Chocks: ஒரு காலத்தில் மதுரை

Thursday, February 15, 2024

ஒரு காலத்தில் மதுரை

ஒரு காலத்தில் மதுரை
முகவுரை 

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் மதுரை தான் Textile & Chemical Industry Hub. 1892 இல் தொடங்கப்பட்ட ஹார்வி மில் என்ற மதுரா மில் என்ற மதுரா கோட்ஸ் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மில்லாக இருந்தது. அக்கால ஹார்வி மில் தொழிற்சங்க போராட்டங்கள் இடதுசாரிய தொழிலாளர் போராட்டங்களுக்கு முன்மாதிரியாக அமைந்தது.

1688 இல் Corporation ஆக்கப்பட்ட சென்னைக்கு பிறகு 1971 இல் அன்றைய முதல்வர் கலைஞரால் மதுரை இரண்டாவது Corporation ஆக்கப்பட்டது. 1981 இல் எம்.ஜி.ஆரால் கோவை மூன்றாவது Corporation ஆக்கப்பட்டது. 1990 கள் வரை தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக இருந்த மதுரை பின்னர் என்ன ஆனது? ஏன் வளர்ச்சி மங்கி போனது?

எம்.ஜி.ஆர் ஆட்சியில்

1980 கள் முதல் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தொண்டர்கள் போர்வையில் குண்டர்களின் தலையீடு மதுரையில் அதிகமானது. குண்டர்கள் அரசியலில் வளர வேண்டி கந்துவட்டி தொழில் உருவானது. தமிழ்நாட்டில் காவல் நிலையத்தில் "கரை வேட்டி" நுழைய ஆரம்பித்தது எம்.ஜி.ஆரின் ஆட்சியில் தான். அதன் தொடக்கப் புள்ளியாக அமைந்த ஊர் தான் மதுரை.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் 1980 கள் தொடங்கி "பழக்கடைக்காரர், தேங்காய்க்காரர், டீக்கடைக்காரர்" என்று பற்பல தொண்டர்கள் மதுரையில் மூவேந்தர்கள் சாதி அரசியலை வளர்த்தெடுத்தனர். குண்டர்களுக்கு Local Politics செய்ய சாதி அரசியல் மிகப்பெரிய அளவில் கைக்கொடுத்தது.

ஜெயலலிதா ஆட்சியில்

1980 களில் எம்.ஜி.ஆர் ஆட்சியில்  சாதி அரசியலுக்கு குண்டர்கள் கோடு போட்டனர். 1990 களில் ஜெயலலிதா ஆட்சியில் சசிகலாவின் கணவர் நடராஜன் ரோடு போட்டார். அதாவது மூன்று சாதிகளை ஒன்றாக்கி முக்குலத்தோர் என்ற மூவேந்தர் குலமாக்கி குரு பூஜை Concept ஒன்றை அரசியலாக்கி சாதி அரசியலின் வீரியத்தை அதிகரித்தார்.

1977 முதல் 1996 (1989-1991 தவிர) வரை கிட்டத்தட்ட 17 வருடங்கள் தமிழ்நாட்டை அ.தி.மு.க தான் ஆண்டது. அதில் மதுரையை Rogue City ஆக மாற்றினர். சுயசாதி பெருமை படிப்படியாக வளர்த்தெடுக்கப்பட்டது. அதற்கு சினிமாவும் கைக்கொடுத்தது.

சினிமாவின் தாக்கம் 

மதுரையில் புத்தி மங்கிய சுயசாதி பெருமை பேசும் கூட்டம் தேவர் மகன் திரைப்படத்தில் வரும் "புள்ளக்குட்டிய படிக்க வைங்கடா" என்ற வசனத்தை மறந்து "போற்றி பாடடி" பாடலை வெறிக் கொண்டு ரசிக்க தொடங்கினர். சேர சோழ பாண்டிய வம்சமே முக்குலத்தோர் வம்சம் என்று கதைத்து மகிழ்ந்தனர்.

Liberalism காலகட்டம் 

1990 களில் பிரதமர் நரசிம்ம ராவ், நிதியமைச்சர் மன்மோகன் சிங், வர்த்தகத்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் முன்னெடுத்த Liberalisation, Privatisation and Globalisation (LPG) கொள்கை வேகமெடுத்த நேரத்தில் இங்கு முதல்வர் ஜெயலலிதா அந்த பொன்னான வாய்பை பயன்படுத்தி தமிழ்நாட்டிற்கு உரிய வளர்ச்சியை உறுதி செய்ய செயல்படவில்லை.

1991 இல் ராஜீவ் காந்தி கொல்லப்படாமல் இருந்திருந்தால், அதனால் அனுதாப அலையில் ஜெயலலிதா ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால், இங்கு கலைஞரே முதல்வர் ஆகியிருப்பார். LPG அறிமுகமான நேரத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக கலைஞர் Urban & Semi-Urban ஊர்களை சம நோக்கில் வளர்த்தெடுக்க முயன்றிருப்பார் என்று கருத இடமுண்டு.

தென் மாவட்ட தி.மு.க

தென் மாவட்ட தி.மு.க.வில் தா.கி, பி.டி.ஆர், அழகிரி, பொன்.முத்து, மூர்த்தி என்று பற்பல முகங்கள் உண்டு. கழகத்தின் தூணாக விளங்கிய தா.கி, பண்பாளராக விளங்கிய பி.டி.ஆர், தொண்டர்களின் தலைவராக விளங்கிய  அழகிரி (அதனால் பாதிக்கப்பட்டது அவரே), அன்றைய களப்பணியாளராக விளங்கிய  பொன்.முத்து, இன்றைய களப்பணியாளராக விளங்கும் மூர்த்தி.

முடிவுரை 

தலைநகர் சென்னைக்கு அடுத்த நிலையில் மதுரை இருந்திருக்க வேண்டியது. ஆனால் 2000 களுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கோவை அந்த இடத்தை பெற்று கொண்டது. அதற்கு கோவை மக்களின் அணுமுறை தான் காரணம். அங்கும் சாதி சச்சரவு நிலவுகிறது ஆனால் வளர்ச்சி என்று வரும் போது "கோவைக்காரன் கெட்டிக்காரன்" என்றால் மிகையல்ல.

வரலாற்று ரீதியாக புகழ் பெற்ற Ancient City, 1980 கள் முதல் சுயசாதி பெருமை பேச தொடங்கி, இன்றைய நவீன வளர்ச்சி தரவரிசையில் பின்தங்கியுள்ளது. சாதிய பிடிமானத்தால் புத்தி மங்கி வீழ்ந்த நகரமான மதுரையை ஓர் இரவில் மாற்ற முடியாது ஆனால் மதுரை மெல்ல மெல்ல மாற தான் வேண்டும். இப்போது இருக்கின்ற மதுரையே சிறப்பு என்று புறந்தள்ள முடியாது. கிராம மகிழ்ச்சி, நாட்டுக்கோழி குழம்பு, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி, சாதிக்கொரு நீதி என்று இருக்கும் மதுரை மாற தான் வேண்டும்.

துணுக்கு செய்தி 

மதுரை மக்கள்தொகையில் சவுராஷ்டிரா தான் அதிகம். ஆனால், அவர்களின் அரசியல் இருப்பு நாடாளுமன்ற அரசியல் வட்டத்துடன் ஒப்பிடும் போது உள்ளூர் அரசியலில் குறைவாக உள்ளது. எடுத்துக்காட்டாக, Parliament வட்டதில் N.M.R.சுப்புராமன், A.G.சுப்புராமன், A.G.S.ராம் பாபு. Local வட்டதில் S.K.பாலகிருஷ்ணன் (மேயர்), S.R.ராதா (MLA).

வாசித்தமைக்கு நன்றி. 

வணக்கம்.

No comments:

Post a Comment

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம்

பேரறிஞர் அண்ணா - அறியாதவர்களுக்கு ஓர் அறிமுகம் - Will Be Updated Shortly -