு வேளை 20 ஆம் நூற்றாண்டில் நம் அரசியல் முன்னோர்கள் "திராவிடர்" என்ற சொல்லுக்கு பதிலாக "தமிழர்" என்ற சொல்லாடலை பயன்படுத்தி அரசியல் செய்திருந்தால், அரசியல் அதிகாரத்தை பொறுத்த வரையில் நாம் இன்றைய நிலையை அடைந்திருக்க முடியாது. நமது சமதர்ம இலக்கை அடைய "திராவிடம்" தான் குறியீடு. 

இனம், நிலம், மொழி, சமூக நீதி என நமக்கு அரணாக நிற்கும் "திராவிடம்" என்ற சித்தாந்தம் அரசியல் இயங்குதளமாக இருக்கும் வரை, ஆரிய வந்தேறிகளை எதிர்க்க திராவிடமே Concrete Ideology. திராவிடம் என்ற கருத்தியல் தான் ஆரியர்களை "வந்தேறிகள்" என்று கதறவிடுகிறது. "ஆரியர் - திராவிடர்" போர் என்பதில் உள்ள திராவிடர் என்ற இன (Ethnicity - Your Race) அரசியல் சொல்லாடலுக்கு பதிலாக "ஆரியர் - தமிழர்" போர் என்றாக்கி தமிழர் என்ற அடையாள (Identity - Who You Are) அரசியலை நம் அரசியல் முன்னோர்கள் கைக்கொண்டு இருந்தால் இந்திய ஒன்றியத்தில் நம்முடைய உரிமைகளை நாம் என்றோ இழந்திருப்போம். ஏனெனில், "இனப்போர்" என்பது வலுவிழந்து மாநில அளவிலான பிரச்சனையாக சுருங்கி இருக்கும். 

நமக்கு கிடைத்த பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் பற்பல திராவிட தலைவர்கள் "திராவிடம்" என்ற இன அரசியலை முன்னெடுத்த காரணத்தால் தான் நாம் இன்று மற்ற மாநிலங்களை விட குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி இருக்கிறோம். இன அரசியலை கைவிட்டு அடையாள அரசியலை கைக்கொண்ட பிற மாநிலங்களின் வரலாறை படித்து பாருங்கள், உண்மை உங்களுக்கு புரியும். எடுத்துக்காட்டாக, ஆரிய சனாதனத்தை எதிர்த்து பெளத்தம் மற்றும் சமணம் கொள்கைகளை தந்த பீகார் மாநிலம், சுதந்திர இந்தியாவின் தொடக்கத்தில் பற்பல மாநிலங்களை விட முன்னேறிய மாநிலமாக இருந்தது. ஆனால் இன அரசியலை கைவிட்டு அடையாள அரசியலை "பீகாரிகள்" விருப்பமாக கைக்கொண்ட பிறகு வேகமாக வீழ்ச்சி அடைய தொடங்கி இன்று இந்தியாவின் மிக பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.

இன்று ஒரு தகவல் - 14

இன்று பால் பண்ணை, கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை, கரும்பு பண்ணை, வேளான் பண்ணை என்று பல்வேறு வர்த்தக பண்ணைகள் இருப்பது போல "அடிமை ஆட்சிமுறை" தழைத்தோங்கிய காலக்கட்டத்தில் மேற்கு உலகில் (குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா) அடிமை விற்பனை பண்ணை (Slave Trading Farm) இருந்தது.

இன்று ஒரு தகவல் - 15

2000 களில் Mysore Mallige Scandal மற்றும் DPS MMS Scandal போன்ற ஆபாச காணொளிகள் (Porn Video's) ஏற்படுத்திய தாக்கங்கள் இந்தியாவில் கணினி குற்றங்கள் துறை மற்றும் அதன் சட்டங்களை (Cyber Crime Law) மேம்படுத்த அடிகோலியது. காலப்போக்கில், Porn Video's வணிக மயமான பின் இன்று "நிதி மோசடிகள்" Cyber Crime துறையின் தேவையை அதிகரித்துள்ளது.

இன்று ஒரு தகவல் - 16

பழனி கோவிலில் நவபாஷாண முருகன் சிலையை செய்தவர் போகர் சித்தர். அவருக்கு உறுதுணையாக இருந்தவர் புலிப்பாணி சித்தர். இந்த பின்னணியில், பழனி கோவிலில் கருவறை பூஜைகளை செய்து வந்த தமிழ் பூசாரிகள், புலிப்பாணி சித்தர் வகையறாவை சேர்ந்த சைவ பண்டாரங்கள் ஆவர். 

நாயக்கர் ஆட்சியில், பார்ப்பனரான தளவாய் ராமப்பா அய்யன், பழனி கோவிலுக்கு வந்த போது தமிழ் பூசாரிகள் கையில் பிரசாதம் வாங்க கூடாது என்று எண்ணினார். அதையொட்டி, சதித்திட்டம் தீட்டிய ராமப்பா அய்யன் ஆசை காட்டி தமிழ் பூசாரிகளை பழனி கோவிலில் இருந்து விரட்டிவிட்டு சமஸ்கிருத பூஜைகளை செய்ய ஏதுவாக ஆரிய பார்ப்பனர்களை கோவிலில் பணிக்கு அமர்த்தினார். இது ஒரு கட்டுக்கதை அல்ல, நடந்த கதை. இதற்கு, ஆதாரமாக செப்பு பட்டயங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விவரணை

பார்ப்பனர்களால் திருடப்பட்ட பழனி மலைக்கோயில்


பின் குறிப்பு - பிரலமான தலைவருக்கு தங்க பஸ்பம் செய்ய நவபாஷாண முருகன் சிலையை "சிலர்" சுரண்டி எடுத்துவர அதனால் சுருங்கி போன முருகன் சிலையை மாற்றி வேறொரு சிலையை வைத்ததாகவும், கொடைக்கானலில் அறியப்படாத ரகசிய இடத்தில் போகர் சித்தர் இன்னொரு முருகன் சிலையை வைத்துள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.

இன்று ஒரு தகவல் - 17

தனக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்களை தாமஸ் ஆல்வா எடிசன் மெருகேற்றி விஞ்ஞான உலகில் பிரபலமடைந்தார். பிறகு தாமஸ் ஆல்வா எடிசனால் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்களை அடுத்தடுத்த ஆராய்ச்சியாளர்கள் மெருகேற்றினர்.

தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிப்பு மற்றும் அதன் வளர்ச்சி ⏬

*Quadruplex Telegraph (Users Need Morse Code) = Thomas Alva Edison (1874)

*Telephone (Users No Need Morse Code) = Alexander Graham Bell (1876)

*Kinetoscope (No Projector) = Thomas Alva Edison / W. K. L. Dickson (1891)

*Cinematograph (With Projector) = Lumiere Brothers (1895)

*Phonograph (Tinfoil Paper) = Thomas Alva Edison (1877)

*Gramophone (Wax Based) = Chichester Bell / Charles Sumner Tainter (1886)

*Direct Current (One Direction) = Thomas Alva Edison (1878)

*Alternate Current (Changes Direction) = Tesla (1888)

உலகின் மிக முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவரான  தாமஸ் ஆல்வா எடிசன், நிக்கோலா டெஸ்லாவின் Alternate Current (AC) கண்டுபிடிப்பை தோல்வியடைய செய்ய பெரும் முயற்சி செய்தார். இருவருக்குமான போராட்டத்தை "War of Currents" என்று ஆய்வறிஞர்கள் அழைப்பர்.

தாமஸ் ஆல்வா எடிசன் உட்பட பலரும் எவ்வளவோ மின்சாதனங்களை கண்டுபிடித்து இருந்தாலும் இன்று அதனை எல்லாம் இயக்குவது நிக்கோலா டெஸ்லாவின் கண்டுபிடிப்பான AC தான். உலகின் 80% மின்சாதனங்கள் நிக்கோலா டெஸ்லாவின் AC தான் இயக்குகிறது. தனது Free Energy, 3-6-9 போன்ற சில ஆராய்ச்சிகள் முடிவு பெறாமல் சர்சைக்குரிய வகையில் டெஸ்லா மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஒரு தகவல் - 18

சதி லீலாவதி (1936) திரைப்படம் மூலம் துணை நடிகராக அறிமுகமான M.G.R, ராஜகுமாரி (1947) மூலம் கதாநாயகனாக ஏற்றம் பெற்றார். தொடர்ந்து மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மலைக்கள்ளன், புதுமைப்பித்தன், அரசிளங்குமரி, காஞ்சித் தலைவன் மூலம் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார். மேற்கண்ட திரைப்படங்கள் கலைஞரின் கைவண்ணத்தில் M.G.R கதாநாயகனாக நடித்தவை ஆகும். புதுமைப்பித்தன் திரைப்படத்தில் தான் M.G.R அவர்களுக்கு "புரட்சி நடிகர்" பட்டத்தை கலைஞர் சூட்டினார். 

திரையுலகில், சூப்பர் ஸ்டாரையும் உலக நாயகனையும் செதுக்கியது கே.பாலசந்தர் என்று சொல்வது போல, அந்த இரு திரை நட்சத்திரங்களுக்கு முன்னவர்களான நடிகர் திலகத்தையும் புரட்சி நடிகரையும் செதுக்கியது கலைஞர் என்று சொன்னால் மிகையாகாது. சிலை அழகாக காட்சியளிக்க சிற்பியின் கைவண்ணம் தானே முக்கியம். இங்கே சிலையாக நடிகர்கள், செதுக்கிய சிற்பியாக கலைஞர்.

இன்று ஒரு தகவல் - 19

சுதந்திர தாகம் கொண்ட வ.உ.சி அவர்கள், இந்திய முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை திரட்டி, பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்திற்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தை அமைக்க தனது சகாக்களுடன் கை கோர்த்தார். 1906 இல் வ.உ.சியால் தொடங்கப்பட்ட சுதேசி கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கப்பல்களை இயக்கியது. ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் அரசு, வ.உ.சியை சிறைக்கு அனுப்பிய போது அவரது சகாக்கள் பிரிட்டிஷ் அரசின் அழுத்தத்தை கடுமையாயக எதிர்த்து போராடாமல், 1911 இல் சுதேசி கப்பல் நிறுவனத்தை கலைத்து பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்திற்கே விற்றனர். இதனால், காந்தியின் சுதேசி இயக்கத்திற்கே முன் மாதிரியாக சுதேசி திட்டத்தை முன்னெடுத்த வ.உ.சியின் முயற்சி வீணானது. இதனை அறிந்த உடைந்து போன வ.உ.சியும் சிறையில் இருந்து வந்த பிறகு மளிகை கடை வைத்து வாழ்ந்தார்.

இப்போது, சிறை கம்பிகளுக்கு பின்னால் இருக்கும் உமர் காலித், அவரது சக நண்பராக விளங்கிய ஷெஹ்லா ரஷீத் போராளியாக இருந்து துரோகியாக மாறி இருப்பதை பார்க்கும் போது உடைந்து போய் விடுவார். இந்நாட்டின் இரத்த சரித்திரத்தில் எத்தனையோ போராளிகள்! எத்தனையோ துரோகிகள்!

இன்று ஒரு தகவல் - 20

1990 களின் பிற்பகுதியில், John Antioco நடத்தி வந்த Blockbuster நிறுவனம் அமெரிக்காவில் Video Casette (VHS Tapes - Video Home System Tapes) வாடகை வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தியது. தாமதக் கட்டணங்கள் மூலம் கோடிக்கணக்கான வருவாய் ஈட்டியது. 

Blockbuster நிறுவனத்தின் தாமதக் கட்டணத்தில் ஏற்பட்ட ஏமாற்றமான அனுபவத்திற்கு பிறகு, Marc Randolph உடன் இணைந்து Reed Hastings Netflix நிறுவனத்தை நிறுவினார். வளர்ந்து வரும் DVD (DVD - Digital Versatile Disc) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொண்ட Netflix நிறுவனம், Video Casette பதிலாக வாடிக்கையாளர்களுக்கு Video Disc அனுப்பியது. Blockbuster நிறுவனத்தில் இருந்து வேறுபடுத்த, தாமதக் கட்டணங்களை நீக்கி வாடிக்கையாளர்கள் விரும்பும் வரை Video Disc வைத்திருக்க அனுமதிக்கும் வகையில் கவர்ச்சிகரமான சந்தாவை அறிமுகம் செய்தது Netflix நிறுவனம்.

2000 வாக்கில், வளர்ந்து வரும் Netflix நிறுவனத்தை $50 மில்லியன் தொகைக்கு வாங்கி கொள்ளுமாறு Blockbuster நிறுவனத்திடம் Netflix நிறுவனம் கோரியது. "ஒரு சிறு வணிக நிறுவனத்தை வாங்க விருப்பமில்லை" எனக்கூறி Netflix நிறுவனத்தின் கோரிக்கையை Blockbuster நிறுவனம் நிராகரித்து. இந்நிலையில், ஆரம்ப சவால்களையும் Blockbuster நிறுவனத்தின் நிராகரிப்பையும் சமாளித்து, சந்தாதாரர்களை சீராக பெற்று Netflix நிறுவனம் வளர தொடங்கியது.

ஒரு கட்டத்தில், Blockbuster நிறுவனம் Online சேவையில் நுழைந்து பின்னடைவை சந்தித்தது, தாமதக் கட்டணங்களை கைவிட்டாலும் Netflix நிறுவனத்தின் சந்தா மாதிரியுடன் போட்டியிட தவறியது. இறுதியில், 2010 இல் தோல்வியுற்ற உத்திகள் மற்றும் மோசமான நிதிநிலை காரணமாக Blockbuster நிறுவனம் திவால் ஆனது. கிட்டத்தட்ட 5,800 கடைகளை  கொண்டிருந்த Blockbuster, இப்போது அமெரிக்காவில் ஒரே ஒரு கடையை மட்டுமே கொண்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, DVD வாடகையில் இருந்து தொடங்கி இன்று Streaming OTT தொழில்நுட்பத்தின் மூலம் Netflix நிறுவனம் தனிக்காட்டு ராஜாவாக செழித்து வருகிறது.

விவரணை

Blockbuster laughed at us. Now there's one left - Netflix Co-founder


இன்று ஒரு தகவல் - 21

நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்கள் நிறுவப்படுவதற்கு முன்பு, பண்டைய சமூகங்களின் இயற்கை வழிபாட்டில் சூரியன் முக்கிய பங்கு வகித்தது. இதன் விளைவாக, பிரமிடுகள், சிச்சென் இட்சா, ஸ்டோன்ஹெஞ்ச், அங்கோர் வாட், மச்சு பிச்சு, வாலே டெய் டெம்ப்லி போன்ற கட்டமைப்புகள் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் பற்றிய அறிவியல் புரிதலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. பண்டைய எகிப்து, மாயன், கெமர், இன்கா போன்ற நாகரிகங்களின் கட்டிடக்கலை நுணுக்கங்கள் அவற்றின் கட்டுமானத்தில் வானியல் நடைமுறைப் பயன்பாட்டை நிரூபிக்கின்றன. 

தொல்லியல் சார்ந்த வானியல் துறை (Archaeoastronomy) என்பது நட்சத்திரங்களை பற்றிய ஆய்வு மற்றும் பழங்கால கட்டமைப்புகளுடன் அவற்றின் சாத்தியமான தொடர்புகளை உள்ளடக்கியதாகும். பண்டைய நாகரிகங்கள் எவ்வாறு வானியல் நிகழ்வுகளைப் புரிந்துகொண்டன, அவற்றைப் பயன்படுத்தின மற்றும் வானவியலைத் தங்கள் கலாச்சாரங்களில் ஒருங்கிணைத்தன என்பதை இந்த பல்துறை ஆய்வு ஆராய்கிறது. இருப்பினும், மதங்களின் வளர்ச்சிக்கு பிறகு, வானியல் அறிவியலின் முக்கியத்துவம் குறைந்து, கடவுள் சார்ந்த ஜோதிடம் மற்றும் போலி அறிவியல் நம்பிக்கைகளுக்கு வழிவகுத்தது.

இன்று ஒரு தகவல் - 22

இலங்கை சுதந்திரக் கட்சி, இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும், இது 1951 இல் பண்டாரநாயக்காவால் நிறுவப்பட்டது. 1959 இல் பிரதமர் பண்டாரநாயக்கா பௌத்த பிக்கு ஒருவரால் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்க 1960 இல் நடைபெற்ற இலங்கைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று உலகின் முதல் பெண் பிரதமர் ஆனார். இவர்களின் மகள் சந்திரிகா குமாரதுங்கா பின்னர் இலங்கையின் ஜனாதிபதியானார். 1999 இல் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் சந்திரிகா குமாரதுங்கா உயிர் பிழைத்தார், இதன் விளைவாக வலது கண்ணை இழந்தார்.

பின்னர், சந்திரிகா குமாரதுங்காவின் வலதுகரமாக இருந்த மகிந்த ராஜபக்சே இலங்கை அரசுத் தலைவராக இருந்துள்ளார். இவருடைய ஆட்சிக் காலத்தில் தான் ஈழப் போராட்டங்களில் பெரும் பகுதி இடம் பெற்றது, இறுதியில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தது. தற்போது, ​​மைத்திரி பால சிறிசேன இலங்கை சுதந்திரக் கட்சிக்கு தலைமை தாங்குகிறார், மஹிந்த ராஜபக்ச இலங்கை பொதுஜன பெரமுனவின் தலைவராக செயற்படுகிறார்.

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

No comments:

Post a Comment

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -